தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 583 கால்நடை ஆய்வாளர் நிலை II பதவிக்கான பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
கால்நடை ஆய்வாளர் நிலை II : 583 காலிப்பணியிடங்கள்
பயிற்சி : 11 மாதங்கள், 11 மாத கால பயிற்சி முடித்த பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை II-க்கான பணி ஆணை வழங்கப்படும்.
சம்பளம் :
பயிற்சியின் போது எந்தவிதமான ஊதியமோ, உதவித் தொகையோ வழங்கப்படமாட்டாது.
கல்வித் தகுதி :
12வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
01.07.2019 அன்றைய தேதியின் படி
SC/SC(A), ST பிரிவை சார்ந்தவங்க 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
MBC, BC, BCM பிரிவை சார்ந்தவங்க 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
General பிரிவை சார்ந்தவங்க 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
SC,SC(A),ST, MBC, BC, BCM - பட்டப்படிப்பு தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்சம் 46 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம் : ரூ. 100
SC/ST, மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணத்தை வரவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். வரவோலை "இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், சென்னை - 35" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cms.tn.gov.in/sites/default/files/job/LI_notification_021219.pdf தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cms.tn.gov.in/sites/default/files/job/LI_notification_021219.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர்,
காலிநடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்
எண். 571, அண்ணாசாலை
சென்னை -35
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை