தமிழக அரசிற்கு உட்பட்ட சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தோல்வியடைந்தவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 20
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
அலுவலக உதவியாளர் : 2
சமையலர் : 3
மருத்துவமனை பணியாளர் : 9
கிளீனர் : 1
துப்புரவு பணியாளர் : 5
கல்வித்தகுதி:-
சமையலர், மருத்துவமனை பணியாளர், கிளீனர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணிக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10-வது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC-30, BC/MBC-32, SC/ST-35 என உச்சவயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்குக் குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் கிடைக்கும் இடம்:-
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,
அரும்பாக்கம், சென்னை- 600 106
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.