Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 18, 2020

கணினி பயிற்றுநர்கள் பதவி உயர்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தள்ளுபடி!






பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 814 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்களாக நியமிக்கப்பட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது .
மேலும் , கணினி பயிற்றுநராக பணிபுரிபவர்களை கணினி பயிற்றுநர் நிலை 1 ஆக பதவி உயர்வு செய்வதற்கு ஏதுவாக பார்வை3 - ல் குறித்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களின் செயல்முறைகளின்படி தகுதிவாய்ந்தோர் பெயர்பட்டியல் கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . பார்வை 4ல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் அரசாணை எண் . 26 பள்ளிக்கல்வித் துறை நாள் . 12 . 02 . 2019ல் வரையறை செய்யப்பட்ட குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தள்ளுபடி செய்து 3 மாதக் காலத்திற்குள் உரிய ஆணை வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது .




இப்பொருளில் பார்வை 5ல் குறித்து இவ்வியக்கக கடிதம் மூலம் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது . அரசின் ஆணையை எதிர்நோக்கி தற்போது விவரங்கள் பெறப்பட வேண்டியுள்ளது . அதனடிப்படையில் பார்வை 1 - ல் குறித்துள்ள அரசாணையில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக ( Post Graduate Cadre ) ( with the minimum educational qualifications based on NCTE norm ) பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்திட பார்வை 1ல் காண் அரசாணையில் பத்தி 1ல் தெரிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் . கணினி பயிற்றுநர் பணியிடங்க ளுக்கு ரூ . 9300 - 34800 + 4800 த . ஊ ( Pre - Revised Scale ) ( Level 18 , Rs . 36900 1 , 16 , 600 / - ) ( Revised Scale ) என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் பெற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன .
அவ்வாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் கீழ்க்காணும் கல்வித் தகுதிகள் ( கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக பதவி உயர்வு அளித்திட ) பெற்றிருக்க வேண்டும் .




computer instructor gr I revised Proceedings - Download here

No comments:

Post a Comment