Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 19, 2019

3 தேர்வுகளின் முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

உதவி ஜெயிலர் உள்பட, மூன்று தேர்வுகளுக்கான முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், உதவி சிறை அலுவலர் பதவியில், 30 காலியிடங்களுக்கு, ஜன., 6ல் தேர்வு நடத்தியது. இதில், 8,305 பேர் பங்கேற்றனர்.
இதில், 80 பேர் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வரும், 25ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது.


இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் நிலை - 3 பதவியில், 105 காலியிடங்களுக்கு, பிப்., 16ல் தேர்வு நடந்தது. 46 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 108 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வரும், 27ம் தேதி முதல், ஜூலை, 5 வரை சான்றிதழ்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது புவியியலாளர் பணியில், 15 காலியிடங்களுக்கு, மே, 5ல் நடந்த தேர்வில், 516 பேர் பங்கேற்றனர்.
அவர்களில், 39 பேருக்கு, வரும், 27ம் தேதி முதல், ஜூலை, 5 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது