Thursday, March 12, 2026
யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு: அனுஜ் அக்னிஹோத்ரி 52.88% பெற்று முதலிடம்!
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026
A closed mouth catches no flies.
நுணலும் தன் வாயால் கெடும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா
பொது அறிவு :
01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
நீர்யானை - Hippopotamus
02.உலகில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?
சீனா -China
English words :
Ancestral-related to
Bifurcated-divided into two parts
தமிழ் இலக்கணம்:
று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்
எ.கா
1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
தவறு
அடையாறு + இல் = அடையாற்றில்
அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி
2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு
கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் பேராசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
இன்றைய செய்திகள்
Wednesday, March 11, 2026
Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி சர்ச்சைக்கு சி.பி.எஸ்.இ., விளக்கம்

பகுதி நேர ஆசிரியர்கள் தகவல் இன்றி பணிக்கு வராமை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை!
தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ

தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது
70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026

Live and let live.
வாழு வாழ விடு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .
_____ அன்னை தெரசா
பொது அறிவு :
01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Dr. Muthulakshmi Reddy
02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் விக்ரம் சாராபாய்
Dr.Vikram Sarabhai
English words :
Skippered -actors a captain of a boat or a ship
Exhausted-completely tired
அறிவியல் களஞ்சியம் :
புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
மார்ச் 11
நீதிக்கதை
சிங்கமும் கழுதைப்புலியும்
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.
குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”.
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.
நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
இன்றைய செய்திகள்
Tuesday, March 10, 2026
பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

மெரினாவில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!
Kalanjiyam App New Version 1.23.0 - Update Now
பிளஸ் 2 வேதியியல் கடினம்: தேர்ச்சி குறைய வாய்ப்பு

மதிப்பீட்டு புலம் - Future Ready-மார்ச்-2026
SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
DGE - CEO Order Letter - Download here

