Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 24, 2019

டிசம்பரில் நடக்கும் அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்: பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்


சென்னை: அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்க கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 2-ம் பருவம் மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன.




அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 11-ல் தொடங்கி 23-ம் தேதி நிறைவடைகிறது. இதேபோல் 9, 10-ம் வகுப்பு களுக்கு அரையாண்டுத் தேர்வும்இதர வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வும் டிசம்பர் 13-ல் தொடங்கி 23-ம் தேதி நிறைவடைகிறது. அதன்பின், டிச.24 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது.




இதற்கிடையே அரசு, அரசுஉதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வின்போது ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டும். தேர்வைஎவ்வித புகார்களுக்கும் இடமின்றிநடத்தி முடிக்க வேண்டும் எனபதுஉள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் தேர்வுத்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரையாண்டு விடுமுறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.