Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 11, 2020

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை!


மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் கலால் வரி அலுவலகத்தில் (GST) காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : கலால் வரி அலுவலகம், திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
கிளார்க் - 01
கேண்டீர் உதவியாளர் - 06

கல்வித் தகுதி :

கிளார்க் - 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

கேண்டீன் உதவியாளர் - 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட இரு பணிகளுக்குமே ஒரே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 01.01.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல், திறனறிவு, தட்டச்சு தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.centralexcisetrichy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Commissioner of GST and Central Excise, GST and Central Excise Commissionerate, No.1, Williams Road Cantonment, Tiruchirappalli - 620 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.centralexcisetrichy.gov.in/docs.html?id=recruitment-of-clerk-and-canteen-attendants.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.