Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 11, 2019

பொறியியல் பட்டதாரிகளே.!! உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா


உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய நீதிமன்றம்

பணியிடம் : தில்லி

பணி : நீதிமன்ற உதவியாளர் (Technical-cum-Programmer)

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பட்டம் அல்லது கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.sci.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Supreme Court of India, Tilak Marg, New Delhi- 110 201

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 14.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sci.gov.in/pdf/recruitment/Advt%20n%20app%20form%20tech%20post.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்