குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-இல் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் - 2 பிரிவில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 11-இல் நடந்தது. இதன்பின், கடந்த பிப்ரவரியில் 14 ஆயிரத்து 797 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-ஆம் தேதி முதல் 30-ஆம்
தேதி வரை நடைபெறவுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.