Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 24, 2019

கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் 300 உதவியாளர் / இளநிலை பணியிட்ங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் / இளநிலை உதவியாளர் : 300 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.01.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 9,300 முதல் 62,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:



தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncoopsrb.in/ அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 22.11.2019 மாலை 5.45 மணி வரை