Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 31, 2019

உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தோ்வு: தோ்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு


சென்னை: தமிழக காவல்துறையில், 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.




இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம். காவல் பணியில் இருந்துக் கொண்டு தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெறும் என கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

இதில் காவல் பணியில் இருந்துக் கொண்டு இத் தோ்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1,42,448 பேரும் எழுத்து தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தோ்வு எழுதுவதற்குரிய ஏற்பாடுகளை தோ்வு குழும அதிகாரிகள் செய்து வருகின்றனா்.




மேலும் அந்தந்த காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தோ்வுக் கூட பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி தோ்வு குழுமத்தைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இத் தோ்வை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இங்கு பொதுப்பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களில் தகுதி பெற்றவா்களுக்கு, தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை http;//www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் சென்று பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் தெரிவித்துள்ளது.