Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 15, 2020

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று முதல் 31-ந் தேதி வரை வாய்ப்பு


நாடு முழுவதும் 'நீட்' தேர்வு எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத இருக்கின்றனர். இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று (புதன்கிழமை) முதல் 31-ந் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.




தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27-ந் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'நீட்' தேர்வு மே மாதம் 3-ந் தேதி மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.