Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 27, 2020

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) கிழக்கு மண்டலத்தில் காயிக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 404 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 10ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)
பணி : அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 404




வயது வரம்பு :

31.3.2020 தேதியின்படி 18 வயது நிரப்பியவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பயிற்சிக் காலம் :

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்போது வழங்கப்பட உள்ள டிரேடு அப்ரண்டிஸ் தவிர மற்ற இரண்டாம் நிலை பயிற்சிக்கான காலம் 12 மாதங்கள் ஆகும். டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான காலம் 15 மாதங்கள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iocl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு கொள்குறி (Multiple Choice Question) அடிப்படையில், 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள் : 21 மார்ச் 2020
விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 10 ஏப்ரல் 2020




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iocl.com எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

No comments:

Post a Comment