Breaking

Tuesday, February 17, 2026

Tuesday, February 17, 2026

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பணியேற்றுள்ள 1709 முதுகலை ஆசிரியர்களின் சொந்த மாவட்ட விவரங்கள் பாடவாரியாக வெளியீடு!

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பணியேற்றுள்ள 1709 முதுகலை ஆசிரியர்களின் சொந்த மாவட்ட விவரங்கள் பாடவாரியாக வெளியீடு!

New PG Teachers Details

👇👇👇👇

Tuesday, February 17, 2026

தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - மார்ச்/ஏப்ரல் 2026 வெளியீடு.



தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - மார்ச்/ஏப்ரல் 2026

Examination Hand Book 2026

👇👇👇👇

Tuesday, February 17, 2026

‘10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை’.. அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், ‘பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (பிப்.16) விளக்கமளித்துள்ளார். மேலும், “பொதுத்தேர்வுக்கு பின்பே தேர்தல் வருதால், தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே பொதுத் தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டது” என்றார்.
Tuesday, February 17, 2026

Group 2 தேர்வுக்கான Hall Ticket வெளியீடு


 

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, February 17, 2026

தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - அறிக்கை!!!



தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - PART I

TN Interim Budget -Part-1-Tamil-Copy.pdf

👇👇👇

TN Interim Budget Part - I - Click Here To Download PDF

 

Tuesday, February 17, 2026

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே



BIHAR - SHE MODEL

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே....

*150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்த பெண் ஆசிரியர்கள்* அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!!!

For the Bihar TET (specifically STET 2025/2026), the minimum passing marks for women candidates are set at 40%, which translates to 60 marks out of 150. This 40% qualifying criteria applies to all female candidates, regardless of their specific social category (General, OBC, etc.) as per recent regulations.

Key Details for Bihar STET (Female Candidates):

Total Marks: 150

Minimum Qualifying Percentage: 40%

Passing Marks (Numerical): 60

Applicable To: All women candidates

Exam Structure: Objective-type (MCQ) with no negative marking

👇👇👇👇

Bihar-STET-2025-Official-Notification - Download here
Tuesday, February 17, 2026

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் ...



நெடுஞ்சாலை

நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா


சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணிகள்

19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்!
மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி

மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மின்தேவை

மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.

திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
போக்குவரத்துத் துறை

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு துறை

இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
வீட்டு மனை பட்டா

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்

புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்
ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
துறை வாரியாக

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம்

2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.

2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை


தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு!
மகத்தான சாதனை


விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.

பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
888 முறை பயணம்


மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள்



சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கல்


பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்


அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

இடைக்கால பட்ஜெட் ஏன்?


ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, February 17, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு...

👇👇👇👇

Download here
Tuesday, February 17, 2026

RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026

2026ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும், ஆண்டு முழுவதும் தேவைப்படும்.

அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்...

எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் *அரசு வெளியிடுவது இல்லை..*

இந்த ஆண்டு 2025 RH/RL சில குழப்பங்கள் இருந்தது ...

2026 RH/RL பட்டியல் *பண்டிகை தேதிகளின்* அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...

இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted 😊

ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted..

*GO (Ms) No 14 HRM ( FRiii) Dept Dated 1.2.22 இன் படி 33 Festival/Occasion*

Tuesday, February 17, 2026

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு


JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது; jeemain.nta.ac.inஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்; நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்
Tuesday, February 17, 2026

சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் -மேல்நிலைக்கல்விப்பணி பணியிலிருக்கும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - சார்பு

பார்வை 4ன்படி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களை மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்தவுடன் பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பவும், அப்பணிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்வுகள் நெருங்கும் நிலையிலும் மற்றும் நிர்வாகக் காரணங்களினால் தற்போதைய நிலையில் பார்வை 4-ல் காணும் ஆணையை இரத்து செய்து இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. பின்னாளில் மே 2026ல் பொது மாறுதல் கலந்தாய்வின் போது இது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Tuesday, February 17, 2026

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை தாக்கல்...


2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை காலை 9:30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது....

( ஏதாவது இருக்குமா......,!?)
Tuesday, February 17, 2026

கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!

லாபகரமாக இயங்கி வரும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகையைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து OP 193- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 145 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவோரிடம் இருந்து மாதந்தோறும் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படுவதால், வாராக்கடன் ஏதுமின்றி லாபகரமாக கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் லாபத் தொகையில் இருந்து உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது இந்தத் தொகை வழங்கப்படுவதால் பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், 2023- 2024, 2024- 2025 ஆகிய 2 ஆண்டுகளுக்கான லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் முதல் மாநில பதிவாளர் வரை முறையிட்டும் இதுவரை பலனில்லை என கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேதுபாவாசத்திரம் வட்டாரக் கிளை செயலாளர் ப.ராஜ்மோகன் கூறியது: கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக லாப பங்கீட்டுத் தொகை வழங்காதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. தணிக்கை முடியவில்லை என காரணம் கூறி தட்டிக்கழித்து வருகின்றனர்.

ஒவ்வொறு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் லாப பங்கீட்டுத் தொகை கிடைக்கும். இந்தத் தொகை பேரூதவியாக இருக்கும் என்பதால் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து சங்கத்தின் செயலாட்சியர் ரமேஷிடம் கேட்டபோது அவர் கூறியது: கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மூலம் சங்கத்தில் தணிக்கை செய்யுமாறு கூட்டுறவு சங்க தலைமையிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். தணிக்கை செய்வதற்கான ஆணை வந்ததும், தணிக்கை செய்யப்பட்டு, அதன்பிறகு லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
Tuesday, February 17, 2026

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு


தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18-ம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும் (பிப்.17), நாளை மறுதினமும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

19-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை வாய்ப்பு: 21-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும், 22-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் 19, 20 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2026

திருக்குறள்: 

அதிகாரம் 52

 தெரிந்து வினையாடல் 

குறள் 511: 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.

விளக்க உரை: 

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :

Delay is dangerous.

தாமதம் தாழ்வுக்கு வழி வகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

எழுவதற்கே வீழ்ச்சி; வெல்வதற்கே தோல்வி ;விழிப்பதற்கே தூக்கம் - பிரௌனிங்

பொது அறிவு : 

01.ஆசியாவில் விளையாட்டுக்கு பிரபலமான மற்றும் முதன்மையான நாடாக கருதப்படும் நாடு எது?

சீனா -China


02.இந்திய கரன்சி நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்?

டாக்டர் மன்மோகன் சிங் 
Dr. Manmohan singh

English words :

Educate-to teach someone to gain knowledge 

Aberrant-unusual

தமிழ் இலக்கணம்: 

 ன்று நாம் அறியாமலே செய்யும் சில வாக்கிய பிழைகளைப் பார்ப்போம்
1. சில மீன்கள் இறந்து கடற்கரை ஓரத்தில் கிடந்தன
தவறு – கடற்கரை என்றாலே கடல் ஓரம் தான். எனவே கடற்கரை ஓரம் என்று எழுதாமல்
 சில மீன்கள் இறந்து கடற்கரையில் கிடந்தன  என்று எழுத வேண்டும் 
2. நான் பிரதி வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். 
இங்கு பிரதி வெள்ளி , வெள்ளிதோறும் இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. ஒவ்வொரு வெள்ளியும் என்று பொருள்
எனவே 
நான்  வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். அல்லது 
நான் பிரதி வெள்ளி  நூலகம் செல்வேன். என்று எழுத வேண்டும் 
தொடரும்....

அறிவியல் களஞ்சியம் :

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் நடைமுறை உயிரியல் வழிகளை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்க பூஞ்சைகளைப் பயன்படுத்தும் முறையானது பிளாஸ்டிக் கழிவு நெருக்கடியைக் கையாளுவதில் ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த அணுகுமுறையாக அமையும். குப்பைத் தொட்டிகள் அல்லது எரியூட்டிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் குறைக்க இது ஒரு வழியாகும்.

நீதிக்கதை

 நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

17.02.2026

⭐தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

⭐அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு 5,023 இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்கள் என கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

⭐சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16 வெற்றிகளை பெற்றுள்ளது.

🏀டி20 உலகக் கோப்பை 2026:ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

Today's Headlines

⭐Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that the final voter list related to the special radical revision carried out in Tamil Nadu will be published on 23.02.2026.

⭐The central government has approved an additional 10,023 seats in government medical colleges, including 5,023 seats for MBBS and 5,000 seats for postgraduate medical courses.

⭐The CBSE  public examinations for Classes 10 and 12 will begin tomorrow.

 SPORTS NEWS

🏀 ICC -  India has won 16 consecutive matches in the World Cup and Champions Trophy. 

🏀T20 World Cup 2026: Afghanistan beat the United Arab Emirates by 5 wickets.

Covai women ICT_போதிமரம்


Monday, February 16, 2026

Monday, February 16, 2026

புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?

தமிழகத்தில் அரசுப் பள்ளி னகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப் புகளுக்கு கூடுதல் முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற் றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல் வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர் கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள் ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு நேரத்தி...

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: தற்போது 1,996 ஆசிரியர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளதால், இவர்கள் பணியில் சேர உள்ள இடங் களில் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் புதிய ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதால், மாணவர்களுக்கு புரிதல் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும், கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பழைய ஆசிரியர்கள் கொடுத்து வந்த வழிகாட்டுதல்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய வினாத்தாள்கள், பாடக் குறிப்புகளைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். இதனால், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, தற்காலிக ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்தை சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது பொதுத்தேர்வுக்குப் பின்னரோ செய்திருக்கலாம். தேர்தலை மையப்படுத்தி தமிழக அரசு புதிய ஆசிரியர் நியமனத் தில் தீவிரம் காட்டியது தெரிகிறது. எனவே, புதிய ஆசிரியர் நியமனத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் கேட்டபோது, "பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு வந்ததும், அங்கு பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்படுவது வழக்கம். தற்போதைய சூழல் குறித்து, அரசுதான முடிவெடுக்க வேண்டும்" என்றனர்
Monday, February 16, 2026

க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப் படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​திவரு​கிறது. அதன்​படி, வரும் (2026-27) கல்வி ஆண்​டில் முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ள​தாக என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதி​யுடன் முடிந்​தது. 4.11 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதற்​கான விரி​வான கால அட்​ட​வணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்​னஞ்​சலில் தொடர்பு கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.