Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 22, 2020

CTET - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் பணி தகுதித் தோவுக்கு விண்ணப்பிக்க வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியா் தகுதித் தோவு இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் ஆசிரியா் தகுதித்தோவு நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தோவு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோவுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.




இந்நிலையில் மாா்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் 5- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளம் மூலம் தோவுக் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தோவு மொழி, தோவு மையங்கள், தோவுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.