LESSON PLAN
Sunday, January 18, 2026
Sunday, January 18, 2026
GENERAL NEWS
Sunday, January 18, 2026
RAC தொல்லை இல்லை.. இனி புக் செய்தாலே கன்பார்ம் டிக்கெட்! ரயில் டிக்கெட்களில் வரும் மிக பெரிய மாற்றம்
இந்திய ரயில்வே பல புதிய ரயில்களை வரிசையாக அறிமுகப்படுத்தும் நிலையில், இந்த மாதம் அமிர்த பாரத் 2.0 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமிர்த பாரத் ரயில்களில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாதிரியான மாற்றம்.. இதனால் யாருக்கு நன்மை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய ரயில்வே தொடர்ச்சியாகப் பல புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த மாதம் பல புதிய ரூட்களில் புதிய அமிர்த பாரத் 2.0 ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இந்த ரயில்களுக்கான பயணக் கட்டண அமைப்பு மற்றும் புக்கிங் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
டிக்கெட் ரேட் உயரும்
புதிய விதிகளின்படி, அடிப்படை பயணக் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. ஆனால், குறைந்தபட்சப் பயணத் தூரத்திற்கான விதிகளில் சில முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குறைந்தபட்சம் 200 கி.மீ. தூரத்திற்கான கட்டணமாக ரூ.149 செலுத்த வேண்டும். இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கு குறைந்தபட்சம் 50 கி.மீ.க்கான கட்டணமாக ரூ.36 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்பதிவுக் கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும்.
அதாவது ஒரு பயணி 100 கி.மீ. மட்டுமே பயணம் செய்தாலும் கூட, படுக்கை வசதிப் பெட்டியில் 200 கி.மீ. தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல ஒருவர் 2ம் வகுப்பு பெட்டியில் 20 கிமீ பயணத்தாலும் கூட அவர் 50 கிமீ பயணம் செய்ததற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் குறுகிய தூரம் செல்வோருக்கான கட்டணம் சற்றே உயரலாம்.
ஆர்ஏசி இல்லை
மேலும், அமிர்த பாரத் II எக்ஸ்பிரஸின் படுக்கை வசதிப் பெட்டிகளின் புக்கிங்கில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்ஏசி (RAC - Reservation Against Cancellation) டிக்கெட்டுகள் இனி இருக்காது. முன்பதிவு சமயத்தில் அனைத்து புக்கிங்கிலும் கன்பார்ம் செய்யப்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்படும். டிக்கெட்கள் முடிந்தவுடன் நேரடியாகக் காத்திருப்பு பட்டியலுக்குப் போகும். இடையில் ஆர்ஏசி இருக்காது.
பொதுவாக ஆர்ஏசி டிக்கெட்கள் இருந்தால் ஒருவர் ரயிலில் பயணிக்கலாம். ஆனால், அவர்களுக்கு முழு பெர்த் கிடைக்காது. ஆர்ஏசி டிக்கெட் இருக்கும்போது ஒரே பெர்த்தில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்க வேண்டி இருக்கும். கன்பார்ம் பயணிகள் யாராவது ரத்து செய்தால் மட்டுமே RAC பயணிகளுக்கு பெர்த் கிடைக்கும். இல்லையென்றால் இரவு முழுக்க அமர்ந்தபடியே பயணிக்க வேண்டி இருக்கும்.
முக்கிய மாற்றம்
முழு கட்டணம் செலுத்திய பிறகும் ஏன் அமர்ந்து கொண்டே செல்ல வேண்டும். இந்த ஆர்ஏசி முறையில் லாஜிக்கே இல்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். கன்பார்ம் செய்த டிக்கெட்கள் இல்லையென்றால் காத்திருப்பு பட்டியல் என மாற்ற வேண்டும். இடையில் ஆர்ஏசி இருக்கக்கூடாது என்ற விமர்சனங்களும் சமீபத்திய நாட்களில் அதிகரித்தன. அதைத் தொடர்ந்தே இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கு வரவேற்பு இருந்தால் இதே நடைமுறை மெல்ல மற்ற ரயில்களிலும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
மேலும், பொதுவாக ரயில்களில் சில சிறப்பு ஒதுக்கீடுகள் இருக்கும். புதிய அமிர்த பாரத் ரயில்களில் 3 சிறப்பு ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்குமாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். இந்த ரயிலில் மற்ற சிறப்பு ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோவர் பெர்த் ரூல்ஸ்
மூத்த குடிமக்களுக்கும், குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கும் கீழ் படுக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோவர் பெர்த் வழங்க முன்னுரிமை தரப்படும். அதேநேரம் இந்தப் பிரிவினருக்கு நிச்சயம் லோவர் பெர்த் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. புக் செய்யும்போது இந்த வகை சீட்கள் இருந்தால் அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் தானியங்கி முறையிலேயே கிடைக்கும்.
அதேபோல இப்போது ரத்து செய்யப்படும் டிக்கெட்களின் தொகை மீண்டும் வங்கிக் கணக்கில் வர 5 முதல் 7 நாட்கள் ஆகும் நிலையில், அது இந்த அமிர்த பாரத் ரயில்களில் 24 மணி நேரமாக குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பச் செய்திகள்
Sunday, January 18, 2026
பழைய ஈமெயில் ஐடி பிடிக்கலையா?" கவலை வேண்டாம்! டேட்டா அழியாமல் ஜிமெயில் முகவரியை மாற்றலாம்
Gmail கூகுள் பயனர்கள் இனி தங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளலாம். பழைய மெயில், புகைப்படங்கள் மற்றும் டேட்டா எதுவும் அழியாமல் இதை எப்படிச் செய்வது?
முழு விவரம் உள்ளே.
"சிறு வயதில் விளையாட்டாக வைத்த ஜிமெயில் ஐடி இப்போது அவமானமாக இருக்கிறதா? மாற்ற நினைத்தால் எல்லா டேட்டாவும் போய்விடுமே என்று கவலையா?" இனி அந்தக் கவலை தேவையில்லை!
பலரும் பள்ளி, கல்லூரி காலங்களில் cooldude123@gmail.com அல்லது angelpriya@gmail.com என்பது போன்ற விசித்திரமான பெயர்களில் ஜிமெயில் கணக்கை உருவாக்கியிருப்போம். ஆனால், வேலைக்குச் செல்லும்போது அந்த ஐடி-யைப் பயன்படுத்தத் தயக்கமாக இருக்கும். புதிய அக்கவுண்ட் தொடங்கினால், பழைய மெயில்கள், டிரைவ் பைல்கள் (Google Drive Files) மற்றும் போட்டோக்கள் (Photos) எல்லாம் போய்விடுமே என்ற பயம் இருக்கும்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கூகுள் நிறுவனம் இப்போது கொண்டு வந்துள்ளது.
கூகுளின் புதிய அறிவிப்பின்படி, நீங்கள் புதிய அக்கவுண்ட் உருவாக்காமலேயே, உங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Username) மாற்றிக்கொள்ள முடியும்.
மிக முக்கியமாக, இப்படி மாற்றும்போது உங்கள் பழைய அக்கவுண்டில் உள்ள:
• ஈமெயில்கள் (Emails)
• கூகுள் போட்டோஸ் (Photos)
• கூகுள் டிரைவ் கோப்புகள் (Files)
• அக்கவுண்ட் ஹிஸ்டரி (History)
எதுவுமே அழியாது. அனைத்தும் அப்படியே இருக்கும்!
நீங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றியதும், உங்களின் பழைய முகவரி ஒரு 'Alias' (மாற்றுப் பெயர்) ஆக மாறிவிடும்.
• உங்கள் பழைய முகவரிக்கு யாராவது மெயில் அனுப்பினால், அது உங்கள் புதிய முகவரிக்கே வந்து சேரும்.
• ஜிமெயில், யூடியூப் (YouTube), மேப்ஸ் (Maps) என எதில் லாகின் (Login) செய்யவும் பழைய அல்லது புதிய ஐடி இரண்டையுமே பயன்படுத்தலாம்.
• உங்கள் பழைய முகவரியை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. அது உங்களுடனே இணைந்திருக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்தும் முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:
1. வருடத்திற்கு ஒரு முறை: ஜிமெயில் முகவரியை மாற்றினால், அடுத்த ஓராண்டிற்கு அதை மீண்டும் மாற்றவோ அல்லது புதிய ஐடியை நீக்கவோ முடியாது.
2. வரம்பு: ஒரு அக்கவுண்டில் அதிகபட்சம் 4 ஜிமெயில் முகவரிகள் வரை இணைக்கலாம்.
3. பழைய காலண்டர்: கூகுள் காலண்டரில் (Google Calendar) ஏற்கனவே உருவாக்கப்பட்ட சில பழைய நிகழ்வுகளில் பழைய மெயில் ஐடியே தொடர்ந்து காட்டப்படலாம்.
இந்த வசதி தற்போது படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்குக் கிடைத்துள்ளதா என்று பார்க்கவும், மாற்றவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
1. உங்கள் மொபைல் அல்லது கணினியில் myaccount.google.com/google-account-email என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
2. இடதுபுறம் உள்ள 'Personal info' என்பதை கிளிக் செய்யவும்.
3. 'Email' என்பதைத் தேர்வு செய்து, அதில் 'Google Account email' என்பதற்குள் செல்லவும்.
4. அங்கே 'Change Google Account email' என்ற பட்டன் இருந்தால், அதை கிளிக் செய்யவும். (இந்த பட்டன் இல்லை என்றால், உங்களுக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை என்று அர்த்தம்).
5. உங்களுக்குப் பிடித்த புதிய ஜிமெயில் ஐடியை டைப் செய்து, அது கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும்.
6. 'Change email' என்பதைக் கொடுத்து உறுதி செய்யவும்.
அவ்வளவுதான்! உங்கள் பழைய குப்பைகள் எதுவும் தொலையாமல், புதிய ஐடிக்கு மாறிவிட்டீர்கள்.
இந்த வசதி இன்னும் அனைத்துப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
வங்கிச் செய்திகள்
Sunday, January 18, 2026
பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. இனி ரூ.25,000 மேல கட்டணம்.. முக்கிய மாற்றங்கள் அமல்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆனது பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை விதித்துள்ளது.
ரூ.25,000 மேல் பணத்தை அனுப்பும்போது கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அக்கவுண்ட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
எஸ்பிஐ அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும். ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை (IMPS Transactions) செய்யும்போது மட்டுமே புதிய கட்டணம் இருக்கும். இதிலும் மத்திய அரசு ஊழியர்கள், குடும்ப அக்கவுண்ட்கள் போன்றவற்றுக்கு விலக்கு இருக்கிறது. பொதுத்துறை பேங்கில் கட்டணம் வந்ததால், தனியார் பேங்குகளுக்கும் வரலாம்.

1. புதிய ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் (New IMPS Transactions Charges)
* ஆன்லைன் அல்லது கிளை சேனல் வழியாக ரூ.1,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
* ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்தால் கட்டணம் கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
* ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் ஆன்லைன் வழியாக பணத்தை அனுப்பினால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி செலுத்த வேண்டும். மேலும், கிளை சேனல் வழியாக பணத்தை அனுப்பினால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

* ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்தால் ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
* ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்தால் ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி செலுத்த வேண்டும். கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
2. புதிய ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்களில் விலக்கு
* பாதுகாப்பு சம்பள தொகுப்பு (Defence Salary Package), மத்திய ஆயுத காவல் சம்பள தொகுப்பு (Central Armed Police Salary Package), மத்திய அரசு சம்பள தொகுப்பு (Central Government Salary Package), காவல்துறை சம்பள தொகுப்பு (Police Salary Package), ரயில்வே சம்பள தொகுப்பு (Railway Salary Package) ஆகிய அக்கவுண்ட்களுக்கு புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது.
* சௌர்யா குடும்ப பென்சன் அக்கவுண்ட்களுக்கு (Shaurya Family Pension Accounts) புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது. மேலும், கார்ப்பரேட் சம்பள தொகுப்பு (Corporate Salary Package), மாநில அரசு சம்பள தொகுப்பு (State Government Salary Package), ஸ்டார்ட் அப் சம்பள தொகுப்பு (Start Up Salary Package) ஆகிய அக்கவுண்ட்களுக்கும் புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது.
* மேலும், எஸ்பிஐ ரிஷ்தே (SBI RISHTEY) என்கிற பேமிலி சேவிங் அக்கவுண்ட்களுக்கும் (Family Savings Account) இந்த புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் பொருந்தாது. ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் வழியாக ரூ.5,00,000 வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இது நெப்ட் (NEFT) பரிவர்த்தனையை போல்லல்லாமல் உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும். தனியார் பேங்குகளுக்கு கட்டணம் இருக்கலாம்.
Employment News
Sunday, January 18, 2026
தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை..!! ரூ.29,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிகளுக்கான பெரிய வாய்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படலாம். எழுத்துத் தேர்வு இன்றி 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். BPM, ABPM, தபால் சேவகர் பதவிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு indiapostgdsonline.gov.in தளத்தில் வெளியாகும்.
வங்கிச் செய்திகள்
Sunday, January 18, 2026
UPI மூலம் EPF பணம் – ஏப்ரல் முதல் அமல்.
EPFO உறுப்பினர்கள், தங்களின் EPF பணத்தை நேரடியாக UPI மூலம் வங்கிக் கணக்கில் பெறும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPF தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தக்கவைக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள பெரும்பகுதி தொகையை UPI வழியாக தங்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EXAMS
Sunday, January 18, 2026
JEE MAINS - 2026 (Session - 1) Admit card released

JEE தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
JEE MAINS - 2026 (Session - 1) Admit card released
📌Jee mains -1 session 2026
Available Now: Admit cards for exams on Jan 21, 22, and 23.
📌Coming Soon: Admit cards for exams on Jan 24, 28, and 29 (expected Jan 19 or 20).
https://examinationservices.nic.in/JeeMainx2026/downloadadmitcard/LoginPWD.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBqfcvMYv/FHq/Da9QEnq781
Available Now: Admit cards for exams on Jan 21, 22, and 23.
📌Coming Soon: Admit cards for exams on Jan 24, 28, and 29 (expected Jan 19 or 20).
https://examinationservices.nic.in/JeeMainx2026/downloadadmitcard/LoginPWD.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBqfcvMYv/FHq/Da9QEnq781
SMC
Sunday, January 18, 2026
SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு
Proceedings - SMC-Part A -District level HMs Training-38 Districts -reg
👇👇👇
Employment News
Sunday, January 18, 2026
RBI Recruitment: இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு.
Saturday, January 17, 2026
உடல்நலம்
Saturday, January 17, 2026
உணவு பழக்கம் பழமொழி வடிவில்
காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.
உணவு பழக்கம் பழமொழி வடிவில்
காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும்
அவசர சோறு ஆபத்து
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
இருமலை போக்கும் வெந்தயக் கீரை
உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
சூட்டை தணிக்க கருணை கிழங்கு
ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
வாத நோய் தடுக்க அரைக் கீரை
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
பருமன் குறைய முட்டைக்கோஸ்
பித்தம் தணிக்க நெல்லிக்காய்
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”
உணவு பழக்கம் பழமொழி வடிவில்
காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும்
அவசர சோறு ஆபத்து
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
இருமலை போக்கும் வெந்தயக் கீரை
உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
சூட்டை தணிக்க கருணை கிழங்கு
ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
வாத நோய் தடுக்க அரைக் கீரை
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
பருமன் குறைய முட்டைக்கோஸ்
பித்தம் தணிக்க நெல்லிக்காய்
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”
Saturday, January 17, 2026
எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!
எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!
`ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்
வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.
மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக் காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி
உடல்நலம்
Saturday, January 17, 2026
நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்
நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்நாக்கில் வரும் புண்கள் வலி தரும் திறந்த காயங்கள். இதனால் சாப்பிடவும், பேசவும், விழுங்கவும் சிரமம் ஏற்படும். பெரும்பாலும் இவை ஆபத்தில்லாதவை; சில நாள்களில் தானாகவே குணமாகிவிடும். சரியான பராமரிப்பு செய்தால் வலி குறையும், சீக்கிரம் ஆறும், மீண்டும் வருவதும் குறையும்.
நாக்கு புண் வருவதற்கான பொதுவான காரணங்கள்→ கூர்மையான பல், பிரேஸஸ், அல்லது தவறுதலாக நாக்கை கடித்தல்
→ இரும்புச்சத்து, வைட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் குறைபாடு
→ மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்), தூக்கமின்மை
→ வைரஸ் தொற்று
→ அடிக்கடி வரும் வாய்ப்புண்கள் (Aphthous ulcers)
→ காரம், சூடு, புளிப்பு உணவுகள்
---
உடனடி பராமரிப்பு & வலி குறைக்கும் முறைகள்→ எரிச்சல் தரும் உணவுகளை தவிர்க்கவும்
காரம், சூடு, புளிப்பு, கடினமான உணவுகளை சாப்பிடாதீர்கள் – வலி அதிகரிக்காமல் இருக்கும்.
→ மெதுவாக பல் துலக்கவும்
மென்மையான பிரஷ் பயன்படுத்துங்கள். புண் இருக்கும் இடத்தில் பலமாக தேய்க்காதீர்கள்.
→ வலி குறைக்கும் ஜெல் பயன்படுத்தலாம்
சாப்பிடும் போது, பேசும் போது வலி குறையும். மருத்துவர் சொன்னபடி மட்டும் பயன்படுத்தவும்.
---
மருந்துகள் & மேலே தடவும் சிகிச்சைகள்→ ஆண்டிசெப்டிக் மவுத் வாஷ்
பாக்டீரியா வளராமல் தடுக்க உதவும். ஆல்கஹால் இல்லாததை பயன்படுத்துங்கள்.
→ ஸ்டீராய்டு ஜெல் (மருத்துவர் ஆலோசனையுடன்)
அழற்சியை குறைத்து சீக்கிரம் குணமாக உதவும்.
→ பாதுகாப்பு பேஸ்ட்
புண் மேல் ஒரு மெல்லிய படலம் போல இருந்து உணவு, உமிழ்நீர் எரிச்சலிலிருந்து பாதுகாக்கும்.
---
உணவுச்சத்து ஆதரவு→ வைட்டமின் குறைபாடுகளை சரி செய்யவும்
இரும்பு, வைட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளவும்.
→ மென்மையான, சத்தான உணவுகள் சாப்பிடவும்
புண் காயாமல் உடலுக்கும் சத்தும் கிடைக்கும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய பராமரிப்பு→ உப்பு நீர் குளுகுளுப்பு
வலி குறையவும், குணமாவதற்கும் உதவும்.
→ நிறைய தண்ணீர் குடிக்கவும்
வாயின் உள்ளே ஈரமாக, ஆரோக்கியமாக இருக்கும்.
→ மனஅழுத்தத்தை குறைக்கவும்
ஸ்ட்ரெஸ் காரணமாக புண்கள் மீண்டும் மீண்டும் வரலாம்.
எப்போது மருத்துவரை காண வேண்டும்?→ 2 வாரங்களுக்கு மேலாக புண் ஆறாமல் இருந்தால்
→ மிகவும் பெரியது, ஆழமானது, அல்லது அதிக வலி இருந்தால்
→ அடிக்கடி புண் வந்து, உடல் சோர்வு அல்லது எடை குறைவு இருந்தால்
→ காய்ச்சல், விழுங்க முடியாத நிலை இருந்தால்.
GENERAL NEWS
Saturday, January 17, 2026
பெண்கள் பற்றிய மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்
• பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்
• உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்
• கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே
• நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.
• நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
• 99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்
• 12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்
• நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு
• நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல் போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம்
• உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்
• ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.
• நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும்
• ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்
• பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.
• கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்
• ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும்
• போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்
• நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்
• இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள்
• ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்
• நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்
• ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார். ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்
• ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்
• 28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.
• உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்
• அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே
• நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்
• நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்
• ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை
• நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான். நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது
• ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது
• சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்
• நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்
• உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்
• மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்
• ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது
• மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்
• ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள். அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்
• ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம்
• 40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்
• நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது
• "நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்
• புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்
• நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்
• 6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்
• ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்
• ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்
• அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்
• நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்
• 10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்
• ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
உடல்நலம்
Saturday, January 17, 2026
தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!
தும்பைப் பூவை பற்றி அறியாதவர்கள் எவரும் இலர்...
தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
1. தும்பை பூவை , பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்.
2. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்.
தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!
3. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்.
4. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி,எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்.
5. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.
6. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்.
7. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்று விடும்.
உடல்நலம்
Saturday, January 17, 2026
ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?
நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் நலன் சீர்கெட முக்கிய காரணிகளாக இருக்கின்றன. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன…!
நீங்கள் முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த விகிதத்தில் நீங்கள் உலர்ந்த திராட்சை மற்றும் நீரை கலக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம். ஆம், அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்.
பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.
அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்....
GENERAL NEWS
Saturday, January 17, 2026
இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..? மிரட்டும் அமானுஷ்யங்கள்..
எப்போதுமே பிரம்மாண்டமான கோட்டைகளைப் பார்க்கும் எவர்க்கும் பிரமிப்பு ஏற்படுவது இயல்பு. உள்ளே நுழைந்து அணுஅணுவாக சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது ‘எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாந்திருக்காங்கே..’ என்று நமக்குள் ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் சில கோட்டைகளில் ‘அமானுஷ்யங்களால்’ நிரம்பி இருப்பதாகச் சொல்லிப் பயமுறுத்தும் கோட்டைகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு கோட்டையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
மஹாராஷ்டிராவில் ‘மாத்தேரான்’ ‘பன்வெல்’ என்ற இடங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது இந்த 'ப்ரபால்கர் கோட்டை. இது இந்தியாவில் உள்ள மிகவும் பயங்கரமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால். இருட்டியதும் யாரும் இந்த கோட்டையைப் பார்க்கப் போக மாட்டாங்களாம்! போனால் உசுரோட திரும்ப முடியாது என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் அந்தக் கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமத்து ஆட்கள்.
இந்தக் கோட்டை 2300 அடி உயரம் உள்ள ஒரு மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு சிலரே வருகைதருவதாகவும், அவர்களும் இருட்டுவதற்குள் அங்கிருந்து திரும்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பயமுறுத்தும் காரணங்கள் இருந்தாலும், அங்கு மின் வசதி, தண்ணீர் வசதி என எதுவும் இல்லாததும் ஒரு காரணம். தவிர, இந்தக் கோட்டைக்கு போகும் பாதைகள் மிகவும் செங்குத்தான மலைகள் மீது அமைந்திருப்பதால் அவ்வளவு எளிதாகப் போக முடியாது.
அதுமட்டுமன்றி, மெல்ல இருட்டத் தொடங்கியதும் ஒருவித மயான அமைதி நிலவுவதால் அந்த சூழலே மிகவும் பயங்கரமாக இருக்கும். இந்த கோட்டையை பார்ப்பதற்கு மலையில் ஏறுவதற்கு பாறைகள் மீது படிக்கட்டுகள் மாதிரி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதில் எந்த பிடிமானமும், கயிறுகளும் இல்லை என்பது இன்னும் கிலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது! அதில் ஏறும்போது கொஞ்சம் சறுக்கினாலும் அப்படியே 2300 அடி ஆழத்தில் இருக்கும் குழிக்குள் விழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் யார்தான் அங்கே இரவில் போவார்கள் !?
இந்த கோட்டைக்கு போனவர்களில் பலர் கவணம் தவறி இறந்திருப்பதாகவும் கணக்குச் சொல்கிறார்கள். இந்தக்கோட்டைக்கு முன்பு 'முரஞ்சன் கோட்டை' என்ற பெயர் இருந்ததாகவும், அதன்பின் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் அவரின் ஆட்சியில் இந்த கோட்டைக்கு 'ராணி கலாவந்தி' என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நான் பார்க்காத கோட்டையா … மார்தட்டிக்கொள்ளும் ஆட்கள் மட்டும் நேரமும் தைரியமும் இருந்தால் ஒருமுறை விசிட் அடிக்கலாம். கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும் போது… வேற லெவல்!
உடல்நலம்
Saturday, January 17, 2026
சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...
கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை போதுமான அளவு உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் , வரும் முன் காப்போம் என்பது அறியாமல் இருந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.
தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஒரு முறை கல் உருவாகி விட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும்.
தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.
உடல்நலம்
Saturday, January 17, 2026
உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்
உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல் “எக்ஸ்ட்ராசெல்யுலர் வெசிக்கிள்ஸ்” (Extracellular Vesicles) என்று அழைக்கப்படும் மிக மிக சிறிய பைகள் போன்ற துகள்களை இரத்தத்தில் வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த சிறிய துகள்கள், மூளையில் புதிய நரம்பு செல்கள் (brain cells) உருவாக முக்கிய பங்கு வகிக்கலாம் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
எலிகளில் நடந்த ஆய்வு
சுதந்திரமாக ஓடிய (உடற்பயிற்சி செய்த) எலிகளில் இருந்து இந்த வெசிக்கிள்ஸ்களை விஞ்ஞானிகள் சேகரித்தார்கள்.
அவற்றை உடற்பயிற்சி செய்யாத மற்ற எலிகளுக்கு செலுத்தினார்கள்.
அதனால், அந்த எலிகளின் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் (நினைவு மற்றும் கற்றலுக்கு முக்கியமான பகுதி) பகுதியில்
புதிய நரம்பு செல்கள் சுமார் 50% அதிகமாக உருவானது.இந்த சிறிய துகள்களில் என்ன இருக்கிறது?
இந்த வெசிக்கிள்ஸ்களில்:
புரதங்கள் (Proteins)
கொழுப்புச் சத்துக்கள் (Lipids)
மரபணு தகவல்கள் (Genetic material)
இவை எல்லாம் சேர்ந்து, மூளையில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி, அவை புதிய நரம்பு செல்களாக மாற உதவுகின்றன.
ஏன் இந்த கண்டுபிடிப்பு முக்கியம்?
உடற்பயிற்சி செய்யாமலே,
இந்த வெசிக்கிள்ஸ்கள் மட்டும் இருந்தாலே புதிய மூளை செல்கள் உருவானது என்பது மிக முக்கியமான விஷயம்.ஆய்வாளர்கள் கூறுவதுபடி:
உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் (muscles) மற்றும் கல்லீரல் (liver) போன்ற உறுப்புகள் இந்த துகள்களை வெளியிடுகின்றன.
அவை இரத்தத்தின் மூலம் மூளைக்கு சென்று தாக்கம் செய்கின்றன.
ஆனால்:
இந்த துகள்களில் உள்ள எந்த குறிப்பிட்ட பொருள் இந்த வேலை செய்கிறது?
அவை எப்படி மூளைக்குள் நுழைகின்றன?
என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
உடல்நலம்
Saturday, January 17, 2026
மாரடைப்பை தடுக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது சீரணத்தை மேம்படுத்தும்.உறுப்புகளை சீர்ப்படுத்தும். பூஞ்சைகள், நச்சுகளை அழிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தியை போக்கும். அம்மை நோய்களுக்கும் எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப்புண்களை ஆற்ற வாய்ப் புத்துணர்ச்சி பெற உதவும்.
கொழுப்புகளை கரைக்கும். கல்லீரல் நச்சுகளை நீக்கும். மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கும்.
உடல்நலம்
Saturday, January 17, 2026
நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு
அமெரிக்காவின் Medical University of South Carolina என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள்,
டைப்-1 நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தும் புதிய முறையை ஆராய்ந்து வருகிறார்கள்.
டைப்-1 நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (immune system) தவறுதலாக கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் “பீட்டா செல்கள்” (beta cells) என்பவற்றை அழித்துவிடுகிறது. இதனால் நோயாளிகள் தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
புதிய முறை என்ன?
இந்த ஆராய்ச்சியில்:
1. ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் புதிய பீட்டா செல்கள் உருவாக்கப்படுகின்றன.
2. அதே நேரத்தில், Tregs (Regulatory T cells) என்ற சிறப்பு நோய் எதிர்ப்பு செல்களை மாற்றி அமைக்கிறார்கள்.
3. இந்த Tregs செல்கள், புதிய பீட்டா செல்களை அடையாளம் கண்டு,
→ “இவை நல்ல செல்கள், தாக்காதீர்கள்” என்று உடலின் மற்ற நோய் எதிர்ப்பு செல்களுக்குச் சிக்னல் அனுப்பும்.
இதனால்:
புதிய இன்சுலின் செல்கள் பாதுகாப்பாக இருக்கும்
உடலே இன்சுலின் தயாரிக்கத் தொடங்கும்
வாழ்நாள் முழுவதும் மருந்துகள் அல்லது இன்சுலின் ஊசிகள் தேவைப்படாமல் இருக்கலாம்
இதன் முக்கிய பலன்
உடல் உறுப்புத் தானம் (donor cells) தேவையில்லை
செல்களை அதிக அளவில் தயாரித்து சேமிக்க முடியும்
குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கும் பாதுகாப்பான சிகிச்சையாக இருக்கலாம்
சுருக்கமாக:
நோய் எதிர்ப்பு அமைப்பை “மாற்றி பயிற்சி கொடுத்து”
புதிய இன்சுலின் செல்களை பாதுகாக்க
டைப்-1 நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்.இது இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் டைப்-1 நீரிழிவுக்கு பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
