தில்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபில் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 649 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தில்லி காவல் துறை
பணி : கான்ஸ்டபில் (AWO/TPO)
மொத்த காலிப் பணியிடங்கள் : 649
கல்வித் தகுதி : 12ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் சிஸ்டம் தொழிற் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி : கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினியில் 15 நிமிடத்தில் 1000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர் 100 ரூபாயினை ஆன்லைன் வழியாக கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.delhipolice.nic.in என்னும் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.delhipolice.nic.in/Asst.%20Wireless%20Operator.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.