Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 5, 2020

28.02.2020 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 28 . 02 . 2020 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 28 . 02 . 2020 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது .



மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலகமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் . மேலும் , மாணவ / மாணவியர்களுக்கு 28 . 02 . 2020 அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 28 . 02 . 2020 - க்குப் பதிலாக 14 . 03 . 2020 ( சனிக்கிழமை ) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது ,