எஸ்.பி.ஐ வங்கியில் 477 சிறப்புப் பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 25-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) பல்வேறு பிரிவுகளில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட 24 பணியிடங்களுக்கு மட்டும் அக்டோபர் 20-ம் தேதி தேர்வு நடத்தப்படும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எப்படி விண்ணப்பிப்பது?
1. sbi.co.in என்ற இணையதளத்துக்கு செல்க
2. Join SBI என்பதை கிளிக் செய்து பின்னர் Current Opening என்பதை கிளிக் செய்க...
3. RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN SBI ON REGULAR BASIS என்பதை கிளிக் செய்து Apply online என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்...
4. கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுத்த பின்னர், தேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். இறுதியில் பணம் செலுத்த வேண்டும்
எவ்வளவு கட்டணம்?
பொதுப்பிரிவினருக்கு 750 ரூபாய் கட்டணமும், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.125 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
பிரிவு வாரியாக காலியிடங்கள்:
தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment