Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 10, 2019

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி பணி


அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்(எய்ம்ஸ்) இந்தியா முழுவதும் கிளைகள் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எய்ம்ஸ் கிளையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 200
பணி: Nursing Officer (Staff Nurse Grade-II)
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங், ஜெனரல் நர்சிங் மிட்வை பிரிவில் டிப்ளமோ முடித்து, தங்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1000-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் முழுமையான விவரங்கள்

அறியhttp://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5d15b04a1024f__Final%20Staff%20Nurse%20advt%20approved%2028.06.2019.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2019