Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 1, 2019

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கான ' குரூப்-சி' பணிகள்! !!

சென்னை : மத்திய அரசு துறைகளில் 10-ம் வகுப்பு படித்தவர்களை மல்டி டாஸ்கிங் ஸ்டாப் கீழ்நிலை பணியிடங்களில் நியமிக்கும் எஸ்.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (குரூப்-சி) பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) தேர்வு-2019 மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணிகளுக்கான காலியிட விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை
இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி பார்க்கலாம்....



வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயதினை கடந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1992 மற்றும் 1-8-2001-ந்தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். சில பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு முறை:

விண்ணப்பித்தவர்கள் கணினித் தேர்வுக்கு உட் படுத்தப்படுவார்கள். தாள்1, தாள் 2 என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இ,தில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவவீரர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.



விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட்-1 மற்றும் பார்ட்-2 ஆகிய இரு நிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதற்கான கணினி தேர்வு (முதல்நிலை-1) 2-8-2019 முதல் 6-9-2019 வரை குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு நவம்பர் 17-ந் தேதி நடக்கிறது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 29-5-2019-ந் தேதியாகும்.


மேலும் விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.