Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 17, 2020

TNPSC குரூப்4 இரண்டு தேர்வுகள் அவசியமா? கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக தேர்வர்கள் அதிருப்தி!

குரூப் 4 க்கு முதன்மை தேர்வு அறிவிப்பை TNPSC நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்.
முதன்மை தேர்வு அறிவிப்பு தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும்.
பணம் இல்லாத கிராமப்புற தேர்வர்கள் எங்கு சென்று படிப்பது.
முதன்மைத் தேர்வு கரணமாக மேலும் ஊழல்கள் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ளது.
முதன்மைத் தேர்வு காரணமாக தேர்வு நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படும்.




முதன்மைத் தேர்வு காரணமாக நகர்ப்புற தேர்வர்களே அதிகம் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
தற்போது நடந்துள்ள முறைகேட்டில் உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சென்டர் ஒதுக்குவது சாத்தியமில்லை.
அந்த அதிகாரிகளை களை எடுக்காமல் இரண்டு தேர்வுகள் வைப்பது வீண்வேலையாகும். கோச்சிங் சென்டர்களில் மீண்டும் பணமழைதான் பொழியச் செய்யுமே தவிர ஊழலை ஒழிக்காது.