அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று இணையதளங்களில் பரப்பப்படும் செய்தி வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப் பாளையம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்காவைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏழை மாணவர்களின் தேர்வுக் கட்டண ரத்து குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். பொங்கலுக்கு வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.