Breaking

Thursday, March 12, 2026

Thursday, March 12, 2026

இன்றைய செய்திகள் - 12.03.2026 (வியாழக்கிழமை)



🌹மனதில் இருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டால் மருந்துக்கு கூட ஒரு உறவும் நிலைக்காது.!

🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.!!

🌹🌹🌹நாலு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறப்பான செயலாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஃபோனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்தஅக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும்"

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️"தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்"

நாட்டிலேயே மிகக் கடினமான தேர்வு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுதான். தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்.

நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

-UPSC தேர்வு வெற்றியாளர்கள் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது; அப்பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழ்நாட்டில் உறைவிட வசதியுடன் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பயின்ற 1340 மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் அகில இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்

சமகிரக சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது; ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பிரமாணப் பத்திரத்தில் தகவல்

⛑️⛑️முதலூர் மாணவன் வெற்றி!

முதலூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் மனாசேஜெரித் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

⛑️⛑️தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த` அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு அரசு

⛑️⛑️ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு,மனை போன்ற சொத்துகளை வாங்குவோர் பத்திரப் பதிவின்போது PAN எண் அளிப்பதில் இருந்து விலக்கு.

👉ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது புதிய வருமான வரி சட்டத் திருத்தம்.

⛑️⛑️வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கும் 5,000 டன் டீசல்

இந்தியாவிலிருந்து பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது.

"இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், ஆறு மாதங்களுக்குள் 90,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும்.."

-வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்

⛑️⛑️எரிபொருள் தட்டுப்பாடு.. விமான கட்டணம் உயர்வு.!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வு.

இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது.

சர்வதேச விமானங்களுக்கு ரூ.930 - ரூ.4,592 வரை கட்டண உயர்வு

உள்நாட்டு விமானங்களுக்கு ரூ. 400 வரை கட்டண உயர்வு

சர் சார்ஜ் என்ற பெயரில் ஏர் இந்தியா கட்டணத்தை உயர்த்தியது.

இந்த கட்டணம் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

⛑️⛑️“ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்“

“அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க மாட்டோம்''

அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு ஈரான் அரசு எச்சரிக்கை

⛑️⛑️வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன்,

ஹோட்டல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை.

⛑️⛑️பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்தே விசில் சின்னத்தில் போட்டி ?தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்.

⛑️⛑️தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

⛑️⛑️Gasஆல் ரத்தாகும் திருமணங்கள்..?

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல்

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை

⛑️⛑️திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

⛑️⛑️திருச்சி விமான நிலையத்திற்கு

பட்டு வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு

⛑️⛑️மதுரையைத் தொடர்ந்து இன்றைய திருச்சி அரசு நிகழ்ச்சியிலும் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பிரதமர் மோடி உரை

⛑️⛑️பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார்”

திருச்சியில் என்.டி.ஏ. பரப்புரைக் கூட்டத்தில்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்ச. ⛑️⛑️மனைவியிடமே செலவுக்கு பணம் கேட்பேன்

எனது நிதி ஆதாரங்கள் அனைத்தையும் என்னுடைய மனைவியே கவனித்துக் கொள்கிறார்

எனது தனிப்பட்ட செலவுகளுக்கு கூட மனைவியிடமே கேட்டு பெறுவேன்

மனைவி சிறப்பாக நிதியை கையாள்வதால் தான் என்னால் தயாரிப்பாளர் ஆக முடிந்தது

-‘தாய் கிழவி’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

⛑️⛑️ஈரான் மீதான போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம். ஈரான் மீதான போரை முடிக்க நினைக்கிறேன். ஈரானை குறிவைக்க அங்கு தற்போது எதுவும் இல்லை''

- டிரம்ப்

⛑️⛑️புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்

‌‌
Smart Booking

தமிழ்நாட்டில், கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல் படாதது குறித்த புகார்களைத் தொடர்ந்து புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்...*

வாட்ஸ்அப், இண்டேன் ஆயில் மொபைல் செயலி மற்றும் SMS மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு.

WHATSAPP மூலம் கேஸ் புக் செய்ய:

👇

𝟳𝟱𝟴𝟴𝟴𝟴𝟴𝟴𝟮𝟰

செயலி மூலம் கேஸ் புக் செய்ய

👇

INDIAN OIL APP

SMS மூலம் கேஸ் புக் செய்ய

👇

𝟳𝟳𝟭𝟴𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

MISSED CALL

👇

𝟴𝟰𝟱𝟰𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

ஸ்மார்ட் புக்கிங் வசதி:

👉தினமும் காலை 𝟭𝟬 முதல் மாலை 𝟲 மணி வரை

#Gas | #IndaneLPGGas

⛑️⛑️திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.

👉4 தொகுதிகள்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு*

👉3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுக சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து.

⛑️⛑️கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்; பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும்

திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லிப்பூ, அன்று மாலைக்குள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்

பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்

மேலும், தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையும் அடங்கும்

⛑️⛑️கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இன்று பகல் 12.30 மணி அளவில் பதவியேற்க உள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

⛑️⛑️மூளைச்சாவு அடைந்த பெண் உயிரோடு திரும்பி அதிசயம்

உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த வினிதா (50) என்ற பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது, அது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி ஏறியதால் மீண்டும் உயிருடன் வந்துள்ளார்!

மூச்சு மற்றும் இதயத்துடிப்பு நின்ற நிலையில் வீட்டிற்கு அழைத்து சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர் மூச்சு விடுவதை கவனித்த அவரின் கணவர், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது வினிதா குணமடைந்து பேசுகிறார்

⛑️⛑️தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.560 உயர்வு

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,960க்கு விற்பனை

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15,120க்கு விற்பனை

வெள்ளி விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.

⛑️⛑️மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான எல்.கே.சுதீஷ் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Thursday, March 12, 2026

யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு: அனுஜ் அக்னிஹோத்ரி 52.88% பெற்று முதலிடம்!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வு 2025-ன் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டதாரி அனுஜ் அக்னிஹோத்ரி, 52.88 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான யுபிஎஸ்சி முடிவுகளில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார் டாக்டர் அக்னிஹோத்ரி(26). இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். அக்னிஹோத்ரி தனது முதன்மை எழுத்துத் தேர்வில் 867 மதிப்பெண்களையும், ஆளுமைத் தேர்வில் 204 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இதன் மொத்த மதிப்பெண் 1,071 ஆகும்.

இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டின் ராஜேஸ்வரி (28) பிடித்துள்ளார். இவரது மதிப்பெண்கள் 52.69 சதவீதம் ஆகும். சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மின் மற்றும் மின்னனு பொறியியல் பட்டம் பெற்றவரது மொத்த மதிப்பெண்கள் 1,067. இவர் தனது எழுத்து தேர்வில் 865, நேர்காணலில் 202 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். தனது ஐந்தாவது முயற்சியில் சமூகவியலை விருப்பப் பாடமாகக் கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் ராஜேஸ்வரி.

இந்த வருடம் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாக மொத்தம் 958 பேர் உள்ளனர். இவர்களில் 659 ஆண்களும், 299 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு, மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இது, முதற்கட்டம் (பிரிலிம்ஸ்), பிரதானம் (மெயின்ஸ்) மற்றும் ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணல் (இண்டர்வியு) என மூன்று நிலைகளில் உள்ளது.

மூன்றாம் இடத்தைப் பிடித்த அகன்ஷ் துல் 52.19 சதவீதம் மதிப்பெண் பெற்றார். மொத்தம் 1,057 மதிப்பெண்களுடன் அவர்- எழுத்துத் தேர்வில் 864, நேர்காணலில் 193 பெற்றுள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ராகவ் ஜுன்ஜுன்வாலா மற்றும் இஷான் பட்நாகர் முறையே 51.45 சதவீதம் மற்றும் 51.25 சதவீதம் பெற்றுள்ளனர். இவர்களில் ஜுஞுன்வாலா பெற்ற1,042 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 847 மற்றும் நேர்காணலில் 195 பெற்றுள்ளார். இவர்களில் ஜுன்ஜுன்வாலா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றவர். ஐந்தாம் இடத்தின் பட்நாகர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர்.

பட்நாகர், 1,038 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 823 மற்றும் நேர்காணலில் 215 பெற்றார். 2025 ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் முதற்கட்டத் தேர்வு கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 9,37,876 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,76,793 பேர் தேர்வு எழுதினர். இதில், 14,161 பேர் தகுதி பெற்று அடுத்தகட்ட முதன்மை தேர்வை கடந்த ஆகஸ்ட், 2025 இல் எழுதினர்.

இவர்களில் 2,736 பேர் இறுதிகட்ட ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணலுக்கு தகுதி பெற்றனர். இதன் முடிவில் 958 பேர் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாகத் தேர்வாகி உள்ளனர்.இவர்கள் தம் மதிப்பெண்களுக்கு ஏற்றவகையில், ஐஎப்எஸ். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர் எஸ் உள்ளிட்ட சுமார் 24 வகை பணியில் அமர்த்தப்படுவார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு மட்டும் குறிப்பிட்ட மாநிலங்களின் பேட்ச்சாக பணி அமர்த்தப்படுவார்கள். மற்ற பணியைப் பெற்றவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்ற வேண்டி இருக்கும். ஐஎப்எஸ் எனும் இந்திய வெளிநாட்டு பணிக்கு தேர்வானவர்கள் வெளிநாடுகளிலும் பணியாற்ற வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, March 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026

திருக்குறள்: 

குறள் 618: 

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் 
தாள்வினை இன்மை பழி. 
       
விளக்க உரை: 

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

பழமொழி :

A closed mouth catches no flies.  

நுணலும் தன் வாயால் கெடும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா

பொது அறிவு : 

01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?

      நீர்யானை - Hippopotamus

02.உலகில் முட்டை உற்பத்தியில்  முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?

             சீனா -China

English words :

Ancestral-related to 

Bifurcated-divided into two parts

தமிழ் இலக்கணம்: 

று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும் 

எ.கா

1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

தவறு

அடையாறு + இல் = அடையாற்றில் 


அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி

2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு 

கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி

நீதிக்கதை

 சிட்டுக்குருவியின் பேராசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள்

12.03.2026

⭐ தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

⭐ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படையை 
உருவாக்க உலக நாடுகள் முன் வந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ICC Rankings /
முதல் இரண்டு
இடங்களை பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை

🏀ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ The Meteorological Department has informed that the temperature will increase in Tamil Nadu from tomorrow.

⭐ PM Narendra Modi has inaugurated 5 new train services for Tamilnadu.

⭐ Countries around the world have come forward to form a massive naval force under the leadership of France to reopen the Strait of Hormuz and ensure the safety of oil and gas supplies.

 *SPORTS NEWS* 

🏀 In the International Cricket Council (ICC) rankings Abhishek Sharma and Ishan Kishan have achieved the milestone of securing the top two positions.

🏀 The Indian Premier League (IPL)will be held from March 28 to May 31.

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 11, 2026

Wednesday, March 11, 2026

Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :

Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.

உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்:

Approval:

நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.

* Web Portal:

செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.

* Mustering:

வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.

இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
Wednesday, March 11, 2026

பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி சர்ச்சைக்கு சி.பி.எஸ்.இ., விளக்கம்

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித வினாத்தாளில் இடம் பெற்ற 'க்யூ.ஆர்.குறியீடு ' 'ரிக் ரோல்' என்ற, 'யூ டியூப்' வீடியோ பதிவிற்கு சென்றதால் சர்ச்சையானது. எனினும், அந்த வினாத்தாள் பாதுகாப்பானது எ ன, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 வகுப்பிற்கான கணிதத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் சிலவற்றில் இடம்பெற்ற க்யூ.ஆர்.குறியீடு பகுதியை, மாணவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். சந்தேகம் அப்போது, அது பாடத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு மாறாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ரிக் ஆஸ்ட்லியின் பாடல் இடம்பெற்ற யூ டியூப் வீடியோ பதிவிற்கு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால், அந்த வினாத்தாளின் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 கணித வினாத்தாள் முற்றிலும் உண்மைத்தன்மை உடையது; அதன் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை.

ஒரு சில வினாத்தாள் தொகுப்புகளில் உள்ள க்யூ.ஆர்.குறியீடு, யூ டியூப் வீடியோவிற்குச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. விசாரணை இது, தேர்வின் நம்பகத்தன்மைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைப் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

'ரிக் ரோல்' என்றால் என்ன?

இது, சமூக வலைதளங்களில், அதிகளவு பகிரப்படும், 'மீம்'களாக வலம் வருகின்றன. யாரேனும் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி, 'இதைப் பாருங்கள், சூப்பரான வீடியோ' என, குறிப்பிடுவர். நீங்களும் ஆர்வமாக க்ளிக் செய்தால், 1987ல் வெளியான பிரபல ஆங்கில பாடகரான ரிக் ஆஸ்ட்லியின், 'நெவர் கோன்னா கிவ் யூ அப் ' என்ற புகழ்பெற்ற பாடலின் யூ டியூப் வீடியோ தோன்றும். இதை தான், 'ரிக் ரோல்' என அழைப்பர். கடந்த 2007 முதல் பல்வேறு சமூக வலை தளங்களில் இவ்வகை மீம்கள் பிரபலம். மற்றவர்களை ஏமாற்றவும் கிண்டல் செய்யவும் இத்தகைய செயல்பாடுகளை இணையவாசிகள் மேற்கொள்கின்றனர்.
Wednesday, March 11, 2026

தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ


நண்பர்களே வணக்கம் 🙏

தனித் தேர்வர்கள்/ Arrear

செய்முறை தேர்வு சார்ந்த FAQ

1) புதிய நடைமுறை படி (100 Mark) செய்முறை தேர்வு (20 Max) minimum pass Mark எவ்வளவு?

செய்முறை தேர்வு attendance/வருகை கட்டாயம்...

Minimum pass Mark என்று எதுவும் கிடையாது...

2) பழைய நடைமுறை படி (200 Mark) செய்முறைத் தேர்வு (50 max) minimum pass Mark எவ்வளவு?

40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுத்தால் மட்டுமே செய்முறை தேர்வில் தேர்ச்சி

3) புதிய நடைமுறை படி (100 மதிப்பெண்)

செய்முறை தேர்வு எழுத வில்லை, internal marks zero, Theory இல் 35 எடுத்தால்? தேர்ச்சி ஆ?

இல்லை... செய்முறை தேர்வு கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்...

எனவே தேர்ச்சி இல்லை.

4) கடந்த ஆண்டு internal marks (10க்கு) zero. இந்த ஆண்டு arrear exam போது internal marks வழங்க இயலுமா?

இயலாது...

5) செய்முறை தேர்வு குறைந்த பட்சம் இல்லை எனில் தேர்ச்சி க்கு நிபந்தனைகள்?

புதிய முறையில்..

Theory+ internal+ practical

35/100 வேண்டும்

(Theory 15 minimum required)...

அதாவது செய்முறை தேர்வு வருகை புரிந்து (0/20)

Internal (0/10)

Theory (35/70) எனில் அவர் தேர்ச்சி...

6) செய்முறை தேர்வு + theory இரண்டும் ஒன்றாக தேர்ச்சி பெற வேண்டுமா?

தேவையில்லை...

Theory இல் ஏற்கனவே தேர்ச்சி, எனில் புதிய முறையில் , செய்முறை தேர்வு மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்...

அதே போல ஏற்கனவே செய்முறை தேர்வு attended/வருகை எனில்

Theory exam மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்

( 35/100) மட்டுமே நிபந்தனை...

7) பழைய முறையில் (200) செய்முறை தேர்வில் 40 மதிப்பெண் எடுக்காதவர்கள் ?
அவர்கள் மீண்டும் தற்போது செய்முறை தேர்வு எழுத வேண்டும்..

செய்முறை தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி.

8) பழைய முறையில் 50 செய்முறை தேர்வு.

அதில் 20 internal, 30 external இப்போது எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு?

Internal marks, அந்த தேர்வர்கள் படித்த பழைய பள்ளி தலைமை ஆசிரியர் இடம் internal marks details கையெழுத்து பெற்று கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

External practical மட்டுமே நடத்தப்படும்.

9) ஏற்கனவே வழங்கப்பட்ட internal marks எப்படி பார்ப்பது?

TML இல் practical +Theory என தனியே இருக்கும்..

மதிப்பெண் சான்றிதழ்களில் 2001 க்கு பிறகு practical+ Theory என பிரித்து இருக்கும்...

10) 2001 முன் பழைய மாணவர், practical marks எப்படி பெறுவது?

பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்...

ஒருவேளை பள்ளியில் இருந்து செய்முறை தேர்வு விவரங்கள் பெற இயலவில்லை எனில் தற்போது மீண்டும் செய்முறை தேர்வு எழுதி 40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுக்க வேண்டும்..

என அறிவுறுத்தப்படுகிறது .

11) புதிய முறையில் (100) மதிப்பெண், மீண்டும் செய்முறை தேர்வு எழுத வேண்டுமா?

தேவை இல்லை... (பதிவின் நோக்கம் இது தான்) ...

இதுவரை ஒருமுறை கூட செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்கள் மட்டுமே தற்போது செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும் ...

ஏற்கனவே appeared எனில் அவர்களுக்கு செய் முறை தேர்வு மீண்டும் கிடையாது...

12) பள்ளியில் பயின்று தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பற்றி புரிந்தது..

Direct private candidate practicals என்ன நடைமுறை?

தேவை எழாது...

எந்த ஒரு Direct private ( பள்ளியில் பயிலாமல் நேரடியாக தனித் தேர்வர்கள்) candidate, practical subject உள்ள பிரிவை எடுக்க முடியாது...

Direct private candidate

குறிப்பிட்ட 5 group ஐ மட்டுமே தேர்வு செய்ய இயலும் ( non practical subject group)

எனவே direct private candidate, practical என்ற வினா எழாது .

13) புதிய/பழைய முறையில் தற்போது தனித்தேர்வர்கள்

செய்முறை தேர்வு எழுதுவது எப்படி?

தேர்வுத் துறை இயக்குநர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்கள் ( பார்க்க இணைப்பு) ..

தனித் தேர்வர்கள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்/தலைமை ஆசிரியர்கள் தான் செய்முறை தேர்வு நடத்த வேண்டும்...

14) தனித் தேர்வர்கள் யார் யாருக்கு செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என list அனுப்பபடுமா?

இல்லை... தேர்வுத் துறையில் இருந்து practical candidates list என தனியே எதுவும் அனுப்ப படமாட்டாது..

அந்த தனித் தேர்வர்கள் தான் தங்களை (chief superintendent) அணுக வேண்டும்...

செய்முறை தேர்வு எந்த எந்த பாடத்தில் தேவை என்பதை தனித் தேர்வர்கள் இடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொள்ளுங்கள்

15) தனித் தேர்வர்கள் practical செய்ய internal external நியமனம் செய்வார்களா?

எத்தனை நபர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும் என்ற தகவல் தனியே அனுப்ப இயலாது...

Internal external practical teacher duty orders வழங்க மாட்டார்கள்...

Chief superintendent, அந்த அந்த பாட

Hall invigilator களை external ஆக பயன் படுத்தி கொள்ளலாம்...

அந்த பாடத்தில் hall invigilator இல்லை எனில்..

அந்த பள்ளி subject teachers பயன்படுத்தி கொள்ளலாம்...

அல்லது chief superintendent, அவர் பள்ளி பாட ஆசிரியரை வரவழைத்து செய்முறை தேர்வு நடத்தி கொள்ளலாம்..

( Internal examiner தேவைப்படாது)

External examiner மட்டும் போதும்

16) Regular candidate போல் empty practical Mark sheet download?

இல்லை அப்படி எதுவும் DGE இல் இருந்து download ஆகாது...

மதிப்பெண் படிவம் இணைப்பில் உள்ளதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்

17) practical marks details யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

செய்முறை தேர்வுகள் அனைத்தும் முடித்த பிறகு

AD exam office இல் *31/3/2026* க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்...

18) AD exam office இல் என்ன என்ன ஒப்படைக்க வேண்டும்?

Covering letter

1) Subject wise Mark sheet

2) Candidate internal marks details signed by previous school HM

3) Candidate Hall ticket xerox

4) Candidate request letter for practical exam

தலைமை ஆசிரிய நண்பர்களின் சந்தேகங்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற செயல்முறைகள் மற்றும் அரசாணை படி இந்த தகவல் தொகுப்பு. பகிர்கிறேன்

கூடுதல் விவரங்களுக்கு

*தங்களின் மாவட்ட AD exam office / CEO office தொடர்பு கொள்ளுங்கள்*

தகவலுக்காக
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

10/3/26
Wednesday, March 11, 2026

தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!



அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல், அலைபேசி பயன்பாட்டு உறுதி மொழி சான்று பெறுதல் மற்றும் தேர்வு நேரத்தில் தேர்வறைகளில் CCTV செயல்படுவதை நிறுத்துதல் தொடர்பாக.

தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!

DGE - Mobile Usage Instructions - Download here
Wednesday, March 11, 2026

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்.
Wednesday, March 11, 2026

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது


தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்​கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்​கப்​பட்​டன. பள்ளி மாணவர்​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல் ஆகிய பாடங்​களை நல்ல முறை​யில் பயிற்​று​வித்​து, அறி​வியல் ஆர்​வத்தை ஏற்​படுத்​தி, அவர்​கள் அறி​வியல் மற்​றும் பொறி​யியல் படிப்​பு​களில் சேர சிறப்​பாகப் பணி​யாற்​றும் பள்ளி ஆசிரியர்​களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

கடந்த ஆண்​டிலிருந்து வழங்​கப்​படும் இந்த விருது, ‘முதல் கொள்​கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான ஐஐடி விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்ட 6 ஆசிரியர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் காமகோடி நேற்று விருது வழங்​கி​னார்.

அவர் வாழ்த்​திப் பேசும்​போது, “ஒரு மாணவரின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் பள்ளி ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். ஆசிரியர்​களால்​தான் மாணவர்​களின் சிந்​தனையை​யும் கற்​றலை​யும் மேம்​படுத்த முடி​யும்.

இத்​தகைய உயர் பணியை செய்​யும் ஆசிரியர்​களுக்கு உரிய அங்​கீ​காரம் கிடைப்​ப​தில்​லை. அந்த வகை​யில் மாணவர்​களுக்கு சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்​கும் ஆசிரியர்​களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்​கிறது.

இந்த விருது மற்ற ஆசிரியர்​களுக்​கும் உத்​வேகத்​தை​யும் ஊக்​கத்​தை​யும் அளிக்​கும் என்று நம்​பு​கிறோம். இதன்​மூலம் அனைத்து மாணவர்​களுக்​கும் தரமான கல்வி கிடைக்​கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளபடி நம் நாட்​டில் உயர் கல்விக்கு செல்​லும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்பட வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்​து, டீன் (கல்​வி) பேராசிரியர் பிர​தாப் ஹரி​தாஸ் பேசும்​போது, “அடிப்​படை அறி​வியல் புரிதலுடன் ஐஐடி​யில் சேரும் மாணவர்​கள் உயர் கல்​வி​யிலும் வேலை​யிலும் சிறந்து விளங்​கு​கிறார்​கள். மாணவர்​கள் சரி​யான வழி​யில் படித்​தால் அறி​வியல், பொறி​யியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்'' என்றார்.
Wednesday, March 11, 2026

70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது.

மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாகவும், தனிப் பாடமாகவும் கற்றுத் தரும் நிலையில், தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் கொண்டு வராமல் உள்ளது.

ஆனால், மத்திய அரசு, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கும் நிதியை மடைமாற்றம் செய்து, அதை எமிஸ் ஆபரேட்டர்களுக்கு பயன்படுத்து கின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர ஆசிரியர்களும் இல்லை, பாடங்களும் இல்லை.

மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் கற்று வருகின்றனர். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் அ.ஆரோக்கியசாமி கூறியது: தமிழக அரசு, மத்திய அரசு வழங்கிய நிதியை மடைமாற்றம் செய்து கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கணினி ஆய்வகங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், கணினி ஆசிரியர்களை நியமிக்க வந்த நிதியில், அந்தப் பணிக்கு கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்து அலுவலகப் பணிக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை.
Wednesday, March 11, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் நல்வாழ்த்துகள்

திருக்குறள்: 

குறள் 617: 
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளாள் தாமரையி னாள்.
   
விளக்க உரை:

 ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

பழமொழி :

Live and let live.

 வாழு வாழ விடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .

_____ அன்னை தெரசா

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Dr. Muthulakshmi Reddy 

02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் விக்ரம் சாராபாய்

Dr.Vikram Sarabhai

English words :

Skippered -actors a captain of a boat or a ship

Exhausted-completely tired

அறிவியல் களஞ்சியம் :

புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

நீதிக்கதை

 சிங்கமும் கழுதைப்புலியும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”.

“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

11.03.2026

⭐ மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

⭐ இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

⭐இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!
ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

Today's Headlines

⭐ Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..

⭐ India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production ,due to the increasing population, there is a possibility of water shortage in the future.

⭐ India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.

 *SPORTS NEWS* 

🏀 IPL match schedule to be released tomorrow. The IPL schedulewill be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 10, 2026

Tuesday, March 10, 2026

பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

👇👇👇👇

DSE - Anbazhagan Award 2026 - Download here
Tuesday, March 10, 2026

மெரினாவில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!


சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Tuesday, March 10, 2026

பிளஸ் 2 வேதியியல் கடினம்: தேர்ச்சி குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10,159 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வேதியியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் பகுதிகளில் சில கேள்விகள் கடினமாக இருந்ததால் பதில் அளிப்பது சிரமமாக இருந்தது. பல்வேறு எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் ‘சென்டம்’ பெறும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறையக்கூடும்.

கணக்குப்பதிவியல் எளிது: அதேநேரம் கணக்குப் பதிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. 1, 2, 3, 5 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. மெல்லக் கற்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் இருந்தது.

இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றனர்.

இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பாடத் தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது
Tuesday, March 10, 2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-மார்ச்-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 09.03.26 - மாலை 5.00 மணி முதல் 13.03.26 மாலை 5.00 மணி வரை.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧 மாணவர்கள் NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக Future Ready வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணையதள முகவரி :

Tuesday, March 10, 2026

SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!




SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

DGE - CEO Order Letter - Download here
Tuesday, March 10, 2026

இன்றைய செய்திகள் 10.03.2026(செவ்வாய்க்கிழமை)

🌹நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷத்தை மாற்றவும்,ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்டவும் தெரிந்தவர்களே, மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!

🌹🌹அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு, பெரும்பாலும், வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும்,அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.!!

🌹🌹🌹ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால்... அவர் நல்லதே செய்தாலும் மனம் குறைகளை மட்டும்தான் தேடும்...

அவர் நல்லவராகவே இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்...

இதுவே மனித இயல்பாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️2025-2026 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

⛑️⛑️ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த தட்டச்சர்களை விடுத்து அமைச்சு பணியாளர்களுக்கு உண்டான ஆசிரியர் பணி மாறுதல் என்பது இல்லை என தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு வெளியீடு.

⛑️⛑️திட்டமிட்டபடி நீட் தேர்வு மே 3, 2026 அன்று நடைபெறும் - NTA

⛑️⛑️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு.

⛑️⛑️தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய 12 ம் வகுப்பு மாணவன்.முதலில் தேர்வெழுத அனுப்ப மறுத்த உறவினர்கள். மாணவனின் எதிர்காலத்தை கருதி உடனடியாக தலையிட்டு தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியர்.. தேர்வுக்கு பின் தனது காரிலேயே மாணவனை அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்..

🍒🍒100 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்துள்ளது.

ஈரான் ஹோர்மோஸ் நீரிணையை மூடியதால் உலகளாவிய விநியோகத்தில் பாதிப்பு.

இதன் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 18% உயர்ந்து 110 டாலர் வரை சென்றது.

⛑️⛑️"புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்"

ஈரான் அணு அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்தால் உலகளவில் எண்ணெய் விலை விரைவாக குறையும்.

குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலை உயர்ந்தாலும், அது உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய சிறிய விலையே.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்.

தனது Truth Social சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு.

⛑️⛑️வீட்டு உபயோக சிலிண்டர் மீது முக்கியத்துவம்:

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் உற்பத்தி குறைப்பு என தகவல்..

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

வீட்டு உபயோக சிலிண்டர் 1 வைத்திருந்தால் 21 நாட்களில் புக்கிங் செய்யலாம்..

வீட்டு உபயோக சிலிண்டர் 2 வைத்திருந்தால் 30 நாட்களில் புக்கிங் செய்யலாம்

⛑️⛑️விஜய் ஆஜராவது சந்தேகம்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகமாட்டார்; வழக்கறிஞர் மூலம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோர விஜய் தரப்பு முடிவு என தகவல்.

இதே வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து 2 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்; இன்று முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதை ஒட்டி விஜய் ஆஜராக மாட்டார் என தகவல்.

⛑️⛑️புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைப்பு.

தமிழகத்தை போல் புதுவை மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு.

சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

⛑️⛑️வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற பக்தர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய, கெம்பட்டி சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதில் ஏற்பட்ட 3வது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

⛑️⛑️பாக்.,-ல் பெட்ரோல் விலை உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 321 ரூபாயாகவும், டீசல் 335 ரூபாயாகவும் உயர்வு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்

⛑️⛑️சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் மதுரைக்கு துணை ராணுவத்தினர் வந்தடைந்தனர்.

⛑️⛑️தங்கம் விலை குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஒரு சவரன் ரூ.1,19,600க்கும், ஒரு கிராம் ரூ.14,950க்கும் விற்பனை ⛑️⛑️மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு

பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

⛑️⛑️புதிய தலைவருக்கும் டிரம்ப் வார்னிங்

``ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மோஜ்தபா காமேனி, அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. அயதுல்லா அலி காமேனியின் மகனான மோஜ்தபா தகுதியற்றவர்''

* டிரம்ப் விமர்சனம்

⛑️⛑️இன்று (மார்ச் 10) காலை 10 மணிக்கு, தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு

⛑️⛑️மார்ச் 12ல் தவெக போராட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12ல் தவெக போராட்டம் அறிவிப்பு

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் போராட்டம் குறித்து அறிவிப்பு

⛑️⛑️கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்”

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

⛑️⛑️கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை விற்க G7 அமைப்பு பரிசீலனை!

கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை சர்வதேச சந்தையில் விற்க G7 பரிசீலனை.

G7 நாடுகளின் சுமார் 30% எண்ணெய் இருப்பை (400 மில்லியன் பீப்பாய்கள்) சந்தையில் விற்க திட்டம் என தகவல். இச்செய்தி வெளியான 2 மணி நேரத்தில் எண்ணெய் விலை $15 சரிந்து $105க்கு கீழ் வர்த்தகம்

⛑️⛑️இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.

மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்

⛑️⛑️'தாய்க்கிழவி' திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியது

⛑️⛑️தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தே.மு.தி.க. சார்பில் சுதீஷும், பா.ம.க. சார்பில் அன்புமணியும் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

⛑️⛑️தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தவெகவுடன் பேச்சு நடத்தவில்லை; விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி; தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்

அதிமுக - பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க உள்ளதாக வெளியான செய்திக்கு நயினார் நாகேந்திரன் பதில்

⛑️⛑️தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவ செலவை பற்றி கவலைப்பட வேண்டாம், தான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் உறுதி ⛑️⛑️நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தாக்கல் செய்த பொதுநல மனு

மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

⛑️⛑️ஈரான் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

"தனது தந்தையின் பணிகளை மொஜ்தபா கண்ணியத்துடன் தொடர்வார். கடும் சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை அவர் ஒன்றிணைப்பார்; ஈரானுடன் ரஷ்யா உறுதியாக நிற்கும்"

-ரஷ்ய அதிபர் புதின்

⛑️⛑️ “சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர்

ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்

எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்”

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️திருவனந்தபுரம் வந்த ‘டி20 உலக கோப்பை சாம்பியன் மற்றும் தொடர் நாயகன்’ சஞ்சு சாம்சன் - மாநில அரசின் சார்பில் வரவேற்ற அமைச்சர் சிவன் குட்டி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926