Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 10, 2019

ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்


பழமொழி நானூறு
கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)


கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம். (அதுபோல), கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம். (க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்டநாள் தங்கியிருத்தல் ஆகாது. "திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.