Breaking

Friday, March 6, 2026

Friday, March 06, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format -  Download here


Term III Lesson Plan

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here
Friday, March 06, 2026

அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!


அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

அரசாணை எண்.05 -SMC Teachers Appointment - Download here
Friday, March 06, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2026




வலந்தீனா தெரெசுக்கோவா

 திருக்குறள்: 

குறள் 642: 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு 

விளக்க உரை: 

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பழமொழி :

Charity is a double blessing.   

 தருமம் தலை காக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.- அடால்ப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) 

02. உலகின் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 பிரேசில்-Brazil

English words :

Skirmish-: A small or short fight between small groups of soldiers, usually before a bigger battle.


Combat

: Fighting in a war or battle between armed forces.

அறிவியல் களஞ்சியம் :

காந்த துருவம் (Magnetic Pole): காந்தத்தின் வட அல்லது தென் முனைகள், காந்த வலிமை அதிகமுள்ள இடங்கள்.

காந்த புலம் (Magnetic Field): காந்தப் பொருள்கள் ஈர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி. 

மார்ச் 06

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.

நீதிக்கதை

 வெங்காயம்

ஒரு வீட்டில தக்காளி வெங்காயம் மற்றும் குச்சி ஐஸ் மூன்றும் நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் தக்காளிக்கு வெளிஉலகை சுற்றிபார்க்க ஆசை வந்தது.தக்காளி இப்படிச் சொன்னதும் வெங்காயம் சொல்லுச்சு அய்யோ நாம இங்கிருந்து வெளியே போவது நமக்கு பாதுகாப்பு இல்லை..அதனால நம்ம வீட்டிலேயே இருந்திடலாம்.

வெங்காயம் சொன்னதை தக்காளி கேட்கவே இல்லை.தக்காளி குச்சி ஐஸ் கூட்டி கிட்டு வெளியே கிளம்பிச்சு. வெங்காயம் அவங்கள தனியா போக வேண்டாம்னு சொல்லிட்டு வெங்காயமும் கூடவே போச்சு.

அது டிசம்பர் மாசம் கொஞ்சம் குளிராக இருந்தது.எல்லாரும் ஜாலியா வெளிய போய் விளையாடினாங்க.

இரண்டுமாதங்கள் கழித்து வெயில் காலம் வந்தது.

தக்காளி வெங்காயம் குச்சி ஐஸ் மூன்றுபேரும் எப்பவும் போல விளையாட வெளியே போனாங்க அப்போ வெயில் அதிகமா இருந்தது.வெயிலின் காரணமாக குச்சி ஐஸ் உருகிடுச்சு.

இதைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

நாம திருப்பி வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொல்லி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அந்தப் பையன் பந்தை தூக்கி போட்டான் .அந்தப் பந்து தக்காளியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த வெங்காயம் பந்தை தடுத்து நிறுத்தி தட்டி விட்டது.

பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தாலே நிறைய ஆபத்துகள் உள்ளன என்று எண்ணி இரண்டும் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தது. சாலையை கடக்க தக்காளியும் வெங்காயமும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு லாரி அங்கு வேகமாக வந்து கொண்டு இருந்தது.

இதை கவனிக்காத தக்காளி சாலையை கடக்கும் பொழுது லாரி தக்காளியின் மேல் ஏறியது..லாரி தக்காளியின் மேல் ஏறியதும் தக்காளி நசுங்கி செத்துப்போச்சு.

தன் நண்பனை காப்பாற்ற முடியலியே அப்படின்னு மிகவும் வருத்தத்தில் வெங்காயம் வீட்டிற்கு வந்தது..வீட்டிற்கு வந்த வெங்காயம் வருத்தத்தில் மிகவும் அழுதது.

அப்போ வெங்காயம் கடவுள் கிட்ட கேட்டு ஓ கடவுளே! என்னோட பிரெண்ட்ஸ்காக நான் அழுதேன்.நான் இல்லாம போனா எனக்காக வருத்தப்பட்டு அழுவதற்கு யாரு இருக்கா?.

அப்போ கடவுள் வெங்காயத்தின் முன்பு தோன்றி வெங்காயமே நீ வருத்தப்படாத.வெங்காயமே உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்.அதற்கான ஒரு வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன் என்று கடவுள் கூறினார்.

அதுக்குவெங்காயம்நான் இப்போ தனியாதானே இருக்கிறேன்.அதனால என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு திருப்பி கொடுங்க.அப்படின்னு சொல்லுச்சு.

உடனே கடவுள் நான் உனக்கு ஒரு புது நண்பனை கொடுக்கிறேன்.அவன் பெயர் மிளகாய்.மக்கள் உங்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் சேர்த்துதான் சமையலுக்கு எடுப்பார்கள் என்றுகூறினார்.

தன்னோட புது நண்பனோட வெங்காயம் சந்தோஷமா இருந்துச்சு.

இன்றைய செய்திகள்

06.03.2026

⭐சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

⭐போர் சூழல் எதிரொலி: ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

⭐கடலில் வலம் வரும் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகி ன்றன.தற்போது வரை 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

🏀மும்பை: ஐசிசி டி20 தரவரிசையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் பிரிவில் 25 இடங்களில் முன்னேறியுள்ளார்.

Today's Headlines


⭐ 
Madras High Court (Chennai High Court) has appointed 
Sushrut Arvind Dharmadhikari as the Chief Justice.

⭐ Due to the war situation, India is planning to purchase additional crude oil from Russia.

⭐ United States forces are shooting down Iran warships that are moving in the sea and sinking them. So far, 17 Iranian warships have reportedly been sunk.


🏀 Sports News

🏀 The 
ICC Men's T20 World Cup 2026 tournament has reached an exciting stage.
After the Super 8 round, India national cricket team, England cricket team, South Africa national cricket team, and New Zealand national cricket team have qualified for the semi-finals.

🏀 In International Cricket Council (ICC) T20 rankings, wicketkeeper Sanju Samson has moved up 25 places in the batting rankings

Covai women ICT_போதிமரம்

Thursday, March 5, 2026

Thursday, March 05, 2026

முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 05.03.2026.


முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 05.03.2026.

👇👇👇👇

DGE - Additional Instructions-2- Download here
Thursday, March 05, 2026

TRUST Exam - Selected Students List


TRUST தேர்வு முடிவுகள் - தெரிவுப்பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 06.122025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20.01.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர் 50 மாணவர் வெளியிடப்படுகிறது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியல் இன்று (05.03.2026) தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Other Examinations தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.

மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ/ மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

TRUST Selected Students List - Download here
Thursday, March 05, 2026

2025 டிசம்பர் 31க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியவில்லை - அரசு பள்ளி ஆசிரியை வழக்கு


தமிழக அரசுக்கு உத்தரவு

2025 டிசம்பர் 31க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியவில்லை என ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரேணுகாதேவி என்பவர் வழக்கு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Thursday, March 05, 2026

அறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் `அலைபேசி பயன்பாட்டு உறுதிமொழிச் சான்று` ஒப்படைக்க வேண்டும் - DGE செயல்முறைகள்!


அறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் `அலைபேசி பயன்பாட்டு உறுதிமொழிச் சான்று` ஒப்படைக்க வேண்டும் - DGE செயல்முறைகள்!

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மார்ச். 2026. பத்தாம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள். நிலையான பறக்கும் படையினர் அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும். ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தத்தம் கைப்பேசிகளை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும்.

2. ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாட்களை தேர்வர்களுக்கு வழங்கியபின், மீதமுள்ள வினாத்தாட்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தாள் மீதம் ஏதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் துறை முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். மீதமுள்ள வினாத்தாட்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்கவேண்டும்.

3. விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தான் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

👇👇👇👇👇👇

DGE - Additional Instructions to Chiefs - Proceedings - Download here

Thursday, March 05, 2026

1 லட்சம் பள்ளிகளில் 1.2 கோடி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு; நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு அப்டேட் கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் 1.2 கோடி மாணவர்களுக்கு, அவர்களது பள்ளி வளாகங்களிலேயே ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.


மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பில், நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஏதுவாக, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வரும் அக்டோபர் வரை இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோடிக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளி வளாகங்களிலேயே ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு உதவி செய்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்த பெரும் நடவடிக்கை 1.2 கோடி பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. 2025 செப்டம்பரில் பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களும், மாநில அலுவலகங்களும் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இப்பணிகளுக்காக 4 ஆயிரம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பணியை விரைவுபடுத்த மேலும் அதிக எண்ணிக்கையிலான எந்திரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஈடுபட்டுள்ளது. மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மூலம் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் ஆகிய பயன்களைப் பெற முடியும். போட்டித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளிலும் அவர்கள் பதிவு செய்ய இயலும். எனவே, மாணவர்களின் ஆதாரில் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களையும், காப்பாளர்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதுப்பித்து வருகிறது. 2025 அக்டோபர் முதல் ஓராண்டு காலத்திற்கு 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே எளிதாகக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU) நிறைவு செய்ய உதவியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான நடவடிக்கையின் மூலம், சுமார் 1.2 கோடி (12 மில்லியன்) பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே பயோமெட்ரிக் புதுப்பிப்பை முடித்துள்ளனர்.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) செயலியுடன் வெற்றிகரமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குப் பிறகு, செப்டம்பர் 2025-இல் பள்ளி மாணவர்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடங்கியது.

மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் UDISE+ அமைப்புடன் இணைக்கப்பட்டதன் மூலம், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலையை அறிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம், பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டிய மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளிலேயே முகாம்களை நடத்தி பணிகளை முடிக்க இது உதவியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் மண்டல மற்றும் மாநில அலுவலகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூட்டாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த மாணவர் நலன் சார்ந்த பணியைச் செயல்படுத்தி வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் இந்தப் பணிக்காக குறைந்தபட்சம் 4,000 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. பணிகளை மேலும் வேகப்படுத்த இந்த இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கும், நீட், ஜே.இ.இ, சி.யு.இ.டி (NEET, JEE, CUET) போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குப் பதிவு செய்யும்போதும் அங்கீகாரத்தைச் சுலபமாக்க உதவுகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்குமாறு UIDAI ஊக்குவித்து வருகிறது.

இந்த சிறப்புப் பணி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை, அக்டோபர் 1, 2025 முதல் ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது.

பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்கள் தவிர, மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு ஆதார் பதிவு மையங்கள் மற்றும் ஆதார் சேவா கேந்திராக்களுக்குச் சென்றும் தங்களது பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.” என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thursday, March 05, 2026

TAPS ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு - பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் இரண்டு தசாப்த கால போராட்டத்திற்கு ஒரு தீர்வாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை" கடந்த 03-01-2026 அன்று அறிவித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரியாக 50% தொகை ஓய்வூதியமாக உறுதியளிக்கப்படும்.

ஊழியர்களின் 10% பங்களிப்பு போக, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாதங்களுக்கு ஒருமுறை) அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்று வந்த தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், பணிக்காலத்தின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிப் பணிக்காலம் முழுமை பெறாதவர்களுக்கும், ஏற்கனவே சி.பி.எஸ் (CPS) திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்புக் குரல்: "இது ஓய்வூதியமே இல்லை!"

அரசு இந்தத் திட்டத்தை ஒரு மைல்கல்லாகக் கருதினாலும், ஜாக்டோ ஜியா உள்ளிட்ட ஊழியர் அமைப்புகள் இதனை கடுமையாகச் சாடியுள்ளன.

"உண்மையான ஓய்வூதியம் என்பது ஊழியர்களிடம் எதையும் பிடித்தம் செய்யாமல் அரசே வழங்குவதுதான். ஆனால், இந்தத் திட்டத்தில் எங்கள் பணத்தைப் பிடுங்கி அரசே வைத்துக்கொண்டு, அதன் மூலம் வரும் வட்டியை மட்டும் 'ஓய்வூதியம்' என்ற பெயரில் தருவது ஒரு மோசமான அணுகுமுறை," என்று ஜாக்டோ ஜியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) கிடைக்கும் மொத்தத் தொகை கூட இந்த புதிய முறையில் கிடைக்காது என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தத் திட்டம் தொடர்பாகத் தற்போது சட்டப் போராட்டமும் தொடங்கியுள்ளது. புதிய திட்டம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு (டிசம்பர் 2025) விருப்ப ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமல்படுத்தப்படும் தேதியால் தங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Thursday, March 05, 2026

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை - முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தன் விருப்பத்தின் படி தேர்வறையை விட்டு வெளியே செல்லலாம் - DGE செயல்முறைகள்


மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை - முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தன் விருப்பத்தின் படி தேர்வறையை விட்டு வெளியே செல்லலாம் - DGE செயல்முறைகள்

DGE Proceedings - Download here
Thursday, March 05, 2026

ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.03.2026

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.03.2026
Thursday, March 05, 2026

பள்ளி காலை வழிப்ட்டு செயல்பாடுகள் - 05.03.2026


திருக்குறள்: 

குறள் 606: 
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது.            

விளக்க உரை: 

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பழமொழி :

Take time by the forelock.  

 காலத்தே கடமையைச் செய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

உங்களை மேம்படுத்த நினைப்பவர்களுடன் மட்டுமே பழகுவது, உங்களுடைய சிறப்பு திறமைகளை வெளியே கொண்டு வருகிறது. - எபிக் டெட்டஸ்

பொது அறிவு : 

01.ஜப்பானிய தேசிய உடையின் பெயர் என்ன?

         கிமோனோ-Kimono

02.உலகின் மிக நீளமான குகை எது?

மாமத் குகை-Mammoth cave

அமெரிக்கா -America 

English words :

hostilities-acts of fighting or war between enemies.

conflagration-very large and destructive fire.

தமிழ் இலக்கணம்: 

 இன்று சில வாகனங்களின் தமிழ் பெயர்களைக் காண்போம்
பஸ் - பேருந்து
கார் - மகிழுந்து
ட்ரெயின் - தொடர் வண்டி
சைக்கிள் - மிதி வண்டி
இவைகள் நாம் அறிந்த தமிழ் பெயர்கள் தான்.
ஆனால் ரிக்க்ஷா, ஆட்டோ, பைக், லாரி, ஹெலிகாப்டர், வான் இவைகளின் பெயர் தெரியுமா? நாம் இதை உபயோகப் படுத்துவது இல்லை. எனவே தெரியாது. இன்று தெரிந்து கொள்வோம்
ரிக்க்ஷா –மிதியிழுவை
ஆட்டோ –தானி
பைக் –விசையுந்து
வேன் –மூடுந்து
லாரி – சரக்குந்து
ஹெலிகாப்டர் –உலங்கூர்தி
ஒரு வேளை இதை பயன்படுத்தா விட்டாலும் தெரிந்து வைத்திருப்பது நம் கடமை.

அறிவியல் களஞ்சியம் :

துருவ காந்தம் (Magnetic Pole) மற்றும் காந்தப் புலம் (Magnetic Field) இரண்டும் ஒன்றல்ல. ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. காந்தத்தின் வட/தென் முனைகள் துருவங்கள் எனப்படும் காந்தப் புலம் என்பது காந்தத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத காந்த விசைப்பகுதி ஆகும். காந்தப்புலம் துருவங்களில் வலிமையாக இருக்கும். 

மார்ச் 05


நீதிக்கதை

 அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.

ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் அது போகட்டும், பரவாயில்லை… என்று தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

இன்றைய செய்திகள்

05.03.2026

⭐ரயில்வே சட்டத்தின்படி, தண்டவாளங்கள் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் தண்டனையோ விதிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

⭐வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது.

⭐ ஈரானின் மினாப் நகரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மும்பையில் உள்ள வான்கடே
மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Today's Headlines

⭐ According to the Railway Act, those who fly kites near railway tracks may face up to 6 months of imprisonment, it has been announced.

⭐ As tension continues in the Gulf region, the Indian government has begun measures to evacuate nearly 10 million Indians living there.

⭐ In the city of Minab, Iran, 165 schoolgirls have reportedly been killed in an attack carried out by the U.S. military.

🏀 Sports News

🏀 In the second semi-final of the 2026 T20 World Cup to be held today at the Wankhede Stadium in Mumbai, the Indian team will face England.

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 4, 2026

Wednesday, March 04, 2026

மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை: உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
Wednesday, March 04, 2026

மாணவர் சேர்க்கை 2026-2027 - EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது கேட்கப்படும் தகவல்கள்.

EMIS வலைதளத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை பதிவு செய்யும் முறை

Student Admission Campaign -Students Admission Form (AY 2026-27)

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 2026-2027

Now open in EMIS Website






Wednesday, March 04, 2026

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

GENERAL PROVIDENT FUND - Withdrawal from the General Provident Fund Maximum limit Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules - Issued Notified.

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.46 - GPF Advance Amount Hike

👇👇👇

Wednesday, March 04, 2026

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கிடக் கோரியது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

TET SR Entry DEE Reg : CLICK DOWNLOAD