Breaking

Wednesday, February 11, 2026

Wednesday, February 11, 2026

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல்.




 

ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 17 மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.

எனவே. அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்துவரும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்தம் கல்வித்தகுதி. பணிமுதுநிலை. நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளின் தேர்ச்சி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவை விவரங்களின் அடிப்படையில்

01.01.2025 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் பொருட்டு பார்வை 2 மற்றும் 3-இல் கண்டுள்ள அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 27 என்ற விகிதத்தில் இடம் பெறும் வகையில் 01012025 அன்றைய நிலையில் கீழ்கண்டுள்ளவாறு தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்படுகிறது.

HSS HM Promotion Combined Temp panel

👇👇👇

Download here

Wednesday, February 11, 2026

TET தேர்ச்சி பெற்ற (23.08.2010க்கு பிந்தைய) அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அரசாணை கோரி பள்ளிக்கல்வி இயக்குநரை தேசிய ஆசிரியர் சங்கம் நேரில் சந்தித்து மனு

TET தேர்ச்சி பெற்ற (23.08.2010க்கு பிந்தைய) அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அரசாணை கோரி பள்ளிக்கல்வி இயக்குநரை தேசிய ஆசிரியர் சங்கம் நேரில் சந்தித்து மனு



Wednesday, February 11, 2026

FUTURE READY QUESTION - தங்களது பள்ளியில் உள்ள SMART BOARD வழியாக பயிற்சி வழங்குவதற்கான தெளிவான விளக்கம்.

 237125

FUTURE READY QUESTION PRACTICE CLASS 1-5 | CMS LOGIN


எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு,


EMIS LOGIN ID பயன்படுத்தி CMS PORTAL வழியாக


தங்களது பள்ளியில் உள்ள SMART BOARD வழியாக பயிற்சி வழங்குவதற்கான தெளிவான விளக்கம்.

👇👇👇👇


Wednesday, February 11, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.02.2026



தாமஸ் ஆல்வா எடிசன்

திருக்குறள்: 

குறள் : 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 

விளக்கம்:

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

பழமொழி :

Affection lives where kindness stays.         

கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி

பொது அறிவு : 

01.சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?

சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang

02.தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது? 

சோழமண்டலக் கடற்கரை 

Coromandel Coast

English words :

concordance -to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences:

தமிழ் இலக்கணம்: 

 சுற்றுமா? சுழலுமா?
வாருங்கள் பார்ப்போம்
1. பம்பரம் சுழல்கிறது
2. பூமி சூரியனை சுற்றிகிறது.
ஏன் முதல் வாக்கியத்தில் சுழல்கிறது இரண்டாம் வாக்கியத்தில் சுற்றுகிறது?
ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றும் போது சுழல்கிறது என்று சொல்ல வேண்டும் 
வேறு பொருளை சுற்றும் போது சுற்றுகிறது என்று சொல்ல வேண்டும் 
இன்னும் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. மின்விசிறி சுழல்கிறது
2. பூமி தன் அச்சில் சுழல்கிறது
3. மாலா பூந்தோட்டத்தை சுற்றி வந்தாள் 
4. முகமது தன் வீட்டைச் சுற்றி சுற்றி விளையாடினான்.

அறிவியல் களஞ்சியம் :

500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.

பிப்ரவரி 11

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

நீதிக்கதை

தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார். 

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர். 

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :

புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான். 

இன்றைய செய்திகள்

11.02.2026

⭐தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு

⭐கேரளாவின்  மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.

Today's Headlines

⭐The Meteorological Department has informed that dry weather is likely to prevail in Tamil Nadu till the 16th. 

⭐The US government has decided to provide full duty exemption on garments and textile products manufactured in Bangladesh

⭐24-year-old Tanya Nathan has been named Kerala's most physically challenged civil judge. 

 *SPORTS NEWS*

🏀 India and Sri Lanka are jointly hosting the 10th T20 World Cup. Australia and Ireland will face each other in the 14th league match of the series today.

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 10, 2026

Tuesday, February 10, 2026

ஆசிரியையிடம் ரூ.74 லட்சம் ஊதியம் பிடிக்க பிறப்பித்த உத்தரவு ரத்து


அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியையிடம், 74 லட்சம் ரூபாய் சம்பளத் தொகையை வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் தாக்கல் செய்த மனு:

கர்நாடக மாநிலம், மைசூரில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தேன். சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில் விண்ணப்பித்து, மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றேன். ஹரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன், பின், கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன். 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்.கடந்த 2004ல் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி, கல்வித்துறை கோரியது; அதன்படி சமர்ப்பித்தேன். இதுவரை சான்றிதழை திருப்பித் தரவில்லை. 2012ல் பள்ளி தாளாளரிடம் இருந்து எனக்கு 'நோட்டீஸ்' வந்தது. நான் சமர்ப்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் பொய்யானது என்றும் சம்பளத்தை திருப்பி செலுத்தவும், அதில் கூறப்பட்டது. என்னை தற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

தற்காலிக பணி நீக்க உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு 2012ல் ரத்து செய்தது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, என்னை மீண்டும் பணி அமர்த்தி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இந்நிலையில், தணிக்கை அதிகாரியின் ஆட்சேபனையை சுட்டிக்காட்டி, சம்பளத்தை வசூலிப்பதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரியில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட்டில் பிறப்பித்தார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்து, அது நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுஉள்ளது.

ஆனால், கடந்த நவம்பர் வரை, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை.பள்ளியின் தாளாளரும் நோட்டீஸ் அனுப்பினார். எந்த விசாரணையும் இன்றி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு பிறப்பிக்க, வட்டார கல்வி அதிகாரிக்கு அதிகாரமில்லை. எனவே, வட்டார கல்வி அதிகாரி உத்தரவு மற்றும் பள்ளி தாளாளர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும். தடையின்றி பணியில் தொடர, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, ''24 ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையாக 74 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். ''ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்,'' என்றார்.இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். சம்பளத் தொகையை வசூலிக்கவும், நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
Tuesday, February 10, 2026

பள்ளிதோறும் சிறப்புப் பயிற்றுநர்


சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஏற்ற வகையில் பொருத்தமான கற்பித்தல் முறைகள், தகவமைக்கப்பட்ட கருவிகள், மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் கலைத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் அணுகும்படியாக மாற்றுபவர்கள் சிறப்புப் பயிற்றுநர்கள்.

இவர்கள் உள்ளடக்கிய கல்வி வகுப்பறையில் பொது ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். புலன் குறைபாடுடையோர், அறி வாற்றல் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், ஒன்றுக்கு மேற் பட்ட குறைபாடுகள் உடையோர் எனத் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு மாணவர்கள் பயில் கின்றனர். இவர்களுக்கான கற்பித்தல், சிறப்புப் பயிற்றுநர்கள் இல்லாமல் முழுமையடையாது.

பள்ளிதோறும் சிறப்பு சிறார்: இந்திய மறுவாழ்வு அமைப்பினால் (Rehabil itation Council of India) அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் கல்வியியல் பட்டம் (B.Ed. Special Education) பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் சிறப்புப் பயிற்றுநர்களாகப் பணியாற்ற இயலும். இவர்கள் மறுவாழ்வு நிபுணர்களுக்கான (Central Rehabilitation Registrar-CRR) பதிவேட்டில், பதிவு செய்து நடைமுறையில் பதிவு எண் கொண்டவராக இருப்பது அவசியம்.

இவர்கள் பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறை பாடுகள் (Multiple Disabilties) என ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் உள்ளடக்கிய கல்வி செயல் படுத்தப்படுகிறது. ​இதன் கீழ் சிறப்புப் பயிற்றுநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மண்டலத்தில் 30 பள்ளிகள் ஒதுக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 5 முதல் 25 சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

பணிச்சுமை: சிறப்புப் பயிற்றுநர்கள் அதிகப் பணிச்சுமையால், ஒரு குறிப்பிட்ட மாணவரை மீண்டும் சந்திக்கக் குறைந்தது ஒரு மாதமாகிறது. இது உள்ளடக்கிய கல்வியின் அர்த்தத்தையே நீர்த்துப்போக வைக்கிறது.

இவர்கள் மாற்றுத்திறன் உடையோருக்கான தனித்துவமான அடையாள அட்டை பெறுவதில் இருந்து அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்த்தல் என அனைத்து மட்டத்திலும் பணியாற்றுகின்றனர். இதனால் கற்பித்தல் பணியைத் திறம்படச் செய்ய இயலாத சூழலே காணப்படுகிறது.

பொதுப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்றுநர் களுக்கான மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆரம்ப நிலைக்கு 10:1, உயர் ஆரம்ப நிலைக்கு 15:1 இருக்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) வலியுறுத்துகிறது. இதன்படி தமிழ் நாட்டுக்கு 13,000 சிறப்புப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில், இந்திய மறுவாழ்வு அமைப்பி னால் அங்கீகரிக்கப்பட்ட 16 கல்வி நிறுவனங்களில் வருடத்துக்கு 700 பேர் சிறப்புக் கல்வியியல் பட்டம் பெறுகின்றனர். மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி 1980களிலிருந்து வழங்கப்பட்டுக் குறிப்பிடத்தகுந்த அளவிலான சிறப்புக்கல்விப் பயிற்றுநர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு சிறப்புப்பள்ளிகளைத் தவிர்த்து பொதுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வியின்கீழ் 1,649 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்வது, போதிய அளவிலான சிறப்புப் பயிற்றுநர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதே சிறப்புக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பினை உறுதிசெய்யும்.
Tuesday, February 10, 2026

ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...தினமணி நடுப்பக்கக் கட்டுரை

உலகம் நாகரிகம் பெற்ற காலத்திலிருந்தே கல்வியும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மதிக்கப்பட்டனர். ஆசிரியப் பணி அறப்பணியாக மதிக்கப்பட்டது. புராண காலங்கள் என்றாலும், அறிவியல் காலங்கள் என்றாலும் சரி, ஆசிரியர் என்னும் குருமார்கள் அனைவராலும் வணங்கப்பட்டனர். குருமார்களின் திண்ணைப் பள்ளிகளிலேயே படிப்பிக்கப்பட்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே குருவிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்கள்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று புறநானூறு (183) பாடுகிறது. கற்பிக்கும் ஆசிரியருக்கு துன்பம் வரும்போது உதவி செய்தும், அவருக்குத் தேவையறிந்து பொருள் கொடுத்தும், வெறுப்பின்றி பணிவுடன் கற்றல் வேண்டும்.

பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே கல்வியும், ஆசிரியப் பணியும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வித் துறை தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டனர். ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன.

இப்போது, மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோல் தேர்வை நடத்துவது கிடையாது. 2022-ஆம் ஆண்டு நடத்தவேண்டிய தேர்வு கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

பணியில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்கள் குறைபாடுகளைக் கோரிக்கைகளாகத் தெரிவித்து அமைதி வழியில் போராட உரிமைப் படைத்தவர்கள். ஆனால் அவர்களை அடக்க முயல்வது நியாயம் இல்லை.

ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு கூறுகிறது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்? இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


தினமணி
Tuesday, February 10, 2026

“நான் தான் அப்பா, அம்மா” - அமைச்சர் அன்பில் மகேஷ்


“நான் தான் அப்பா, அம்மா”

"மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நான்கு நாளைக்கு அவர்களுக்கு நான் தான் அப்பா. நான் தான் அம்மா”




-அமைச்சர் அன்பில் மகேஷ்
Tuesday, February 10, 2026

அரசு மாதிரி பள்ளிகளில் அட்மிஷன் துவங்குகிறது

அரசு மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் மாதிரி பள்ளிகள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 2022ல் துவங்கப்பட்டது. நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி, உயர்கல்வியில் சேர ஊக்கம் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் மாதிரி பள்ளிகள் வழங்கி வருகிறது.

இத்தகைய பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அவ்வகையில், மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர் குறித்த விபரம் சேகரிக்க வேண்டும்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பிப்., இரண்டாவது வாரமே துவங்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; அட்மிஷன் துவங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
Tuesday, February 10, 2026

3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Tuesday, February 10, 2026

6 கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன: ஒப்பந்த செவிலியர்கள் 719 பேருக்கு பணி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூழலில் போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு வருகிற 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த செவிலியர்கள், கடந்த டிசம்பர் மாதத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2014 ஆம் ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது.
Tuesday, February 10, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற TRB தெளிவுரை கடிதம் - 4.2.2026


முதலமைச்சரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 006.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற தெளிவுரை வேண்டுதல் தொடர்பாக. :

அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் கல்வி எனில் தலைமையாசிரியர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் அலுவலருக்கு விண்ணப்பிக்கவும். அரசு நிதி உதவி பெறும். பள்ளியில் பணிபுரிபவர் எனில் நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.



TET Genuine Clarification From TRB - Download here
Tuesday, February 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

திருக்குறள்: 

குறள் 502: 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு.                         
விளக்க உரை: 

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி :

Knowledge is the real wealth.         

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே - வெப்ஸ்டர் 

பொது அறிவு : 

01.இந்திய தத்துவம்"" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 

 Dr. S. Radhakrishnan 

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள  அதிக வெப்பநிலையை அளவிடப்  பயன்படுவது எது?

       பைரோமீட்டர் 

Pyrometer 

English words :

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்: 

 தோப்பா‌ தோட்டமா? 
எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம்.
மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்
எ. கா : தென்னந் தோப்பு –நீண்ட கால பயன் தரும் மரம்
வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.
மாந்தோப்பு 
பூந்தோட்டம்
சவுக்குத் தோப்பு
மல்லிகைத் தோட்டம்

அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!  அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன்   ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான்.  வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். 

 பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

⭐சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

⭐டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⭐மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

⭐ISRO has Informed that the Landing Site for   Chandrayaan-4 Lander   has been found.

Covai women ICT_போதிமரம்

Monday, February 9, 2026

Monday, February 09, 2026

+2 அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE Proc +2 Internal Mark Uploading Instructions - Download here
Monday, February 09, 2026

புதிய தேர்வு தேதி TNPSC அறிவிப்பு.

புதிய தேர்வு தேதி



தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.

- TNPSC அறிவிப்பு.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் - TNPSC அறிவிப்பு.
Monday, February 09, 2026

Documents Required For NEET - UG 2026 Form Filling


Documents required for NEET-UG 2026 Form Filling

1) Passport Size Photo

2) Postcard Size Photo

3) Student's Signature in running handwritting

4) Fingerprints of all fingers of both hands (including thumb)

5) Class 10th Passing Certificate (Sanad for State Board & Regular Marksheet for CBSE)

6) Class 10th Marksheet (Pink Colored Marksheet for State Board & Regular Marksheet for CBSE)

7) Class 12th Marksheet (only for repeaters/droppers)*

8) Any Photo ID proof (Aadhar Card/PAN Card/ 12th Board Exam Admit Card/Bank Passbook)

9) Aadhar Card as Address Proof

10) Caste/EWS Certificate in Central Format or its reciept.


Exam Fee:

• OPEN: ₹1700

• OBC/EWS: ₹1600

👉🏻 Online Application Start: 08 February 2026

👉🏻 Last Date to Apply: 08 March 2026 (till 9:00 PM)

👉🏻 Last Date of Fee Payment: 08 March 2026 (till 11:50 PM)

👉🏻 Correction Window: 10 March to 12 March 2026
Monday, February 09, 2026

1/6/2006 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு

நண்பர்களே வணக்கம் 🙏

1/6/2026 சிறப்பு நிலை பெற உள்ள 2003, 2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..

இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்...

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

1) பணி நியமன ஆணை

2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை

3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)

4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை

5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை

இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)

இது தவிர

6) SSLC

7) HSC

8) UG

9) PG

10) B.Ed / D.T.Ed

கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...

1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..

அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...

உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ...

நன்று / போதும்

தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...

அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

செய்முறை தேர்வு

பொதுத் தேர்வு

சட்ட மன்ற தேர்தல்

மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...

ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍

தங்களின் முன் திட்டமிடல்

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை 8/2/26