Breaking

Saturday, January 17, 2026

Saturday, January 17, 2026

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

வாழை வாழ வைக்கும்

அவசர சோறு ஆபத்து

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

இருமலை போக்கும் வெந்தயக் கீரை

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

சித்தம் தெளிய வில்வம்

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

சூட்டை தணிக்க கருணை கிழங்கு

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

வாத நோய் தடுக்க அரைக் கீரை

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

பருமன் குறைய முட்டைக்கோஸ்

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”
Saturday, January 17, 2026

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

`ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்

வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.

மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக் காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி
Saturday, January 17, 2026

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்
நாக்கில் வரும் புண்கள் வலி தரும் திறந்த காயங்கள். இதனால் சாப்பிடவும், பேசவும், விழுங்கவும் சிரமம் ஏற்படும். பெரும்பாலும் இவை ஆபத்தில்லாதவை; சில நாள்களில் தானாகவே குணமாகிவிடும். சரியான பராமரிப்பு செய்தால் வலி குறையும், சீக்கிரம் ஆறும், மீண்டும் வருவதும் குறையும்.
நாக்கு புண் வருவதற்கான பொதுவான காரணங்கள்
→ கூர்மையான பல், பிரேஸஸ், அல்லது தவறுதலாக நாக்கை கடித்தல்
→ இரும்புச்சத்து, வைட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் குறைபாடு
→ மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்), தூக்கமின்மை
→ வைரஸ் தொற்று
→ அடிக்கடி வரும் வாய்ப்புண்கள் (Aphthous ulcers)
→ காரம், சூடு, புளிப்பு உணவுகள்
---
உடனடி பராமரிப்பு & வலி குறைக்கும் முறைகள்
→ எரிச்சல் தரும் உணவுகளை தவிர்க்கவும்
காரம், சூடு, புளிப்பு, கடினமான உணவுகளை சாப்பிடாதீர்கள் – வலி அதிகரிக்காமல் இருக்கும்.
→ மெதுவாக பல் துலக்கவும்
மென்மையான பிரஷ் பயன்படுத்துங்கள். புண் இருக்கும் இடத்தில் பலமாக தேய்க்காதீர்கள்.
→ வலி குறைக்கும் ஜெல் பயன்படுத்தலாம்
சாப்பிடும் போது, பேசும் போது வலி குறையும். மருத்துவர் சொன்னபடி மட்டும் பயன்படுத்தவும்.
---
மருந்துகள் & மேலே தடவும் சிகிச்சைகள்
→ ஆண்டிசெப்டிக் மவுத் வாஷ்
பாக்டீரியா வளராமல் தடுக்க உதவும். ஆல்கஹால் இல்லாததை பயன்படுத்துங்கள்.
→ ஸ்டீராய்டு ஜெல் (மருத்துவர் ஆலோசனையுடன்)
அழற்சியை குறைத்து சீக்கிரம் குணமாக உதவும்.
→ பாதுகாப்பு பேஸ்ட்
புண் மேல் ஒரு மெல்லிய படலம் போல இருந்து உணவு, உமிழ்நீர் எரிச்சலிலிருந்து பாதுகாக்கும்.
---
உணவுச்சத்து ஆதரவு
→ வைட்டமின் குறைபாடுகளை சரி செய்யவும்
இரும்பு, வைட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளவும்.
→ மென்மையான, சத்தான உணவுகள் சாப்பிடவும்
புண் காயாமல் உடலுக்கும் சத்தும் கிடைக்கும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய பராமரிப்பு
→ உப்பு நீர் குளுகுளுப்பு
வலி குறையவும், குணமாவதற்கும் உதவும்.
→ நிறைய தண்ணீர் குடிக்கவும்
வாயின் உள்ளே ஈரமாக, ஆரோக்கியமாக இருக்கும்.
→ மனஅழுத்தத்தை குறைக்கவும்
ஸ்ட்ரெஸ் காரணமாக புண்கள் மீண்டும் மீண்டும் வரலாம்.
எப்போது மருத்துவரை காண வேண்டும்?
→ 2 வாரங்களுக்கு மேலாக புண் ஆறாமல் இருந்தால்
→ மிகவும் பெரியது, ஆழமானது, அல்லது அதிக வலி இருந்தால்
→ அடிக்கடி புண் வந்து, உடல் சோர்வு அல்லது எடை குறைவு இருந்தால்
→ காய்ச்சல், விழுங்க முடியாத நிலை இருந்தால்.
Saturday, January 17, 2026

பெண்கள் பற்றிய மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்

• பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்

• உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்

• கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே

• நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.

• நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

• 99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்

• 12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்

• நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு

• நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல் போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம்

• உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்

• ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.

• நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும்

• ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்

• பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.

• கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்

• ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும்

• போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்

• நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்

• இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள்

• ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்

• நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்

• ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார். ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்

• ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்

• 28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.

• உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்

• அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே

• நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்

• நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்

• ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை

• நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான். நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது

• ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது

• சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்

• நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்

• உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்

• மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்

• ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது

• மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்

• ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள். அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்

• ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம்

• 40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்

• நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது

• "நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்

• புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்

• நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்

• 6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்

• ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்

• ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்

• அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்

• நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்

• 10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்

• ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
Saturday, January 17, 2026

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

தும்பைப் பூவை பற்றி அறியாதவர்கள் எவரும் இலர்...

தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

1. தும்பை பூவை , பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்.

2. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்.

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

3. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்.

4. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி,எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்.

5. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

6. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்.

7. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்று விடும்.

Saturday, January 17, 2026

ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் நலன் சீர்கெட முக்கிய காரணிகளாக இருக்கின்றன. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன…!

நீங்கள் முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த விகிதத்தில் நீங்கள் உலர்ந்த திராட்சை மற்றும் நீரை கலக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம். ஆம், அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்.

பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.

அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்....
Saturday, January 17, 2026

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..? மிரட்டும் அமானுஷ்யங்கள்..

எப்போதுமே பிரம்மாண்டமான கோட்டைகளைப் பார்க்கும் எவர்க்கும் பிரமிப்பு ஏற்படுவது இயல்பு. உள்ளே நுழைந்து அணுஅணுவாக சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது ‘எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாந்திருக்காங்கே..’ என்று நமக்குள் ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் சில கோட்டைகளில் ‘அமானுஷ்யங்களால்’ நிரம்பி இருப்பதாகச் சொல்லிப் பயமுறுத்தும் கோட்டைகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு கோட்டையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

மஹாராஷ்டிராவில் ‘மாத்தேரான்’ ‘பன்வெல்’ என்ற இடங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது இந்த 'ப்ரபால்கர் கோட்டை. இது இந்தியாவில் உள்ள மிகவும் பயங்கரமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால். இருட்டியதும் யாரும் இந்த கோட்டையைப் பார்க்கப் போக மாட்டாங்களாம்! போனால் உசுரோட திரும்ப முடியாது என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் அந்தக் கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமத்து ஆட்கள்.

இந்தக் கோட்டை 2300 அடி உயரம் உள்ள ஒரு மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு சிலரே வருகைதருவதாகவும், அவர்களும் இருட்டுவதற்குள் அங்கிருந்து திரும்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பயமுறுத்தும் காரணங்கள் இருந்தாலும், அங்கு மின் வசதி, தண்ணீர் வசதி என எதுவும் இல்லாததும் ஒரு காரணம். தவிர, இந்தக் கோட்டைக்கு போகும் பாதைகள் மிகவும் செங்குத்தான மலைகள் மீது அமைந்திருப்பதால் அவ்வளவு எளிதாகப் போக முடியாது.

அதுமட்டுமன்றி, மெல்ல இருட்டத் தொடங்கியதும் ஒருவித மயான அமைதி நிலவுவதால் அந்த சூழலே மிகவும் பயங்கரமாக இருக்கும். இந்த கோட்டையை பார்ப்பதற்கு மலையில் ஏறுவதற்கு பாறைகள் மீது படிக்கட்டுகள் மாதிரி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதில் எந்த பிடிமானமும், கயிறுகளும் இல்லை என்பது இன்னும் கிலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது! அதில் ஏறும்போது கொஞ்சம் சறுக்கினாலும் அப்படியே 2300 அடி ஆழத்தில் இருக்கும் குழிக்குள் விழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் யார்தான் அங்கே இரவில் போவார்கள் !?

இந்த கோட்டைக்கு போனவர்களில் பலர் கவணம் தவறி இறந்திருப்பதாகவும் கணக்குச் சொல்கிறார்கள். இந்தக்கோட்டைக்கு முன்பு 'முரஞ்சன் கோட்டை' என்ற பெயர் இருந்ததாகவும், அதன்பின் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் அவரின் ஆட்சியில் இந்த கோட்டைக்கு 'ராணி கலாவந்தி' என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நான் பார்க்காத கோட்டையா … மார்தட்டிக்கொள்ளும் ஆட்கள் மட்டும் நேரமும் தைரியமும் இருந்தால் ஒருமுறை விசிட் அடிக்கலாம். கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும் போது… வேற லெவல்!
Saturday, January 17, 2026

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை போதுமான அளவு உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் , வரும் முன் காப்போம் என்பது அறியாமல் இருந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஒரு முறை கல் உருவாகி விட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும்.

தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.
Saturday, January 17, 2026

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல் “எக்ஸ்ட்ராசெல்யுலர் வெசிக்கிள்ஸ்” (Extracellular Vesicles) என்று அழைக்கப்படும் மிக மிக சிறிய பைகள் போன்ற துகள்களை இரத்தத்தில் வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த சிறிய துகள்கள், மூளையில் புதிய நரம்பு செல்கள் (brain cells) உருவாக முக்கிய பங்கு வகிக்கலாம் என்று ஆராய்ச்சி சொல்கிறது.

எலிகளில் நடந்த ஆய்வு

சுதந்திரமாக ஓடிய (உடற்பயிற்சி செய்த) எலிகளில் இருந்து இந்த வெசிக்கிள்ஸ்களை விஞ்ஞானிகள் சேகரித்தார்கள்.

அவற்றை உடற்பயிற்சி செய்யாத மற்ற எலிகளுக்கு செலுத்தினார்கள்.

அதனால், அந்த எலிகளின் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் (நினைவு மற்றும் கற்றலுக்கு முக்கியமான பகுதி) பகுதியில்

புதிய நரம்பு செல்கள் சுமார் 50% அதிகமாக உருவானது.

இந்த சிறிய துகள்களில் என்ன இருக்கிறது?

இந்த வெசிக்கிள்ஸ்களில்:

புரதங்கள் (Proteins)

கொழுப்புச் சத்துக்கள் (Lipids)

மரபணு தகவல்கள் (Genetic material)

இவை எல்லாம் சேர்ந்து, மூளையில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி, அவை புதிய நரம்பு செல்களாக மாற உதவுகின்றன.

ஏன் இந்த கண்டுபிடிப்பு முக்கியம்?

உடற்பயிற்சி செய்யாமலே,

இந்த வெசிக்கிள்ஸ்கள் மட்டும் இருந்தாலே புதிய மூளை செல்கள் உருவானது என்பது மிக முக்கியமான விஷயம்.

ஆய்வாளர்கள் கூறுவதுபடி:

உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் (muscles) மற்றும் கல்லீரல் (liver) போன்ற உறுப்புகள் இந்த துகள்களை வெளியிடுகின்றன.

அவை இரத்தத்தின் மூலம் மூளைக்கு சென்று தாக்கம் செய்கின்றன.

ஆனால்:

இந்த துகள்களில் உள்ள எந்த குறிப்பிட்ட பொருள் இந்த வேலை செய்கிறது?

அவை எப்படி மூளைக்குள் நுழைகின்றன?

என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
Saturday, January 17, 2026

மாரடைப்பை தடுக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது சீரணத்தை மேம்படுத்தும்.உறுப்புகளை சீர்ப்படுத்தும். பூஞ்சைகள், நச்சுகளை அழிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தியை போக்கும். அம்மை நோய்களுக்கும் எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப்புண்களை ஆற்ற வாய்ப் புத்துணர்ச்சி பெற உதவும்.

கொழுப்புகளை கரைக்கும். கல்லீரல் நச்சுகளை நீக்கும். மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கும்.
Saturday, January 17, 2026

நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு

அமெரிக்காவின் Medical University of South Carolina என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள், 

டைப்-1 நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தும் புதிய முறையை ஆராய்ந்து வருகிறார்கள்.

டைப்-1 நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (immune system) தவறுதலாக கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் “பீட்டா செல்கள்” (beta cells) என்பவற்றை அழித்துவிடுகிறது. இதனால் நோயாளிகள் தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

புதிய முறை என்ன?

இந்த ஆராய்ச்சியில்:

1. ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் புதிய பீட்டா செல்கள் உருவாக்கப்படுகின்றன.

2. அதே நேரத்தில், Tregs (Regulatory T cells) என்ற சிறப்பு நோய் எதிர்ப்பு செல்களை மாற்றி அமைக்கிறார்கள்.

3. இந்த Tregs செல்கள், புதிய பீட்டா செல்களை அடையாளம் கண்டு,
→ “இவை நல்ல செல்கள், தாக்காதீர்கள்” என்று உடலின் மற்ற நோய் எதிர்ப்பு செல்களுக்குச் சிக்னல் அனுப்பும்.

இதனால்:

புதிய இன்சுலின் செல்கள் பாதுகாப்பாக இருக்கும்

உடலே இன்சுலின் தயாரிக்கத் தொடங்கும்

வாழ்நாள் முழுவதும் மருந்துகள் அல்லது இன்சுலின் ஊசிகள் தேவைப்படாமல் இருக்கலாம்

இதன் முக்கிய பலன்

உடல் உறுப்புத் தானம் (donor cells) தேவையில்லை

செல்களை அதிக அளவில் தயாரித்து சேமிக்க முடியும்

குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கும் பாதுகாப்பான சிகிச்சையாக இருக்கலாம்

சுருக்கமாக:

நோய் எதிர்ப்பு அமைப்பை “மாற்றி பயிற்சி கொடுத்து”

புதிய இன்சுலின் செல்களை பாதுகாக்க

டைப்-1 நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்.

இது இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் டைப்-1 நீரிழிவுக்கு பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
Saturday, January 17, 2026

உங்கள் கண் பார்வையை மேம்படுத்த வீட்டு வைத்தியங்கள்.

கண்பார்வை குறைவாக இருப்பதால், நாம் கண்ணாடியை நாட வேண்டும். இருப்பினும், மருந்துகளுடன் கண்பார்வை அதிகரிக்காது. ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் பார்வையை அதிகரிக்கவும், கண்ணாடிகளை அகற்றவும் விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது.

உங்கள் கண்பார்வை பிரகாசமாக்கும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

#அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவு:

வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவை கண்பார்வை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள். உங்கள் கண்பார்வை குறைவாக இருந்தால், நீங்கள் பச்சை இலை காய்கறிகள், ஆரஞ்சு, கொத்தமல்லி, பூசணி மற்றும் கேரட் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். இந்த திரைச்சீலைகள் அனைத்தும் நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

#நெய் நன்மை பயக்கும்

நெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கூடுதலாக, நெய் உட்கொள்வது உங்கள் கண்பார்வை பிரகாசமாக்கும். நெய்யைத் தவிர, பாதாம் எண்ணெயைக் குடிப்பதும் கண்பார்வை பிரகாசமாக்குகிறது.

#மீன் எண்ணெய்:

மீன் எண்ணெயும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் சந்தையில் கிடைக்கின்றன, நீங்கள் ஒவ்வொரு நாளும் மீன் எண்ணெய் காப்ஸ்யூல்களை சாப்பிட்டால், இது உங்கள் கண்பார்வை பிரகாசமாக்கும்.
Saturday, January 17, 2026

கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்:


கரும்புச் சாற்றின் அதிசயங்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் ஒரு வளமான வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவலாக பிரபலம் கொண்டது. மும்பையின் பரபரப்பான தெருக்களிலிருந்து பிரேசிலின் வெப்பமண்டல சந்தைகள் வரை, கரும்புச் சாறு என்பது பலரால் விரும்பப்படும் ஒரு பானமாகும். ஆனால் இந்த இயற்கை பானத்தை இவ்வளவு சிறப்புறச் செய்வது எது?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கரும்பு சாறு குடிப்பதன் தனித்துவமான நன்மைகளில் ஒன்று, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆகும். அதிக வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது, இதனால் தொற்றுகள் மற்றும் நோய்களைத் தடுப்பது எளிதாகிறது. மேலும், கரும்பு சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த நிலையில் வைத்திருக்க ஒரு இயற்கையான வழியாகும், குறிப்பாக காய்ச்சல் காலத்தில்.

செரிமானத்திற்கு உதவுகிறது:

செரிமானப் பிரச்சினைகளால் சிரமப்படுகிறீர்களா? கரும்புச் சாறு நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் தீர்வாக இருக்கலாம். இந்த இயற்கை பானம் செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் பொதுவான செரிமானப் பிரச்சினைகளைப் போக்கும் திறனுக்காக அறியப்படுகிறது. இதில் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் உணவு நார்ச்சத்து உள்ளது. கூடுதலாக, கரும்புச் சாற்றில் உள்ள நொதிகள் உணவை உடைக்க உதவுகின்றன, இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. கரும்புச் சாற்றின் காரத் தன்மை உங்கள் வயிற்றில் சரியான pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எடை மேலாண்மை:

எடை கட்டுப்பாட்டிற்கு உதவும் குறைந்த கலோரி பானத்தைத் தேடுகிறீர்களா?
சில பவுண்டுகள் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு கரும்புச் சாறு ஒரு சிறந்த தேர்வாகும். அதன் இனிப்புச் சுவை இருந்தபோதிலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது. இதன் இயற்கையான சர்க்கரைகள் உங்கள் உணவில் தேவையற்ற கலோரிகளைச் சேர்க்காமல் நிலையான ஆற்றலை வெளியிடுகின்றன. உங்கள் உணவுத் திட்டத்தில் கரும்புச் சாற்றைச் சேர்ப்பது, சுவையான பானத்தை அனுபவிக்கும் அதே வேளையில், உங்கள் எடையை திறம்பட நிர்வகிக்க உதவும்.

நீரேற்றம் மற்றும் உற்சாகம் தரும்:

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம், மேலும் இந்த விஷயத்தில் கரும்பு சாறு சிறந்தது. இதில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால், குறிப்பாக வெப்பமான கோடை நாட்களில், இது ஒரு சரியான நீரேற்ற பானமாக அமைகிறது. ஆனால் நீரேற்றம் மட்டுமே நன்மை அல்ல; கரும்பு சாறு உடனடி ஆற்றலின் சிறந்த மூலமாகும். சாற்றில் உள்ள இயற்கை சர்க்கரைகள் உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு, உடனடி ஆற்றலை அதிகரிக்கும். நீங்கள் உடற்பயிற்சியிலிருந்து மீண்டு வந்தாலும் அல்லது மதிய வேளைக்கு ஒரு பிக்-மீ-அப் தேவைப்பட்டாலும், ஒரு கிளாஸ் கரும்பு சாறு உங்களை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்கும்.

நச்சு நீக்கம்:

கரும்பு சாறு உங்கள் உடலை நச்சு நீக்குவதை எளிதாக்குகிறது. இந்த இயற்கை பானம் ஒரு சக்திவாய்ந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது, காலப்போக்கில் குவிந்துள்ள நச்சுக்களை உங்கள் அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது. கரும்பு சாற்றின் டையூரிடிக் பண்புகள் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதன் மூலமும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலமும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கூடுதலாக, அதன் கார தன்மை உடலின் pH அளவைப் பராமரிக்க உதவுகிறது, மேலும் நச்சு நீக்கத்திற்கு மேலும் உதவுகிறது. கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது உங்கள் உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கும், இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணருவீர்கள்.

தோல் மற்றும் முடிக்கு நன்மைகள்:

கரும்பு சாறு உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அற்புதங்களைச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிளைகோலிக் அமிலம் போன்ற ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHAs) நிறைந்த இந்த சாறு, சருமத்தை உரிக்கவும், இறந்த செல்களை அகற்றவும், ஆரோக்கியமான பளபளப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது முகப்பருவை எதிர்த்துப் போராடி, கரும்புள்ளிகளைக் குறைத்து, தெளிவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. முடியைப் பொறுத்தவரை, கரும்புச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி நுண்குழாய்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலைக் குறைத்து, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் உணவில் கரும்புச் சாற்றைச் சேர்ப்பது உங்கள் அழகு வழக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு இயற்கையான வழியாகும்
.
கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது:

கரும்புச் சாறு கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்று அறியப்படுகிறது. அதன் நச்சு நீக்கும் பண்புகள் மஞ்சள் காமாலை போன்ற நிலைமைகளை நிர்வகிக்க உதவும், ஏனெனில் இது சரியான கல்லீரல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. கரும்புச் சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன, ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

கரும்பு சாறு புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த கரும்பு சாறு, வலுவான எலும்புகள் மற்றும் பற்களை ஆதரிக்கும் அத்தியாவசிய தாதுக்களை வழங்குகிறது. வழக்கமான நுகர்வு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்கவும், உங்கள் எலும்புகள் வயதாகும்போது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும். உங்கள் உணவில் கரும்புச் சாற்றைச் சேர்ப்பது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை இயற்கையாகவே பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும்.

மற்ற பானங்களுடன் ஒப்பிடுதல்:

மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது, ​​கரும்பு சாறு அதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக தனித்து நிற்கிறது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பானங்களைப் போலல்லாமல், இதில் செயற்கை சேர்க்கைகள் அல்லது பாதுகாப்புகள் இல்லை. இது ஒரு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. மற்ற சாறுகள் சில நன்மைகளை வழங்கினாலும், கரும்பு சாற்றின் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் தனித்துவமான கலவையானது ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அந்த சர்க்கரை சோடாக்கள் மற்றும் செயற்கை சாறுகளுக்கு பதிலாக ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடிக்க வேண்டிய நேரம் இது.

கரும்பு சாறு குடிப்பதற்கான குறிப்புகள்:

கரும்புச் சாற்றிலிருந்து அதிகப் பலன்களைப் பெற, மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் உள்ளன. முதலாவதாக, அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளை உறுதிசெய்ய எப்போதும் புதிதாகப் பிழிந்த சாற்றைத் தேர்வுசெய்யவும். வெறும் வயிற்றில் இதைக் குடிப்பது அதன் நச்சு நீக்கும் விளைவுகளை அதிகரிக்கும். இருப்பினும், மிதமான அளவு முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான நுகர்வு சிலருக்கு செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சாத்தியமான ஒவ்வாமைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதும், உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் ஒரு சுகாதார நிபுணரை அணுகுவதும் முக்கியம். இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாகவும் திறம்படவும் கரும்புச் சாற்றை அனுபவிக்க முடியும்.

கரும்பு சாறு வெறும் சுவையான பானத்தை விட அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுகாதார நன்மைகள் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்தை உதவுவது முதல் எடை மேலாண்மை மற்றும் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, நன்மைகள் ஏராளமாக உள்ளன. உங்கள் உணவில் கரும்பு சாற்றைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க ஒரு இயற்கையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும்.

கரும்புச் சாறு குடிப்பதால் கிடைக்கும் முதல் 10 நன்மைகள் பற்றிய இந்தத் தகவல் ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே, இது மருத்துவ ஆலோசனை கிடையாது.
Saturday, January 17, 2026

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தை தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிடுவது உடலில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் கூறுகிறது.
தொடர்ந்து 48 நாட்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவது சில பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி உடலுக்கு சில நன்மைகளை தரக்கூடும் என்று நம்பப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவத்தின்படி சில சாத்தியமான நன்மைகள்:
பொது ஆரோக்கியம்: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
செரிமானம்: செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில சமயங்களில் குறிப்பிடப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
கருஞ்சீரகத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினைக்கு பயன்படுத்துவதற்கு முன் ஒரு சுகாதார நிபுணர் அல்லது மருத்துவரை அணுகுவது எப்போதும் முக்கியம். பாரம்பரிய வைத்திய முறைகள் அனைவருக்கும் பொருந்தாது மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான மாற்றாக கருதப்படக்கூடாது.
குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக அல்லது தீவிர மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதாக எந்தவொரு கருஞ்சீரக தயாரிப்பு பற்றிய கூற்றுக்களையும் கவனமாக அணுக வேண்டும்..
Saturday, January 17, 2026

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற

சா்...க்.க. ரை வி. யா.தி க். காரா்களுக்கு கா.லில் ஏ.ற்.படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

இதற்கு கண்கண்ட மருந்து

ஆவாரம்_இலை

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து புண் உள்ள இடத்தில் பூச வர வேண்டும்

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் பூசி வர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்து பலரின் கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
Saturday, January 17, 2026

ரயில்வேயில் 22,000 காலியிடங்கள்..! மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு..

இந்திய ரயில்வேயில் நிலையான, மரியாதைக்குரிய வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்திய ரயில்வே ஆயிரக்கணக்கான வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் D பிரிவில் சுமார் 22,000 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி 20, 2026 அன்று தொடங்கி பிப்ரவரி 20, 2026 வரை தொடரும்.

ரயில்வே வேலை ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள்

மொத்த காலியிடங்கள்: தோராயமாக 22,000 (குரூப் D பதவிகள்)

அறிவிப்பு எண்: CEN 09/2025

தொடக்கச் சம்பளம்: ரூ.18,000 (கூடுதல் படிகளுடன்)

வேலை வகைகள்: டிராக் மெயின்டெயினர், பாயிண்ட்ஸ்மேன், சிக்னல், டெலிகாம் உதவியாளர் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வேலைகள்.

கல்வித் தகுதி, வயது வரம்பு

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜனவரி 1, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் தளர்வு: அரசு விதிகளின்படி SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

பதவி வாரியான காலியிடங்கள்

டிராக் மெயின்டெயினர்: 11,000

பாயிண்ட்ஸ்மேன் (B): 5,000

சிக்னல் & டெலிகாம் உதவியாளர் (S&T): 1,500

கேரேஜ் & வேகன் உதவியாளர் (C&W): 1,000

பிற தொழில்நுட்பப் பணிகள்: 3,500

தேர்வு செயல்முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT): எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.

உடற்தகுதித் தேர்வு (PET): உடல் வலிமை, ஓட்டம் போன்றவை சோதிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு: இறுதியாக, அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமல்லாமல், மேலும் 13 பிற பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும். இதில் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் rrbsecunderabad.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நேர தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க, பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு முன்பே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களை தயாராக வைத்திருக்கவும்.
Saturday, January 17, 2026

பெயர் மாற்றம் இனி சுலபம்..!! பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வது எப்படி..? ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு..?

பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள திருத்தங்களை சீர் செய்யவும், முறைப்படி பெயர் மாற்றம் செய்யவும் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இங்கே விரிவாக காண்போம்.

பொதுவாக, பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை (Spelling Mistakes) சரி செய்வது மிக எளிதானது. இதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) அல்லது நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் (Health Inspector) உரிய ஆதாரங்களுடன் மனு அளிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரது அடையாளச் சான்றுகள் மற்றும் மருத்துவமனை வழங்கிய ‘டிஸ்சார்ஜ் சம்மரி’ (Discharge Summary) ஆகியவற்றைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் அதனைச் சரிபார்த்து பிழைகளைத் திருத்தித் தருவார்கள். இதற்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; ஒரு பிரமாணப் பத்திரமே போதுமானது.

ஆனால், ஒருவரின் முழுப் பெயரையும் மாற்ற விரும்பினால், அதற்கான நடைமுறை சற்று விரிவானது. முதலில் தமிழக அரசின் அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளர் கையொப்பமிட வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் என்றால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ‘ஆயுள் சான்றிதழை’ (Life Certificate) அசலாக இணைக்க வேண்டும். இதற்கான கட்டணமான ரூ.750-ஐ www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் வழியாகச் செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற வேண்டும்.

பெயர் மாற்றத்திற்குத் தேவையான விண்ணப்பங்களை www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த ஆவணத்தைக் கொண்டு பிறப்புப் பதிவாளரிடம் விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெறலாம். அதன் பின்னரே ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்ற பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும்.

அரசிதழில் பெயர் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் அதனை நேரில் பெற்றுக்கொள்ளலாம், இல்லையெனில் தபால் மூலம் அனுப்பப்படும். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, “என்கிற” (Alias) என்ற பெயரில் பிரசுரிக்க அனுமதி இல்லை என்பதும், அச்சுப்பிழைகள் ஏதேனும் இருந்தால் 6 மாதத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்பதும் மிக முக்கியமான விதியாகும். முறையான ஆவணங்களுடன் அணுகினால், உங்கள் அடையாளச் சிக்கல்களை எளிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம்.
Saturday, January 17, 2026

செல்போன் கேமரா ஃபோட்டோ எடுக்க மட்டுமில்லை. ஸ்மார்ட்போனில் உள்ள ஆச்சரியமூட்டும் பயன்கள்.. என்னன்னு தெரியுமா?.!!!

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் திறன் பேசிகளில் உள்ள கேமராக்கள் வெறும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு மட்டுமே பயன்படுவதில்லை.

அதன் மறைந்துள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் நமது பல வேலைகளை எளிதாக்குகின்றன. எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு தொலைக்காட்சி அல்லது குளிரூட்டியின் ரிமோட் வேலை செய்யவில்லை என்றால் அதன் பேட்டரி தீர்ந்துவிட்டதா என்பதை கேமரா மூலம் கண்டறியலாம்.

ரிமோட்டின் பொத்தானை அழுத்தும் போது கேமரா வழியாகப் பார்த்தால் அதில் நீல நிற ஒளி தெரிந்தால் ரிமோட் நன்றாக உள்ளது என்றும் ஒளி தெரியவில்லை என்றால் பேட்டரி மாற்றப்பட வேண்டும் என்றும் பொருள். அதேபோல் மிகச் சிறிய எழுத்துக்களைப் படிக்க சிரமப்படுபவர்கள் கேமராவை பெரிதாக்கிப் பார்ப்பதன் மூலம் பூதக்கண்ணாடி போல அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் கேமராக்களைப் பயன்படுத்தி ஒரு பொருளின் நீளம் மற்றும் அகலத்தை அளவிட முடியும் இதற்காக பல்வேறு செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள தெரியாத மொழிகளை உடனுக்குடன் நமது தாய்மொழியில் மொழிபெயர்த்துப் படிப்பதற்கும் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடுவதற்கும் கேமராக்கள் பேருதவி புரிகின்றன.

கூகுள் லென்ஸ் போன்ற வசதிகள் மூலம் ஒரு பொருளின் புகைப்படத்தை எடுத்தால் அது குறித்த முழு விவரங்களையும் இணையம் வழியாகப் பெறலாம். அலுவலகக் கோப்புகளை ஸ்கேனர் இயந்திரம் இல்லாமலேயே கேமரா மூலம் மிகத் தெளிவாகப் படம் பிடித்து மின் அஞ்சல் வழியாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மூலம் திறன் பேசி கேமராக்கள் நமது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு முக்கியக் கருவியாக மாறியுள்ளன.
Saturday, January 17, 2026

ரேஷன் கார்டு வைத்திருப்போர் டபுள் அலர்ட்.. இனி அரசி, பருப்பு கிடைக்காது, அரசின் ஆர்டர்

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு உணவுத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கை அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது விநியோக முறையை (Public Distribution System - PDS) இன்னும் வெளிப்படையானதாக மாற்ற அரசாங்கம் தரபோகு பல கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து தான் வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana - PMGKY) திட்டத்தின் கீழ் நீங்கள் இலவச கோதுமை மற்றும் அரிசியைப் பெற்று வருகிறீர்கள் என்றால், e-KYC செயல்முறையை நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த செயல்முறையை சரியான நேரத்தில் செய்யத் தவறினால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படலாம் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு e-KYC புதுப்பிப்பு: அரசாங்கம் வெளியிட்ட காலக்கெடு

புதிய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, ரேஷன் கார்டில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உறுப்பினரும் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதே. இதற்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்டையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் ஆதார் அட்டைகளை இணைத்து பயோமெட்ரிக் அடையாளத்தை வழங்க வேண்டும். சரிபார்ப்பு முழுமையடையாத உறுப்பினர்கள் தங்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாது.

பயோமெட்ரிக் சரிபார்ப்பு ஏன் கட்டாயம்?

ரேஷன் பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் எந்த வித மோசடியிலும் சிக்கிக் கொள்ளாமல் சரியான அளவில் ரேஷன் பொருட்களையும், தகுதியுள்ள நபருக்கு ரேஷன் பொருட்களையும் பெற வேண்டும் என்கிற நோக்கதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. e-KYC இன் முதன்மை நோக்கம், தகுதியற்ற அல்லது போலி ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களின் பெயர்களை அகற்றுவதாகும்.

ரேஷன் கார்டுகளிலிருந்து பெயர்கள் நீக்கப்படலாம்

அரசு வழங்கியுள்ள காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை பூர்த்தி செய்ய தவறும் குடும்பங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சரிபார்ப்பு செயல்முறை முழுமையடையாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் செல்லாது என்று உணவு துறை கருதி, போர்ட்டலில் இருந்து அவர்களின் பெயரை நீக்கும். இது உங்கள் மாதாந்திர ரேஷன் ஒதுக்கீட்டை நேரடியாகப் பாதிக்கும் மற்றும் குடும்பத்தினர் பெறும் இலவச உணவுப் பொருட்களும் பெற முடியாமல் போகும்.

ekyc எங்கு, எப்படிச் சரிபார்ப்பது?

இந்த செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதற்காக நீங்கள் எந்த அரசாங்க அலுவலகத்திறகும் செல்ல அவசியமில்லை:

உங்கள் பகுதியில் உள்ள அரசு ரேஷன் டீலரிடம் செல்லுங்கள்.

உங்கள் ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் எடுத்துச் செல்லவும்.

ரேஷன் கடையில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.

இந்தச் செயல்முறைக்கு அரசாங்கம் எந்த கட்டணமும் வசூலிக்காது, இந்த செயல்முறை முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, January 17, 2026

தைராய்டு குறைபாடு என்றால் என்ன?

Hypothyroidism (தைராய்டு குறைபாடு) என்றால் என்ன?

தைராய்டு சுரப்பி தேவையான அளவு ஹார்மோன் உருவாக்காத நிலையே Hypothyroidism.
இந்த ஹார்மோன்கள் கீழ்கண்டவற்றை கட்டுப்படுத்துகின்றன:
→ உடல் மாற்றச்செயல் (Metabolism)
→ சக்தி (Energy)
→ உடல் எடை
→ இதய துடிப்பு
→ ஜீரணம்
→ மூளை செயல்பாடு
சரியான சிகிச்சையுடன் பெரும்பாலானவர்கள் சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

இந்த நோய் ஏன் நீண்டகால பராமரிப்பு தேவை?
→ பெரும்பாலும் இது வாழ்நாள் நோயாக இருக்கும்
→ முக்கிய காரணம்: Hashimoto’s (Autoimmune disease)
→ ஹார்மோன் குறைவு உடல் செயல்களை மெதுவாக்கும்
→ சிகிச்சை என்பது ஹார்மோனை மாற்றி கொடுப்பது; சுரப்பியை முழுமையாக குணப்படுத்த முடியாது


முக்கிய சிகிச்சை – தைராய்டு ஹார்மோன் மாத்திரை
→ பொதுவாக Levothyroxine (T4) மாத்திரை வழங்கப்படும்
→ உடலில் இல்லாத ஹார்மோனை இது ஈடு செய்கிறது
தினமும் எடுத்துக் கொள்வது ஏன் அவசியம்?
→ உடல் மாற்றச்செயலை சரியாக்கும்
→ சோர்வு, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு குறையும்
→ இதயம், கருத்தரிப்பு, மூளை தொடர்பான சிக்கல்களைத் தடுக்கும்
சரியாக எடுத்துக் கொள்ளும் முறை (மிக முக்கியம்):
→ தினமும் காலை வெறும் வயிற்றில்
→ வெறும் தண்ணீருடன்
→ உணவு / தேநீர் / காபி எடுத்துக்கொள்ள 30–60 நிமிடம் காத்திருக்க வேண்டும்
→ ஒரே நேரத்தில் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்
தவறான நேரத்தில் அல்லது முறையாக இல்லாமல் எடுத்தால் மருந்தின் பயன் குறையும்

முறைப்படி ரத்த பரிசோதனை & மருந்து அளவு மாற்றம்
→ TSH ரத்த பரிசோதனை மூலம் கட்டுப்பாடு பார்க்கப்படும்
பரிசோதனை கால இடைவெளி:
→ ஆரம்பத்தில்: 6–8 வாரத்திற்கு ஒருமுறை
→ நிலை சரியான பிறகு: 6–12 மாதத்திற்கு ஒருமுறை
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து அளவை மாற்றக்கூடாது
→ அதிக மருந்து எடுத்தால்: இதய துடிப்பு அதிகரிப்பு, பதட்டம், எலும்பு பலவீனம் ஏற்படலாம்

உணவு பழக்கம் (உதவியாக மட்டுமே – சிகிச்சை அல்ல)
→ சாதாரண சமநிலையான உணவு போதும்
→ தனி “தைராய்டு டயட்” தேவையில்லை
→ அயோடின்: அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தலாம் (அதிகம் வேண்டாம்)
→ செலீனியம், சிங்க் உள்ள உணவுகள்:
முந்திரி, விதைகள், முட்டை, மீன்
→ சோயா மற்றும் கச்சா காய்கறிகள் (முட்டைகோஸ், ப்ரோக்கோலி) அதிகமாகவும் மருந்து நேரத்திற்கு அருகிலும் தவிர்க்கவும்
உணவு மருந்துக்கு மாற்றாக இல்லை

உடல் எடை கட்டுப்பாடு
→ சிகிச்சைக்கு முன் எடை கூடுவது சாதாரணம்
→ ஹார்மோன் சரியானதும் எடை கட்டுப்பாடு எளிதாகும்
→ நடைபயிற்சி / உடற்பயிற்சி
→ சமநிலையான உணவு
→ கடுமையான டயட் தவிர்க்கவும்

சோர்வு, மனநிலை, நினைவுத்திறன்
→ மருந்து தொடங்கிய பிறகு மெதுவாக சக்தி அதிகரிக்கும்
→ தூக்கம், மனநிலை மேம்படும்
→ மன அழுத்தத்தை குறைக்கவும்
→ போதுமான தூக்கம் பெறவும்

பெண்களின் ஆரோக்கியம் & கருத்தரிப்பு
→ மாதவிடாய் குழப்பம், கருத்தரிப்பு சிக்கல் ஏற்படலாம்
→ சரியான சிகிச்சையுடன் இயல்பாகும்
கர்ப்ப காலத்தில்:
→ ஹார்மோன் தேவைகள் அதிகரிக்கும்
→ அடிக்கடி பரிசோதனை அவசியம்
→ குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம்

உதவும் வாழ்க்கை பழக்கங்கள்
→ தினசரி ஒழுங்கான நடைமுறை
→ புகைபிடித்தல் தவிர்க்கவும்
→ அதிக கஃபைன் (காபி/எனர்ஜி டிரிங்க்) குறைக்கவும்

தவறான நம்பிக்கைகள்
→ உணவு மட்டும் போதாது
→ தைராய்டு மருந்து அடிமை ஆக்காது
→ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது

உடனே மருத்துவரை அணுக வேண்டிய நேரம்
→ மருந்து எடுத்தும் அறிகுறிகள் குறையவில்லை
→ இதய துடிப்பு, பதட்டம், திடீர் எடை குறைவு
→ கர்ப்பம் திட்டமிடும்போது / கர்ப்பமாக இருந்தால்
→ கழுத்தில் வீக்கம் அல்லது வலி

நினைவில் வையுங்கள்:
→ Hypothyroidism கட்டுப்படுத்தக்கூடிய நோய்
→ தைராய்டு மருந்து பாதுகாப்பானது & அவசியமானது
→ சரியான நேரம் + முறை + பரிசோதனை = நல்ல ஆரோக்கியம்
→ நல்ல கட்டுப்பாட்டுடன் சாதாரண வாழ்க்கை வாழலாம்

மருத்துவ அறிவிப்பு:
இந்த தகவல் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. மருந்து அளவு, பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.