அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கையாக, `தன்னை நேரில் வந்து யாரும் சந்திக்க வேண்டாம்' என்று ஃப்ளெக்ஸ் போர்டு வைத்துள்ளார். ஆனால், அவரது தலைமையின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வித்துறையோ, ஆசிரியர்களைப் பணிக்கு வரச்சொல்லி அறிவித்துள்ளது.
`கொரோனா தொற்று பரவுவதால், என்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம்’ எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தன் வீட்டின் முன் ஃப்ளெக்ஸ் வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்து குறைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவரே இதுபோல், மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது முறைதானா என்று கொந்தளிக்கின்றனர் பொதுமக்கள்.
No comments:
Post a Comment