Breaking

Monday, March 9, 2026

Monday, March 09, 2026

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.
Monday, March 09, 2026

2026-2027ஆம் கல்வி ஆண்டில் - 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்


2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

* 31-07-2021 வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-08-2021 முதல் 31-08-2021 வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-09-2021 முதல் 31-12-2021 வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து விட்டு வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.
Monday, March 09, 2026

ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாதத்திற்கான ஊதியம் நிறுத்தப்பட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஆண்டு டிச., 26 முதல், சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்தனர்.அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி, 5ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தொடக்கக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.அதில், 'பணிக்கு வருகை தராமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊதியமில்லாத விடுப்பு பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.இந்த சூழலில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள், ஜன., 31ல் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.எனினும், போராட்டத்தில் பங்கேற்ற, 10,000க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தியுள்ளது.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய, ஆசிரியர்களின் ஊதியத்தை, அரசே நிறுத்தி வைத்துள்ளது. இது, ஆசிரியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, March 09, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here
Monday, March 09, 2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்

பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
Monday, March 09, 2026

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கோ.கற்பகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி 08.03.2026 முதல் மருத்துவ விடுப்பு - நிருவாக காரணங்களின் பொருட்டு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
Monday, March 09, 2026

தேர்வு பணியில் உறுதிமொழி சான்று: ஆசிரியர்கள் எதிர்ப்பு

பொதுத்தேர்வு பணியில் ஈடு படுவோரிடம், உறுதிமொழி சான்றில் கையெழுத்து பெறுவதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும் 11ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் அலைபேசிகளை, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டு, உறுதிமொழி சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. அந்த உறுதிமொழி படிவத்தில், 'தேர்வு பணியின் போது, தேர்வு மையத்துக்கு வருகை புரிந்ததில் இருந்து, பணி முடிந்து செல்லும் வரை, என் அலைபேசியில் இருந்து, தேர்வு வினாத்தாள் தொடர்பாக எந்த செய்தியையும் பகிரவில்லை என உண்மையாக உறுதியளிக்கிறேன்; எந்தவித களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடவில்லை' என கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி படிவத்துக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் அன்பழகன் கூறுகையில், ''தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் உறுதிமொழி சான்று கேட்பது ஏற்புடையதல்ல. இது, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. உறுதிமொழி பெறும் நடைமுறையை, பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவித்தார்.
Monday, March 09, 2026

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...


நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

GBM 2.0 - Download here

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.
Monday, March 09, 2026

NEET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

NEET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 11.03.2026 புதன்கிழமை இரவு 8.59 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணியிலிருந்து NEET இணையதள சேவை செயல்படவில்லை. இன்று இரவு சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
Monday, March 09, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026

யூரி ககாரின்

திருக்குறள்: 

அதிகாரம் 62 / CHAPTER 62 

 ஆள்வினை உடைமை 

குறள் 611: 

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

 விளக்க உரை: 

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பழமொழி :

A good marksman may miss. 

ஆனைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது

-----------------பிளாட்டோ

Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO

பொது அறிவு : 

01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

             வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

           சூடான் -Sudan

English words :

Take off -remove or leave

Take on- accept responsibility

தமிழ் இலக்கணம்: 

 தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்
1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)
      கடிகாரம் வேகமாக இயங்கியது
2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)
மின்விசிறி வேகமாக சுழல்கிறது
    தொடரும்...

அறிவியல் களஞ்சியம் :

நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன. 

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்

மார்ச் 09

யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்




சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

இன்றைய செய்திகள்

09.03.2026

⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்

⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 ஐசிசி T20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறையாக இந்திய  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

🏀 Sports News


🏀  ICC T20 World cup: India recorded a tremendous  victory against  Newzealand by 96 runs and became the Champion for the 3rd time.

🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.

Covai women ICT_போதிமரம்

Saturday, March 7, 2026

Saturday, March 07, 2026

நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.3.2026

நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை


ஈ.கே.எம்.அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி,ஈரோடு Ε.Κ.Μ.ABDUL GANI MATHARASA ISLAMIA HIGH SCHOOL, Erode

26 காவேரி ரோடு ,ஈரோடு . 638 001. Phone: 0424-2210349,

99524 84402


1.BT.ASST (TAMIL)

B.A., B.Ed., (TAMIL) TET PAPER-II PASSED

Male - 1


2. BT.ASST (MATHS)

B.Sc., B.Ed., (MATHS) TET PAPER-IT PASSED

Female -1


3. BT.ASST (SCIENCE)

B.Sc., B.Ed., (SCIENCE) TET PAPER-II PASSED

Male -1


4. DRAWING TEACHER

TTC PASSED

Female-1


Salary as Per Government Norms.

Interested Candidates can Submit your resume on or before 23.03.2026

Contact us: ekmmatharasaerode@gmail.com

Ph: 0424-2210349

Address: 26, Cauvery Road, Erode - 638001.
Saturday, March 07, 2026

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் பள்ளி வகை வாரியாக எவ்வளவு?

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் பள்ளி வகை வாரியாக எவ்வளவு?
Saturday, March 07, 2026

8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

8th Pay Commission Salary Hike: பல மாதங்களாக 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதிய விகிதங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய நேரம்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அறிவித்தது. எனினும் அதன் பிறகு பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நவம்பர் மாதத்தில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு சுமார் 18 மாதங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். 8வது ஊதியக் குழு 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ செயல்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Fitment Factor: அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

ஊழியர்களிடையே 8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த விவாதம் உச்சத்தில் உள்ளது. இப்போது, ​​தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FNPO) 8வது ஊதியக் குழு தொடர்பாக அரசாங்கத்திடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. சமீபத்தில், FNPO தேசிய கவுன்சிலுக்கு தங்கள் கோரிக்கைகளை தெளிவாகக் கூறி அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதத்தில், A, B, C மற்றும் D பிரிவுகளில் உள்ள அஞ்சல் ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை 3 முதல் 3.5 வரை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Salary Hike: சம்பள உயர்வை தீர்மானிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 -க்கு மேல் இருப்பது நாட்டின் பொருளாதார யதார்த்தத்துடன் ஒத்துப்போகாது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த பதிவில் 2 மற்றும் 3 ஆகிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் பியூன் முதல் IAS அதிகாரி வரை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒருவரின் அடிப்படை சம்பளத்தை மாற்றக்கூடிய ஒரு பெருக்கி ஆகும். அப்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுவதால், சம்பளம் எந்த விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான அங்கமாக அது உள்ளது. உதாரணமாக, 7வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் ​​6வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை சம்பளம் ₹7,440 ஆக இருந்த ஊழியரின் சம்பளம் ₹18,000 ஆக அதிகரித்தது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 13600018,000.00
லெவல் 23980019,900.00
லெவல் 34340021,700.00
லெவல் 45100025,500.00
லெவல் 55840029,200.00
லெவல் 67080035,400.00
லெவல் 78980044,900.00
லெவல் 89520047,600.00
லெவல் 910620053,100.00
லெவல் 1011220056,100.00
லெவல் 1113540067,700.00
லெவல் 1215760078,800.00
லெவல் 13237000118,500.00
லெவல் 13262200131,100.00
லெவல் 14288400144,200.00
லெவல் 15364400182,200.00
லெவல் 16410800205,400.00
லெவல் 17450000225,000.00
லெவல் 18500000250,000.00

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 15400036,000.00
லெவல் 25970039,800.00
லெவல் 346510043,400.00
லெவல் 47650051,000.00
லெவல் 58760058,400.00
லெவல் 610620070,800.00
லெவல் 713470089,800.00
லெவல் 814280095,200.00
லெவல் 9159300106,200.00
லெவல் 10168300112,200.00
லெவல் 11203100135,400.00
லெவல் 12236400157,600.00
லெவல் 13355500237,000.00
லெவல் 13393300262,200.00
லெவல் 14432600288,400.00
லெவல் 15546600364,400.00
லெவல் 16616200410,800.00
லெவல் 17675000450,000.00
லெவல் 18750000500,000.00
தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு தங்கள் கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டும் 60 பக்க கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இந்தக் கடிதத்தில், அவர்கள் அதிக சம்பள உயர்வை கோரியுள்ளனர்.

தேசிய அஞ்சல் அமைப்புகளின் பிற கோரிக்கைகள்:

- பே மேட்ரிக்ஸ் முறையில் மாற்றங்கள்,
- வருடாந்திர சம்பள உயர்வுகள்,
- அதிக கொடுப்பனவுகள்
- விரைவான பதவி உயர்வுகள்

NCJMC (தேசிய கவுன்சில் கூட்டு கண்காணிப்புக் குழு) பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தும் என்று FNPO உறுப்பினர் சிவாஜி வாசிரெட்டி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது, ​​ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு வரைவு தயாரிக்கப்படும். பின்னர் இந்த வரைவு 8வது ஊதியக் குழுவின் தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு அனுப்பப்படும்.
Saturday, March 07, 2026

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! 65 வயதிலேயே கூடுதல் பென்ஷன்? நாடாளுமன்ற குழு பரிந்துரை

மத்திய அரசு பென்ஷன் செய்திகள்: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 65 வயது முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான முக்கியமான பரிந்துரைகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. இது குறித்த விரிவான விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை காணலாம்.

ஓய்வூதியதாரர்களுக்கான மூன்று முக்கிய நற்செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில், ஓய்வூதியதாரர்களுக்கு நிதி ரீதியாக வலுசேர்க்கும் மூன்று முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
1. கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பு குறைப்பு

தற்போது 80 வயதிற்கு மேல் கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்தே வழங்க வேண்டும் என்ற பரிந்துரை.
2. மாநில அரசுகளின் முன்னுதாரணம்

ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளதால், மத்திய அரசுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

3. மருத்துவச் செலவுகளுக்கான நிதி பாதுகாப்பு

வயதான காலத்தில் அதிகரிக்கும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த உயர்வு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
வயது வாரியான ஓய்வூதிய உயர்வு: புதிய பரிந்துரை விவரம்

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு ஓய்வூதியதாரர் 80 வயதை எட்டும்போதுதான் அவரது அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் தொகை (Additional Pension) வழங்கப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றக் குழுவின் புதிய பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், 65 வயதிலிருந்தே படிப்படியாக இந்த உயர்வு கிடைக்கும்.

புதிய பரிந்துரையின் கீழ் எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய உயர்வு விகிதங்கள்65 வயது முதல் 70 வயது வரை - 5% கூடுதல் ஓய்வூதியம்
70 வயது முதல் 75 வயது வரை - 10% கூடுதல் ஓய்வூதியம்
75 வயது முதல் 80 வயது வரை - 15% கூடுதல் ஓய்வூதியம்
80 வயது பூர்த்தியான பின் - 20% கூடுதல் ஓய்வூதியம் (தற்போது அமலில் உள்ளது)

கூடுதல் ஓய்வூதியத் திட்டத்தின் அவசியம் என்ன?

ஓய்வூதியதாரர்கள் 60 வயதில் ஓய்வு பெறும்போது கிடைக்கும் நிதிநிலை, அவர்கள் 70 அல்லது 75 வயதை எட்டும்போது பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
பணவீக்கத்தைச் சமாளித்தல்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், பழைய ஓய்வூதியத் தொகை அன்றாடத் தேவைகளுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.
மருத்துவச் செலவுகள்

65 வயதிற்குப் பிறகு உடல்நலக் குறைபாடுகள் அதிகரிப்பதால், தனியார் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
நிதி சுதந்திரம்

மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், முதியோர் தங்களின் கௌரவமான வாழ்வைத் தொடர இந்த 5% முதல் 15% வரையிலான இடைக்கால உயர்வு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
அரசின் நிலைப்பாடு மற்றும் சவால்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றக் குழு இந்த பரிந்துரையை முன்வைத்து வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நிதிச் சுமையைக் (Fiscal Burden) காரணம் காட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் காட்டி வருகிறது.

சுமார் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ள நிலையில், இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு ஆண்டுக்குச் சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஆனால், ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் சங்கங்கள், "முதியோர்களின் வாழ்வாதாரம் அரசின் கடமை" என்பதை வலியுறுத்தி வருகின்றன.
கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?

ஏற்கனவே ராஜஸ்தான் அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கு 75 வயதிலிருந்தே கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் இமாச்சலப் பிரதேசமும் முதியோர் நலனில் அக்கறை காட்டி வருகிறது. இத்தகைய மாநிலங்களின் செயல்பாடுகள், மத்திய அரசு விரைவில் ஒரு சாதகமான முடிவை எடுக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை

மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், அது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும். 80 வயது வரை காத்திருக்காமல், தாராளமான நிதி உதவியை 65 வயதிலேயே பெறுவது அவர்களுக்கு முதுமையில் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வரும் என மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கிறார்கள்.
Saturday, March 07, 2026

பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்

அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.
Saturday, March 07, 2026

TRB நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு

டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திர மோகன் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணி​யிடங்​களில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களை நியமிக்க ஏது​வாக நேரடி நியமன தேர்​வு​களில் பகு​திநேர பணிக்​காலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு அவர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் அளிக்​கப்​படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​தார்.

இதைத்​தொடர்ந்​து, அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பணி​யாற்​றிவரும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒவ்​வொரு பணி ஆண்​டுக்கும் ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​சம் 15 மதிப்​பெண் வழங்​கு​மாறு அரசுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் கருத்​துரு அனுப்​பி​னார்.

அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்​தில் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒரு ஆண்​டுக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​ச​மாக 15 சிறப்பு மதிப்​பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இந்த சிறப்பு மதிப்​பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணி​யில் இருக்​கும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​போல், இந்த நடை​முறை அடுத்த 5 பணிநியமன தேர்​வு​களுக்​குப் பின்​பற்​றப்​படும். இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

ஓவி​யம், தையல், இசை, உடற்​கல்வி உள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்​துக்கு தற்​போது மொத்​தம் 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது. இதில் 95 மதிப்​பெண் எழுத்​துத் தேர்​வுக்​கானது.

எஞ்​சிய 5 மதிப்​பெண் வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்கு வழங்​கப்​படும். எழுத்​துத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும்​போது வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்​கான (சீனி​யாரிட்​டி) மதிப்​பெண் வழங்​கப்​படும்.

அந்த வகை​யில் தற்​போது சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு வரும்​ போது வேலை​வாய்ப்பு பதிவு மூப்​புக்​கான மதிப்​பெண்​ணுடன் கூடு​தலாக சிறப்பு மதிப்​பெண்​ணாக 15 வழங்​கப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.
Saturday, March 07, 2026

வகுப்பறையில் ஆசிரியரை தாக்கிய மாணவன் - ஆசிரியர்கள் அதிர்ச்சி


ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் பாபுலபாடு பகுதியில் உள்ள வீரவள்ளியில் ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பள்ளி ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார்.

அதோடு சரியாகப் படிக்காததால் மற்ற மாணவர்களுடன் சேர்த்து, இந்த மாணவனையும் வகுப்பு வெளியே உட்கார வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் ஆசிரியரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர் நெஞ்சை பிடித்துக்கொண்ட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக்கண்டு, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவன் மீண்டும் ஆசிரியரைத் தாக்க முயன்றபோது, அருகில் இருந்த மாணவர்கள், அந்த மாணவனை இழுத்துப் பிடித்தனர்.

இதையடுத்து, அந்த மாணவன் இன்னும் சில மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியில் இருந்து வெளியேறினார். பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், ஆசிரியரையே கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மறுபுறம், சம்பந்தப்பட்ட மாணவன் உட்பட மூன்று மாணவர்கள் பள்ளி வளாகத்தில் புகைபிடித்ததாக ஆய்வக உதவியாளர், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Saturday, March 07, 2026

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு.


யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு.

2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்.

தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்காக (IAS, IPS, IFS) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 2ஆம் இடம் பெற்றுள்ளார்.
Saturday, March 07, 2026

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதி நேர பயிற்றுநர்களை நியமனம் செய்ய, பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் - அரசாணை வெளியீடு!


School Education - Part time instructors working on consolidated pay under Samagra Shiksha Awarding of special weightage marks in Teachers Recruitment Board examinations for the post of Special Teachers - Orders

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதி நேர பயிற்றுநர்களை நியமனம் செய்ய, பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.61 - Weightage Marks to PTI - Download here