Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 17, 2020

இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 418 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்: 418
காலியிடங்கள் விவரம்:
1. தேசிய அகாடமி - 208
2. கப்பல்படை - 42
3. விமானப்படை -120
4. நாவல் அகாடமி - 48
வயதுவரம்பு: 02.07.2001 - 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.




எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்சி, எஸ்டி., பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/mainmenu2.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020