Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 11, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் தொடக்கம்.


கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய தேர்வு வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவுபெற்று , ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கிறது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மதிப்பெண்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15-ம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் புனித வெள்ளி, தமிழ்ப்புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி விடுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment