Tuesday, March 10, 2026
இன்றைய செய்திகள் 10.03.2026(செவ்வாய்க்கிழமை)
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2026

The childhood shows the man.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்
பொது அறிவு :
01.உலகின் மிக வேகமான பறவை
எது?
பெரெக்ரின் ஃபால்கன் -
Peregrine Falcon
02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?
பாதரசம் - Mercury
English words :
Grave-serious
Put up with -tolerate
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான் காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.
மார்ச் 10
நீதிக்கதை
வரும்முன் காப்போம்
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.
அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.
ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.
ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.
ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.
மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.
சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.
அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.
ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.
சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.
இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.
தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.
சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.
வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.
குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.
தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.
இன்றைய செய்திகள்
Monday, March 9, 2026
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026
2026-2027ஆம் கல்வி ஆண்டில் - 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

தேர்வு பணியில் உறுதிமொழி சான்று: ஆசிரியர்கள் எதிர்ப்பு
IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...

NEET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026
A good marksman may miss.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது
-----------------பிளாட்டோ
Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO
பொது அறிவு :
01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?
வெள்ளி -Venus
02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?
சூடான் -Sudan
English words :
Take off -remove or leave
Take on- accept responsibility
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.
பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).
தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன.
துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்
மார்ச் 09
நீதிக்கதை
நாவினால் சுட்ட வடு
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.
முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்
அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.
ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
இன்றைய செய்திகள்
Saturday, March 7, 2026
நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.3.2026
பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் பள்ளி வகை வாரியாக எவ்வளவு?

8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
| கிரேடு லெவல் | அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2) | சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? |
| லெவல் 1 | 36000 | 18,000.00 |
| லெவல் 2 | 39800 | 19,900.00 |
| லெவல் 3 | 43400 | 21,700.00 |
| லெவல் 4 | 51000 | 25,500.00 |
| லெவல் 5 | 58400 | 29,200.00 |
| லெவல் 6 | 70800 | 35,400.00 |
| லெவல் 7 | 89800 | 44,900.00 |
| லெவல் 8 | 95200 | 47,600.00 |
| லெவல் 9 | 106200 | 53,100.00 |
| லெவல் 10 | 112200 | 56,100.00 |
| லெவல் 11 | 135400 | 67,700.00 |
| லெவல் 12 | 157600 | 78,800.00 |
| லெவல் 13 | 237000 | 118,500.00 |
| லெவல் 13 | 262200 | 131,100.00 |
| லெவல் 14 | 288400 | 144,200.00 |
| லெவல் 15 | 364400 | 182,200.00 |
| லெவல் 16 | 410800 | 205,400.00 |
| லெவல் 17 | 450000 | 225,000.00 |
| லெவல் 18 | 500000 | 250,000.00 |
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
| கிரேடு லெவல் | அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2) | சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? |
| லெவல் 1 | 54000 | 36,000.00 |
| லெவல் 2 | 59700 | 39,800.00 |
| லெவல் 3 | 465100 | 43,400.00 |
| லெவல் 4 | 76500 | 51,000.00 |
| லெவல் 5 | 87600 | 58,400.00 |
| லெவல் 6 | 106200 | 70,800.00 |
| லெவல் 7 | 134700 | 89,800.00 |
| லெவல் 8 | 142800 | 95,200.00 |
| லெவல் 9 | 159300 | 106,200.00 |
| லெவல் 10 | 168300 | 112,200.00 |
| லெவல் 11 | 203100 | 135,400.00 |
| லெவல் 12 | 236400 | 157,600.00 |
| லெவல் 13 | 355500 | 237,000.00 |
| லெவல் 13 | 393300 | 262,200.00 |
| லெவல் 14 | 432600 | 288,400.00 |
| லெவல் 15 | 546600 | 364,400.00 |
| லெவல் 16 | 616200 | 410,800.00 |
| லெவல் 17 | 675000 | 450,000.00 |
| லெவல் 18 | 750000 | 500,000.00 |





