மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்,சென்னை மண்டல இயக்குனர்,நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள, 230பிரிவுகளில், 1,351காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான தேர்வு,கணினி வழியில் நடைபெறும்.இதில், 17பிரிவுகளை சார்ந்த, 67பணியிடங்கள்,சென்னை தென் மண்டல,மத்திய பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்தது.இந்த பணியிடங்கள் குறித்த விரிவான தகவல்களை, ssc.nic.in,sscsr.gov.inஎன்ற,இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க,வரும், 31ம் தேதி கடைசி நாள்.இதற்கான தேர்வுகள்,அக்., 14முதல், 18ம் தேதி வரை நடைபெறலாம்.பெண்கள்,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்,மாற்றுத் திறனாளிகள்,இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.