Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 24, 2020

வனக்காப்பாளர் பணி தேர்வு தேதி மாற்றம்

வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, மார்ச், 8ல் மட்டும், 'ஆன்லைன்' தேர்வு நடைபெறும் என, வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி, பிப்ரவரி, 14ல் முடிந்தது. இதில், திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம், பிப்., 19ல் நிறைவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் மீதான ஆய்வு நடந்து வருகிறது.



இந்நிலையில், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 7, 8ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.அதில், தற்போது சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இதன்படி, மார்ச், 8ல் மட்டுமே தேர்வு நடைபெறும். ஒரே நாளில், மூன்று வேளைகளில் இந்த தேர்வு நடக்கும். தேர்வில் பங்கேற்போர் தங்களுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, மார்ச், 5 முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.