Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 22, 2019

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?


மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
வரும் கல்வி ஆண்டில் இந்த புதிய தேர்வு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு முறை வரப்போகிறது.


மேலும், 12ம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள் வடிவமைப்பும் மாறுகிறது. அதில் கொள்குறி வினாக்கள்(Objective Type) அதிகம் இடம் பெற உள்ளன.
அதற்காக பாடங்களை நன்று ஊன்றிப் படிக்கும் பழக்கத்தை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. மேலும் அகமதிப்பீட்டுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது.