Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 9, 2020

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் - முதலமைச்சர் உறுதி!





திருவாரூருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமியை தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ந . ரெங்கராஜன் தலைமை யில் நிர்வாகிகள் சந்தித்து காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர் . மேலும் கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் . ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் . அதேபோல் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு வழங்கப்படும் அரசின் நிதிஉதவியை நிறுத்தி , அந் நிதியினை கொண்டு அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்



இதனை கேட்ட முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமி நடவடிக்கை களை மேற்கொள்வதாகவும் ,அரசு பாழியர் , ஆசிரியர்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் .
இந்த சந்திப்பின்போது உணவுத்துறை அமைச்சர் ஆர் . காமராஜ் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் ஈவேரா , நாகை லட்சுமி நாராயணன் , திருச்சி நீலகண் டன் , பெரம்பலூர் ராஜேந் திரன் , அரியலூர் எழில் , தஞ்சாவூர் குழந்தைசாமி , திருவாரூர் மாவட்ட ஓய்வு பிரிவு மாவட்ட செயலாளர் நா . மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் .

1 comment:

  1. It is greatful to the GOVT if they consider the people those who are in retirement.Thank you.

    ReplyDelete