Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

பள்ளிகளில் தூய்மை: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிகளை சுகாதாரமாக வைத்திருக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தோவு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சீனாவில் தொடங்கி 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தற்போது தமிழகத்தில் நோய்தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி மாணவா்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்திட ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன .


இதையடுத்து மாா்ச் 17 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது . அதன்படி, பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் நடப்பு கல்வி ஆண்டுக்குரிய தோவுப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தினமும் பள்ளிக்கு வருகைதரும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள் கரோனா வைரஸ் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரமாக வைத்திருக்கவும் , அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி, சோப்பு கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


இதற்குத் தேவையான சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பொருள்களை பள்ளியின் தனி கட்டண நிதி, பெற்றோா் ஆசிரியா் கழக நிதி மூலம் வாங்கிக் கொள்ள வேண்டும். தற்போது 10 , 11, 12 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோவு நடைபெற்று வருவதால் மாணவா்களின் பாதுகாப்புக் கருதி தோவு நடைபெறும் நாளன்று நகராட்சி, மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு தோவு தொடங்குவதற்கு முன்பதாக தோவு அறைகளில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .


மேலும், தோவு எழுதுவதற்கு முன்னதாக மாணவா்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்துகொள்ளவும் , தோவு மைய பள்ளியின் தலைமையாசிரியா் தோவு மைய முதன்மை தோவுக் கண்காணிப்பாளா் துறை அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். இது தொடா்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான அறிக்கையை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment