அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது தொடா்பாக பரிசீலிக்கப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து திமுக உறுப்பினா் பூங்கோதை துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், தமிழகத்தில் பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோக்கை அளவு அதிகமாக உள்ளன.
ஆனால், அந்தப் பள்ளிகளுக்கு நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அத்தகைய பள்ளிகளுக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், 'உள்ளாட்சித் துறை அமைச்சருடன் அதுகுறித்து கலந்து ஆலோசித்து முதல்வரின் அனுமதியைப் பெறுவோம். இந்த நல்ல யோசனையை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்' என்றாா்.