Tuesday, November 25, 2014

காதல் கோலம்



காதல் கோலம்

படிய வாரிய தலையை
காதல் கோலத்தில் களைத்து விட்டாய்
சரிசெய்து கொண்டன விரல்கள்

தினைவு அலைகளை
கடலலைகள் ஏற்க மறுத்தன
தூண்டில் உணவுக்கு
ஏங்கவும் இல்லை இந்த மீன்

கடற்கரை மணல்கள்
அறிவுரைப் பகர்ந்தன
அவைகள் தீர்க்க தரிசிகளானது
இப்போதுதான்

கலங்கரை விளக்கைக் கண்டுதான்
கப்பல் வருவதாக நினைத்தேன்
துறைமுகததை நோக்கி என்பது
பின்னர்தான் தெரிந்தது.

பூக்களோடு இணையும் நார்களே
நல்ல மலரோடு சேருங்கள்
மணம் வீசும் காலத்தில
மணப்பது உங்களைத்தான்


பட்டாம் பூச்சியின் பார்வைக்காக
என் உள்ளம் ஏனோ
பறந்து செல்கிறது
விட்டுவிட்டுத் தொடரும்
அந்த நினைவுகள்
விடாத இரயில் பெட்டியைப்போல
என்னையும் அறியாமல்
ஏதோ ஒரு உந்துதல்
தள்ளிக்கொண்டு போகிறது
வாசம் வீசும் பக்கமெல்லாம்
வர்ண ஜாலங்கள்
எங்கே
என்னுள் தொலைந்த கனவுகள்

No comments:

Post a Comment