Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 23, 2020

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு!


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் இயங்க தடையில்லை.



கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் :
*மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவர்களுக்கு தடை - முதல்வர் பழனிசாமி.
*பால், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு.
*காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.
*தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சர்.
*கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர்.
*அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
*அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது - முதல்வர்.

No comments:

Post a Comment