விளக்கெண்ணெய் கருத்தடை மருந்துகள், களிம்புகளிலும் அதிகமாக உபயோகமாகின்றது. இந்தியாவின் பஸ்தர் பழங்குடி மக்கள் இதன் இலைச்சாற்றை மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்கவும், இளம் இலைகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
விளக்கெண்ணெயில் உயர்தரமானது பழுப்பான வெண்மை நிறமாகவும், நல்ல மணத்துடன் கூடியதாகவும், படிவுகள் அற்றதாகவும் இருக்கும். தரம் குறைந்த ரகம் அடர்த்தியான மஞ்சள் நிறமாகவும், கனமாகவும், தெவிட்டலான மணம் கொண்டதாகவும் இருக்கும்.தரமான எண்ணெயையே உள்மருந்தாகக் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.