Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 14, 2020

தமிழக முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

உலகெங்கும் அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக இளம் வயது குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், தேவையற்ற அச்சம் போக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.



மனு அளித்த இரண்டு தினங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் வகுப்பு பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள 5 மாவட்ட தொடக்கப்பள்ளிகளுக்கம் விடுமுறை அறிவித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டியுள்ள தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாக கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.







No comments:

Post a Comment