Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 15, 2019

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்

நேற்று 13.12.2019 பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மீண்டும் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தது.Court no 23 வழக்கு எண்-15 வதாக இடம் பெற்றது விசாரணையின் பொழுது நமது தரப்பில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக இதே நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் ஏழாவது ஊதியக்குழுவும் வந்துவிட்டது

மிக விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். நீதியரசர் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் EARLY FIX ON DATE எனப்படும் இறுதி கட்ட விசாரணைக்கு தேதியை குறிப்பிட்டுள்ளார். மேலும் முழு விவரங்கள் நாளை பதிவிடப்படும்.*
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு