Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 14, 2020

'குரூப் - 4' பணி : தட்டச்சர் பதவிக்கு பணி நியமன தேதி அறிவிப்பு

சென்னை: 'குரூப் - 4' தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, பணி நியமன, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் - 4 தேர்வுக்கு, 2019 செப்., 1ல் எழுத்து தேர்வு நடந்தது; தேர்ச்சி விபரங்கள், நவ., 12ல் வெளியிடப்பட்டன.


இதில், தட்டச்சர் பணிக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் வரும், 30 முதல், 31 வரை நடக்க உள்ளது. அதேபோல், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, ஏப்., 2 முதல், 7 வரை, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதில், பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர் பட்டியல், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment