Friday, February 13, 2026
TNTET July 2025 for Working Teachers - Notification & Exam Date Published

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in) 13.02.2026 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TNTET July 2025 - Notification & Exam Date - Download here
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு தான்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின், தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!!
நாளை சனிக்கிழமை ( 14.02.2026 ) பள்ளி வேலை நாள் அறிவிப்பு.
மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12-ஆம் வகுப்பு விடைத் தாள்கள் இனி 'டிஜிட்டல்' முறையில் திருத்தம்; சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் என்னென்ன?
துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு!!!

9801 பேருக்கு (13.02.2026) அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்!

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - T/M & E/M
அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள்!

13.02.2026(வெள்ளிக்கிழமை) - இன்றைய செய்திகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2026
![]() |
| உலக வானொலி நாள் |
திருக்குறள்:
Small steps build big journeys.
சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.
2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.
பொன்மொழி :
மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி
பொது அறிவு :
1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy?
யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக மாறி உள்ளது?
Mumbai - மும்பை
2. Who controls monetary policy in India?
இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
Reserve Bank of India (RBI). - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).
English words :
Monetary - பணவியல்
Mechanics - இயக்கவியல்
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.
பிப்ரவரி 13
நீதிக்கதை
பசி
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.
உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.
உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்
இன்றைய செய்திகள்
Thursday, February 12, 2026
அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

TNTET 2025 - உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பித்தல் - New Proceedings
தேர்தல் பணியிலிருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சி
புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
12.02.2026(வியாழக்கிழமை) - இன்றைய செய்திகள்
100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings







