Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 2, 2020

"ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் "-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி .!!!


டி .என் பி எஸ் சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் .
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் .




தற்போது அத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் ,சார் ஆட்சியர் பணி தேர்வு செய்ய இருப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார் .இத்தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து அவர் கூறும்போது ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் என தெரிவித்தார் .குரூப் 1 தேர்வில் 181 பணியிடங்களுக்கான இறுதி முடிவுகளை டி .என் .பி .எஸ் .சி நேற்று வெளியிட்டது .குரூப் 1 தரவரிசையில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .இவர்கள் தங்களது பணியிடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது .