Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 29, 2020

10,11,12ஆம் வகுப்பு - பொதுத்தேர்வுக்கு வருகைபுரியாதவர்கள் விவரம்கோரி தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் / தலைமையாசிரியர்களுக்கும் , நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்களில் , தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .




1 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை ( பாடவாரியாக ) தேர்வு நடைபெறும் நாளன்றே பிற்பகல் 4 : 00 மணிக்குள் தங்கள் தேர்வு மையத்திற்கான USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வாயிலாக ( www . dge . tn . gov . in - - - click here to access online portal - - Higher Secondary Second Year March 2020 | Higher Secondary First Year March 2020 | SSLC March 2020 - - User ID - - Password - - கொண்டு - - Absentees Details பதிவேற்றம் செய்திட வேண்டும்.




2 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் எவரும் இல்லை எனில் , கண்டிப்பாக இணையதளத்தின் வாயிலாக NIL REPORT - ஐ ( Day | Subject wise ) பதிவு செய்திட வேண்டும் .
3 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தேர்வு நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4 : 00 மணிக்குள் இப்பணியினை கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும்.









No comments:

Post a Comment