Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 24, 2021

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படீப்பு தற்காலிக நிறுத்தம்!

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படீப்பு தற்காலிக நிறுத்தம் - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு.

பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து, பி.எட். பயிலும் மாணவர்களின் வசதிக்காக பி.ஏ.பி.எட், பிஎஸ்சி.பி.எட் ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த படிப்பை 2021-22 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கென தனியாக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் தனியார் பி.எட். கல்லூரிகள் 4 ஆண்டுகால படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்சிடிஇ அறிவித்துள்ளது. பட்டப் படிப்பு முடித்த பிறகு பி.எட். படிப்பை தனியாக படிப்பதால் ஓராண்டு காலம் கூடுதலாக செலவாகும். இதை தவிர்க்கவே, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக என்சிடிஇ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை, தற்போது பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களால் எழுத முடியாது என்று கூறப்படுள்ளது. இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு 2022-23 கல்வியாண்டில் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment