Breaking

Friday, March 13, 2026

Friday, March 13, 2026

சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை!!!

அரசு தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 16.03.2026 அன்று ஆங்கிலத் தேர்வு முடிந்தவுடன் 25.03.2026 அன்று புதன்கிழமை கணிதத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆங்கிலத் தேர்விற்கும். கணிதத் தேர்விற்கும் இடையே 8 நாட்கள் இடைவெளியுள்ளது.

எனவே சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களுக்கு தேர்வு சார்ந்து பயிற்சி வழங்குவதற்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் ஆங்கிலத் தேர்வு முடிந்த மறுநாள் 17.03.2026 அன்று மட்டும் சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் வேலைவாய்ப்பு



Friday, March 13, 2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026

யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி

டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2.

இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் (General Turn) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஆசிரியர் பயிற்சி
Friday, March 13, 2026

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!

💼 *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.

💼 *இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு, IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.

💼 *மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.

💼 *ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.
Friday, March 13, 2026

ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு அழைப்பு - தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு


ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இம்மையத்தின் சார்பில், இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு வரும் 17-ம் தேதி அன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் 13-ம் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விவரங்களை (DAF) பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 93457 66957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Friday, March 13, 2026

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
Friday, March 13, 2026

DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஇஓ முதன்​மைத் ​தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.  வெங்கட பிரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1- சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதி​காரி நேரடி நியமனத்​துக்​கான முதன்​மைத்​தேர்வு மார்ச் 22-ம் தேதி முதல் 25-ம்் தேதி வரை நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களுக்கு தேர்​வுக்​கூட நுழைவுச்​ சீட்டு தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தேர்​வர்​கள் தேர்​வுக்​கூட அனு​ம​திச்​ சீட்டை தங்​களின் ஒரு​முறை பதிவு (ஓடிஆர்) வாயி​லாக விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு வெங்கட பிரியா தெரிவித்துள்​ளார்​.
Friday, March 13, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2026

திருக்குறள்: 

அதிகாரம் 82 / CHAPTER 82 – 

தீ நட்பு 

குறள் 811: 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.      

 விளக்க உரை:

 அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பழமொழி :

All is well that ends well. 

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்

பொது அறிவு : 

01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?

 வெங்காயம் - Onion

02.  மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை  பட்டத்தை வழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Netaji Subhas Chandra Bose 

English words :

Carry on- continue to do something

Carry out-perform or complete  task

தமிழ் இலக்கணம்: 

வயிறு+இல் = வயிறில் அல்ல *வயிற்றில்*


கயிறு + இல் = கயிறில் அல்ல *கயிற்றில்*


கயிறு+ ஐ = கயிறை அல்ல *கயிற்றை*


வீடு + ஐ =  வீடை அல்ல *வீட்டை* 


ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல 

 *ஆற்றுப்பக்கம்*

இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று,டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துக்களுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்

அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.

நீதிக்கதை

 கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.03.2026

⭐அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூர், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

⭐ பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ போன்ற பார்ட்னர்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

⭐ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள்,ஏவுகணைகளை வீசியது.பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Tamilnadu government has approved a new project worth ₹5,400 crore to bring water to lakes and ponds in 7 constituencies including Karur, Aravakurichi, Ottanchathiram, Athur, and Dindigul from the point where the Amaravathi and Kaveri rivers meet.

⭐ Many restaurants are being temporarily closed, which has affected partners such as Swiggy and Zomato.

⭐ Iran launched drones and missiles toward the United Arab Emirates. Attacks were also carried out on major oil storage facilities in Bahrain.

 *SPORTS NEWS* 

🏀 The Indian team is receiving widespread praise not only from former Indian players but also from international personalities. In that line, former West Indies cricket team captain and legendary batsman Vivian Richards has praised the Indian team.

Covai women ICT_போதிமரம்

Thursday, March 12, 2026

Thursday, March 12, 2026

Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :

Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.

உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்:

Approval:

நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.

* Web Portal:

செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.

* Mustering:

வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.

இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
Thursday, March 12, 2026

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.


டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா (CEETA) என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். இந்த 2 நுழைவுத் தோ்வுகளையும் தமிழக அரசு சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் 2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, டான்செட் நுழைவுத் தோ்வு மே 9ஆம் தேதியும், சீட்டா பொது நுழைவுத் தோ்வு மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
Thursday, March 12, 2026

5 400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு

5400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்ய மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) நாமக்கல் அவர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Thursday, March 12, 2026

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

Electoral Rolls Booth Level Officers appointed to assist the Electoral Registration Officers Remuneration payable to the Booth Level Officers for the year 2025-2026 Allocation of funds to 38 districts-Sanctioned Orders Issued

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Thursday, March 12, 2026

10-ம் வகுப்பு தமிழ் தேர்வு எளிதாக இருந்தது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இந்நிலையில், தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் மட்டும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. மற்ற அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன.

ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்.6-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும். அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு சென்னை ராயபுரத்தில் உள்ள தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

படுத்தபடி தேர்வெழுதிய மாணவர்: சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் சாய் கார்த்திக், தனது வீட்டு மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டிலி ருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் உட்காரவோ, நடக்கவோ இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

எனவே, பொதுத் தேர்வை ஆம்புலன்ஸில் சென்று தேர்வு எழுதுவதற்கு கல்வித் துறையில் மாணவர் சாய் கார்த்திக் அனுமதி கேட்டிருந்தார். தொடர்ந்து அந்த மாணவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், மாணவருக்கு உதவுவதற்காக (ஸ்கிரைப்) வேறொரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்ஸ் மூலமாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவர் சாய் கார்த்திக், ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மாணவர் கூற, அதை விடைத்தாளில் ஆசிரியர் எழுதி னார்
Thursday, March 12, 2026

இன்றைய செய்திகள் - 12.03.2026 (வியாழக்கிழமை)



🌹மனதில் இருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டால் மருந்துக்கு கூட ஒரு உறவும் நிலைக்காது.!

🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.!!

🌹🌹🌹நாலு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறப்பான செயலாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஃபோனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்தஅக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும்"

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️"தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்"

நாட்டிலேயே மிகக் கடினமான தேர்வு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுதான். தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்.

நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

-UPSC தேர்வு வெற்றியாளர்கள் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது; அப்பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழ்நாட்டில் உறைவிட வசதியுடன் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பயின்ற 1340 மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் அகில இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்

சமகிரக சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது; ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பிரமாணப் பத்திரத்தில் தகவல்

⛑️⛑️முதலூர் மாணவன் வெற்றி!

முதலூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் மனாசேஜெரித் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

⛑️⛑️தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த` அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு அரசு

⛑️⛑️ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு,மனை போன்ற சொத்துகளை வாங்குவோர் பத்திரப் பதிவின்போது PAN எண் அளிப்பதில் இருந்து விலக்கு.

👉ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது புதிய வருமான வரி சட்டத் திருத்தம்.

⛑️⛑️வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கும் 5,000 டன் டீசல்

இந்தியாவிலிருந்து பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது.

"இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், ஆறு மாதங்களுக்குள் 90,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும்.."

-வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்

⛑️⛑️எரிபொருள் தட்டுப்பாடு.. விமான கட்டணம் உயர்வு.!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வு.

இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது.

சர்வதேச விமானங்களுக்கு ரூ.930 - ரூ.4,592 வரை கட்டண உயர்வு

உள்நாட்டு விமானங்களுக்கு ரூ. 400 வரை கட்டண உயர்வு

சர் சார்ஜ் என்ற பெயரில் ஏர் இந்தியா கட்டணத்தை உயர்த்தியது.

இந்த கட்டணம் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

⛑️⛑️“ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்“

“அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க மாட்டோம்''

அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு ஈரான் அரசு எச்சரிக்கை

⛑️⛑️வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன்,

ஹோட்டல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை.

⛑️⛑️பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்தே விசில் சின்னத்தில் போட்டி ?தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்.

⛑️⛑️தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

⛑️⛑️Gasஆல் ரத்தாகும் திருமணங்கள்..?

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல்

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை

⛑️⛑️திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

⛑️⛑️திருச்சி விமான நிலையத்திற்கு

பட்டு வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு

⛑️⛑️மதுரையைத் தொடர்ந்து இன்றைய திருச்சி அரசு நிகழ்ச்சியிலும் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பிரதமர் மோடி உரை

⛑️⛑️பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார்”

திருச்சியில் என்.டி.ஏ. பரப்புரைக் கூட்டத்தில்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்ச. ⛑️⛑️மனைவியிடமே செலவுக்கு பணம் கேட்பேன்

எனது நிதி ஆதாரங்கள் அனைத்தையும் என்னுடைய மனைவியே கவனித்துக் கொள்கிறார்

எனது தனிப்பட்ட செலவுகளுக்கு கூட மனைவியிடமே கேட்டு பெறுவேன்

மனைவி சிறப்பாக நிதியை கையாள்வதால் தான் என்னால் தயாரிப்பாளர் ஆக முடிந்தது

-‘தாய் கிழவி’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

⛑️⛑️ஈரான் மீதான போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம். ஈரான் மீதான போரை முடிக்க நினைக்கிறேன். ஈரானை குறிவைக்க அங்கு தற்போது எதுவும் இல்லை''

- டிரம்ப்

⛑️⛑️புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்

‌‌
Smart Booking

தமிழ்நாட்டில், கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல் படாதது குறித்த புகார்களைத் தொடர்ந்து புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்...*

வாட்ஸ்அப், இண்டேன் ஆயில் மொபைல் செயலி மற்றும் SMS மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு.

WHATSAPP மூலம் கேஸ் புக் செய்ய:

👇

𝟳𝟱𝟴𝟴𝟴𝟴𝟴𝟴𝟮𝟰

செயலி மூலம் கேஸ் புக் செய்ய

👇

INDIAN OIL APP

SMS மூலம் கேஸ் புக் செய்ய

👇

𝟳𝟳𝟭𝟴𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

MISSED CALL

👇

𝟴𝟰𝟱𝟰𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

ஸ்மார்ட் புக்கிங் வசதி:

👉தினமும் காலை 𝟭𝟬 முதல் மாலை 𝟲 மணி வரை

#Gas | #IndaneLPGGas

⛑️⛑️திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.

👉4 தொகுதிகள்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு*

👉3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுக சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து.

⛑️⛑️கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்; பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும்

திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லிப்பூ, அன்று மாலைக்குள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்

பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்

மேலும், தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையும் அடங்கும்

⛑️⛑️கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இன்று பகல் 12.30 மணி அளவில் பதவியேற்க உள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

⛑️⛑️மூளைச்சாவு அடைந்த பெண் உயிரோடு திரும்பி அதிசயம்

உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த வினிதா (50) என்ற பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது, அது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி ஏறியதால் மீண்டும் உயிருடன் வந்துள்ளார்!

மூச்சு மற்றும் இதயத்துடிப்பு நின்ற நிலையில் வீட்டிற்கு அழைத்து சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர் மூச்சு விடுவதை கவனித்த அவரின் கணவர், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது வினிதா குணமடைந்து பேசுகிறார்

⛑️⛑️தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.560 உயர்வு

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,960க்கு விற்பனை

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15,120க்கு விற்பனை

வெள்ளி விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.

⛑️⛑️மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான எல்.கே.சுதீஷ் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Thursday, March 12, 2026

யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு: அனுஜ் அக்னிஹோத்ரி 52.88% பெற்று முதலிடம்!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வு 2025-ன் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டதாரி அனுஜ் அக்னிஹோத்ரி, 52.88 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான யுபிஎஸ்சி முடிவுகளில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார் டாக்டர் அக்னிஹோத்ரி(26). இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். அக்னிஹோத்ரி தனது முதன்மை எழுத்துத் தேர்வில் 867 மதிப்பெண்களையும், ஆளுமைத் தேர்வில் 204 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இதன் மொத்த மதிப்பெண் 1,071 ஆகும்.

இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டின் ராஜேஸ்வரி (28) பிடித்துள்ளார். இவரது மதிப்பெண்கள் 52.69 சதவீதம் ஆகும். சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மின் மற்றும் மின்னனு பொறியியல் பட்டம் பெற்றவரது மொத்த மதிப்பெண்கள் 1,067. இவர் தனது எழுத்து தேர்வில் 865, நேர்காணலில் 202 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். தனது ஐந்தாவது முயற்சியில் சமூகவியலை விருப்பப் பாடமாகக் கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் ராஜேஸ்வரி.

இந்த வருடம் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாக மொத்தம் 958 பேர் உள்ளனர். இவர்களில் 659 ஆண்களும், 299 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு, மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இது, முதற்கட்டம் (பிரிலிம்ஸ்), பிரதானம் (மெயின்ஸ்) மற்றும் ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணல் (இண்டர்வியு) என மூன்று நிலைகளில் உள்ளது.

மூன்றாம் இடத்தைப் பிடித்த அகன்ஷ் துல் 52.19 சதவீதம் மதிப்பெண் பெற்றார். மொத்தம் 1,057 மதிப்பெண்களுடன் அவர்- எழுத்துத் தேர்வில் 864, நேர்காணலில் 193 பெற்றுள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ராகவ் ஜுன்ஜுன்வாலா மற்றும் இஷான் பட்நாகர் முறையே 51.45 சதவீதம் மற்றும் 51.25 சதவீதம் பெற்றுள்ளனர். இவர்களில் ஜுஞுன்வாலா பெற்ற1,042 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 847 மற்றும் நேர்காணலில் 195 பெற்றுள்ளார். இவர்களில் ஜுன்ஜுன்வாலா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றவர். ஐந்தாம் இடத்தின் பட்நாகர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர்.

பட்நாகர், 1,038 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 823 மற்றும் நேர்காணலில் 215 பெற்றார். 2025 ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் முதற்கட்டத் தேர்வு கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 9,37,876 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,76,793 பேர் தேர்வு எழுதினர். இதில், 14,161 பேர் தகுதி பெற்று அடுத்தகட்ட முதன்மை தேர்வை கடந்த ஆகஸ்ட், 2025 இல் எழுதினர்.

இவர்களில் 2,736 பேர் இறுதிகட்ட ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணலுக்கு தகுதி பெற்றனர். இதன் முடிவில் 958 பேர் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாகத் தேர்வாகி உள்ளனர்.இவர்கள் தம் மதிப்பெண்களுக்கு ஏற்றவகையில், ஐஎப்எஸ். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர் எஸ் உள்ளிட்ட சுமார் 24 வகை பணியில் அமர்த்தப்படுவார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு மட்டும் குறிப்பிட்ட மாநிலங்களின் பேட்ச்சாக பணி அமர்த்தப்படுவார்கள். மற்ற பணியைப் பெற்றவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்ற வேண்டி இருக்கும். ஐஎப்எஸ் எனும் இந்திய வெளிநாட்டு பணிக்கு தேர்வானவர்கள் வெளிநாடுகளிலும் பணியாற்ற வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, March 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026

திருக்குறள்: 

குறள் 618: 

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் 
தாள்வினை இன்மை பழி. 
       
விளக்க உரை: 

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

பழமொழி :

A closed mouth catches no flies.  

நுணலும் தன் வாயால் கெடும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா

பொது அறிவு : 

01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?

      நீர்யானை - Hippopotamus

02.உலகில் முட்டை உற்பத்தியில்  முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?

             சீனா -China

English words :

Ancestral-related to 

Bifurcated-divided into two parts

தமிழ் இலக்கணம்: 

று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும் 

எ.கா

1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

தவறு

அடையாறு + இல் = அடையாற்றில் 


அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி

2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு 

கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி

நீதிக்கதை

 சிட்டுக்குருவியின் பேராசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள்

12.03.2026

⭐ தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

⭐ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படையை 
உருவாக்க உலக நாடுகள் முன் வந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ICC Rankings /
முதல் இரண்டு
இடங்களை பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை

🏀ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ The Meteorological Department has informed that the temperature will increase in Tamil Nadu from tomorrow.

⭐ PM Narendra Modi has inaugurated 5 new train services for Tamilnadu.

⭐ Countries around the world have come forward to form a massive naval force under the leadership of France to reopen the Strait of Hormuz and ensure the safety of oil and gas supplies.

 *SPORTS NEWS* 

🏀 In the International Cricket Council (ICC) rankings Abhishek Sharma and Ishan Kishan have achieved the milestone of securing the top two positions.

🏀 The Indian Premier League (IPL)will be held from March 28 to May 31.

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 11, 2026

Wednesday, March 11, 2026

Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :

Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.

உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்:

Approval:

நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.

* Web Portal:

செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.

* Mustering:

வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.

இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
Wednesday, March 11, 2026

பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி சர்ச்சைக்கு சி.பி.எஸ்.இ., விளக்கம்

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித வினாத்தாளில் இடம் பெற்ற 'க்யூ.ஆர்.குறியீடு ' 'ரிக் ரோல்' என்ற, 'யூ டியூப்' வீடியோ பதிவிற்கு சென்றதால் சர்ச்சையானது. எனினும், அந்த வினாத்தாள் பாதுகாப்பானது எ ன, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 வகுப்பிற்கான கணிதத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் சிலவற்றில் இடம்பெற்ற க்யூ.ஆர்.குறியீடு பகுதியை, மாணவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். சந்தேகம் அப்போது, அது பாடத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு மாறாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ரிக் ஆஸ்ட்லியின் பாடல் இடம்பெற்ற யூ டியூப் வீடியோ பதிவிற்கு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால், அந்த வினாத்தாளின் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 கணித வினாத்தாள் முற்றிலும் உண்மைத்தன்மை உடையது; அதன் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை.

ஒரு சில வினாத்தாள் தொகுப்புகளில் உள்ள க்யூ.ஆர்.குறியீடு, யூ டியூப் வீடியோவிற்குச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. விசாரணை இது, தேர்வின் நம்பகத்தன்மைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைப் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

'ரிக் ரோல்' என்றால் என்ன?

இது, சமூக வலைதளங்களில், அதிகளவு பகிரப்படும், 'மீம்'களாக வலம் வருகின்றன. யாரேனும் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி, 'இதைப் பாருங்கள், சூப்பரான வீடியோ' என, குறிப்பிடுவர். நீங்களும் ஆர்வமாக க்ளிக் செய்தால், 1987ல் வெளியான பிரபல ஆங்கில பாடகரான ரிக் ஆஸ்ட்லியின், 'நெவர் கோன்னா கிவ் யூ அப் ' என்ற புகழ்பெற்ற பாடலின் யூ டியூப் வீடியோ தோன்றும். இதை தான், 'ரிக் ரோல்' என அழைப்பர். கடந்த 2007 முதல் பல்வேறு சமூக வலை தளங்களில் இவ்வகை மீம்கள் பிரபலம். மற்றவர்களை ஏமாற்றவும் கிண்டல் செய்யவும் இத்தகைய செயல்பாடுகளை இணையவாசிகள் மேற்கொள்கின்றனர்.