Breaking

Saturday, February 21, 2026

Saturday, February 21, 2026

1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அரசாணை வெளியீடு

Saturday, February 21, 2026

TET2026 : Service Certificate அலைக்கழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விருதுநகர்

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TET2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான Service Certificate வழங்க பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,

விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரது (தொ.க) அறிவுறுத்துதல்படி Service Certificate பெற எந்தவித ஆவணங்களும் இணைக்கப்படத் தேவையில்லையென திருச்சுழி வட்டாரக் கல்வி அலுவலர் Voice Note அனுப்பியுள்ளார். அதில்,

1. *Covering Letter - 2 copies*

2. *Service Certificate - 3 copies*

மட்டும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் தலைமையாசிரியர் வழி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், மொத்தமாகத் தொகுத்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி Service Certificate பெற்றுத்தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, February 21, 2026

தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களின் கல்​வித் தரத்தை உயர்த்​தும் பொருட்டு பள்​ளிக்​கல்​வித் துறை மூலம் பல்​வேறு சிறப்​புத் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களிடம் பிரச்​சினை​களைத் தீர்க்​கும் திறனை வளர்க்​க​வும், குழு​வாக இணைந்து செயல்​படக்​கூடிய திறனை கற்​றுக் கொள்​ள​வும், படைப்​பாற்​றலை வளர்க்​க​வும் முதல்​கட்​ட​மாக ரூ.6.09 கோடி மதிப்​பீட்​டில் 15 இயந்​திர​வியல் ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்டு உள்​ளன.

கற்​றல், கற்​பித்​தல் மற்​றும் திட்​ட​மிடல் போன்ற செயல்​முறை​களை மேம்​படுத்​து​வதற்கு தகவல் தொழில்​நுட்​பம் ஒரு முக்​கிய ஊக்​கி​யாக உள்​ளதைக் கருத்​தில் கொண்​டு, அரசு நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.519.73 கோடி மதிப்​பீட்​டில் 8,209 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களும், அரசு தொடக்க, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.455.32 கோடி மதிப்​பீட்​டில் 22,931 திறன்​மிகு வகுப்​பறை​களும் நிறு​வப்​பட்டு மாணவர்​களின் பயன்​பாட்​டில் உள்​ளன.

இந்​நிலை​யில், அரசுப் பள்​ளி​களைப் போல, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்​கும் வழங்​கும் நோக்​கில், முதற்​கட்​ட​மாக தமிழகம் முழு​வதும் 654 அரசு உதவி​பெறும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.41.85 கோடி மதிப்​பீட்​டில் 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

அடை​யாறு குமார ராஜா முத்​தையா மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் திறந்​து​வைத்​தார்.

தொடர்ந்து அப்​பள்​ளி​யில் நிறு​வப்​பட்​டுள்ள உயர் தொழில்​நுட்ப ஆய்​வகத்தை பார்​வை​யிட்​டார். இந்த உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் காணொலி, ஒலி மற்​றும் டிஜிட்​டல் கருவி​கள் மூலம் கற்​பித்​தல் மற்​றும் கற்​றலை எளிமை​யாக்​கிப் பாடப் புத்தக உள்​ளடக்​கத்தை விரை​வாக​வும், ஆர்​வ​மாக​வும் கற்​றுக்​கொள்ள உதவும்.

மேலும் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திர​வியல் மற்​றும் குறி​யிடல் (Coding) தொடர்​பான டிஎன் ஸ்பார்க் (TN SPARK) போன்ற திட்​டங்​களை செயல்​படுத்​த​வும் துணைபுரி​யும்.

தொடக்க விழா​வில், எஸ்​எஸ்ஏ மாநில திட்ட இயக்​குநர் எம்​.ஆர்த்​தி, கூடு​தல் இயக்​குநர் எஸ்​.உ​மா, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், பெற்​றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலை​வர் பி.​வி.பி.​முத்​துக்​கு​மார், மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​ கபீர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.
Saturday, February 21, 2026

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

முறைப்படியான Income Tax கணக்கீட்டிற்கும் IFHRMS Tax பிடித்தத்திற்கும் வேறுபாடுகள் இருப்பின் பிப்ரவரி 2026 மாத ஊதியத்தில் சரிசெய்து கொள்ள இரு புதிய Elements IFHRMSல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Income Tax & Cess உள்ளிட்டவற்றில் சரியான கணக்கீட்டிற்கும் IFHRMS கணக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,

Different Amount = Actual - IFHRMS Deduction

என்ற கணக்கீட்டின் வழி வித்தியாசத் தொகையை இந்த Elementsல் அளித்து வருமானவரியைச் சரி செய்து கொள்ளலாம். அதாவது,

= Actual Amount - IFHRMS Deduction

= 10,000 - 10,500

எனில்,

Different Amount = -500

= Actual Amount - IFHRMS Deduction

= 10,500 - 10,000

எனில்,

Different Amount = 500

Taxல் வேறுபாடு இருப்பின், Add element entryல் Effective Date Februaryயாக வைத்து GTN Income Tax_A என்ற Elementஐ Add செய்து Different Amountஐ உள்ளிடவும்.

இதே போன்று Cess வித்தியாசத் தொகையை GTN Income Tax Cess_A* என்பதில் அதற்கான Different Amountஐ உள்ளிடவும்.

Approval பணிகள் முடிந்த பின்னர், February regular runஐ mark for retry செய்தால் சரியான Result கிடைக்கும்.

*'IFHRMSல பிடிச்சது பிடிச்சதுதானாம்; வரிய திருத்த முடியாது; கூடுதலா பிடிச்சத ITR செய்து வாங்கிக்கச் சொல்லிட்டாங்க' என்போர் மறக்காமல் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலரை மீண்டும் தொடர்பு கொண்டு சரியான வரிப்பிடித்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.
Saturday, February 21, 2026

TET - Paper 1 - Tamil - Important Questions Collection With Key Answer


ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள்-1-தமிழ் முக்கிய குறிப்புகளுடன் வினா விடைகள் அடங்கிய தொகுப்பு - பகுதி-3

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை

TET - Paper 1 - Tamil - Important Questions Collection With Key Answer - Download here

Friday, February 20, 2026

Friday, February 20, 2026

IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் /அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அரசாணை வெளியீடு!


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் /அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அரசாணை வெளியீடு!

Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973-SimpleGov- Simplification of procedures for acquiring/disposing of vehicle by Government Servants - Intimation through IFHRMS-Instructions - Issued

👇👇👇

Friday, February 20, 2026

நான் வங்கி அதிகாரி ஆனது எப்படி? - திவ்யா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

வணக்கம். என் பெயர் R.திவ்யா. நான் கரூர் மாவட்டத்தில் காக்காவடி என்ற ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம். என் அப்பா கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். என்னையும் என் தம்பியையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். "நான் முதல்வன்" போட்டி தேர்வுகள் பிரிவின் வங்கி, SSC, RRB உறைவிடப் பயிற்சி பெற்று, சமீபத்தில் நடைபெற்ற IBPS Probationary Officer (PO) வங்கி தேர்வில் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

தற்போது Central Bank of India வங்கி அதிகாரியாக வேலை செய்கிறேன். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு எந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்று யோசித்தபோது, எனக்கு வேளாண்மைத் துறையில் ஆர்வம் இருந்ததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023ஆம் ஆண்டு B.Sc., வேளாண்மை பட்டப்படிப்பை முடித்தேன். அரசுத் தேர்வுகள் மற்றும் வங்கி தேர்வுகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அந்தத் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினேன். ஒரு ஆண்டுக்குள் சுமார் ஆறு தேர்வுகளை எழுதியிருந்தேன்.

ஆனால் எந்தத் தேர்விலும் முதற்கட்டத் தேர்வை (Prelims) கூடத் தாண்ட முடியவில்லை. வீட்டிலும் பொருளாதார சிரமங்கள் இருந்தன. அந்த சமயத்தில், "நான் முதல்வன்" திட்டத்தின் SSC, RRB வங்கி உறைவிடப் பயிற்சி மையத்தை பற்றி என் நண்பர் மூலம் எனக்கு தெரிய வந்தது. அங்கு பயிற்சி பெற்று, அதற்கான தேர்வை நான் எழுதினேன். அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன். அடுத்த வங்கி தேர்வை நிச்சயம் நான் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள "நான் முதல்வன்" உறைவிடப் பயிற்சி நிலையத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கட்டணமில்லா பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு வசதி வழங்கினர். அங்கு இருந்த கணினி ஆய்வக வசதிகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கணினி வழங்கப்பட்டது. Prelims மற்றும் Mains தேர்வுகளுக்குத் தனித்தனியாக, மாணவர்களின் நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டது. Prelims தேர்வுக்காக Apptitude, Reasoning, ஆங்கிலம் போன்ற பாடங்கள் அடிப்படை நிலை முதல் தெளிவாக கற்பிக்கப்பட்டன. Mains தேர்வில் மாணவர்கள் எவ்வாறு முன்னேறலாம் என்பதையும், அவர்கள் எந்தப் பகுதிகளில் பலவீனமாக உள்ளார்கள் என்பதையும் கவனித்து அதற்கேற்ப பயிற்சி அளித்தார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

IBPS PO தேர்வில் Mains தேர்வுக்கான பயிற்சி மிகவும் பயனளித்தது. Mains தேர்வைத் தாண்டிய மாணவர்களுக்கு நேர்கானலுக்கான தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதற்காக தனியாக பயிற்சியாளர்களையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது நேர்கானலில் எந்தப் பயமும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் பங்கேற்க மிகவும் உதவியாக இருந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி IBPS PO தேர்வு முடிவுகள் வெளியானது. நான் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்ற செய்தி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் செய்தியை கேட்டதும் என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அது எனக்கு மறக்க முடியாத சந்தோஷமான தருணமாக இருந்தது. எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி.

இந்த வேலை எங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கட்டணமில்லா பயிற்சி மற்றும் தங்கும் வசதிகள் இந்தத் தேர்வில் வெற்றி பெற மிகவும் உதவியாக இருந்தன. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், “நான் முதல்வன்” திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்: எங்களை போன்ற காது, வாய்பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கும் வெற்றி பாதையை காட்டியது "வெற்றி நிச்சயம் திட்டம்". அமைதி மட்டுமே இருக்கின்ற எங்கள் உலகம். அப்பா, அம்மா ஆசையா பெயர் சொல்லி கூப்பிட்டாலும் கூட கேட்காது. இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சத்தமும் எங்களுக்கு புரியாது. நான் என் மனைவி இருவரும் காது, வாய் பேச முடியாதவர்கள், எங்களுக்கு இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எங்கள் குடும்பம் மிகவும் கடினமான நிலையில் இருந்ததால், நாங்கள் நிறைய இடங்களில் வேலைக்காக தேடித் திரிந்தோம், வேலை கிடைக்கவில்லை.

எங்கள் வாழ்க்கை எப்படியாக இருக்கும் என்று நினைத்து மிகவும் கவலையாகவும், கஷ்டப்பட்டும் இருந்தோம். பல இடங்களில் முயற்சி செய்தும் எங்களுக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. காது கேட்காத மாற்று திறனாளிகள் என்று எங்களை தவிர்த்து விட்டார்கள் அப்பொழுது, WhatsApp குரூப்பில் "வெற்றி நிச்சயம் திட்டம்" மூலமா மாற்றத்தினாளிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று அறிந்து கொண்டோம். நானும் என் மனைவியும் இரண்டு பேரும் சேர்ந்து வெற்றி நிச்சயம் மையத்திற்கு சென்று பார்த்தோம். காது கேளாத மாற்றத்தினாளிகளுக்கு வெற்றி நிச்சய திட்டம் மூலமாக வேலை வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு வாய்ப்பும் கிடைத்தது.

ZF தொழிற்சாலைக்குள் சென்று பார்த்த பொழுது, இயந்திரங்களில் வேலை பாக்க போகிறோம் என்று நினைத்தபொழுது மகிழ்ச்சியாக இருந்தாலும், இங்கு இருப்பவர்கள் எல்லாம் அதரவு கொடுப்பார்களா, இவர்கள் நமக்கு இதை பற்றி சொல்லிக்கொடுப்பார்களா என்று நினைத்தோம், இந்த ZF தொழிற்சாலையில் இவ்வளவு காது, வாய்பேச முடியாதவர்கள் வேலை செய்கிறார்கள் என்று பார்த்தபொழுது, அது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

எங்களுடைய குடும்பமும், எங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் ஒரு கம்பெனில வேலை பார்த்து, அந்த கம்பெனிக்கும் நாங்கள் உதவிகரமா இருக்கிறோம். அவங்களுக்கும் எங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கொடுத்து, எங்களுடைய வாழ்க்கையயை மாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலைமைச்சருக்கும், ஞீணி கம்பெனிக்கும், வெற்றி நிச்சயம் திட்டத்திற்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Friday, February 20, 2026

தமிழ்நாடு அரசு *மாதிரிப் பள்ளிகளில்* இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் IIT, NLU, NIFT, NIT உள்பட 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு!!!
Friday, February 20, 2026

TET தேர்வுக்கு பணிச்சான்று வழங்கும் விண்ணப்பிக்க நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் - டிட்டோஜாக் அறிக்கை


பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் டிட்டோஜாக் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வுக்கு. விண்ணப்பிக்கும் போது பணி சான்று வழங்க வேண்டி உள்ளது.

இந்த பணிச்சான்றை பெறுவதற்கு கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை சான்றுகள் மற்றும் பணிப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்டத் தொடக்கக் அலுவலரிடம் பெற வேண்டி உள்ளது. சில மாவட்டங்களில் தணிக்கைத் தடை சான்றுகளையும் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கேட்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம்-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிபுரிந்து வரும் நிலையில் மீண்டும் அவைகளை எல்லாம் மீண்டும் நகலெடுத்து வழங்க வேண்டியதில்லை என டிட்டோஜாக் கருதுகிறது.

டிட்டோஜாக் அறிக்கை - Download here

Friday, February 20, 2026

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது தொடா்பாக அவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த அரசுப்பள்ளி ஆசிரியா் செல்வி என்பவா் அளித்த மனு: எனது ஆதாா், பான் அட்டை எண்களை வைத்து போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்து திருப்பூரில் ஏஎஸ் டிரேடா்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.76.31 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்வரி செலுத்துவதற்காக வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்ப வங்கிக்கு சென்றபோது ஜிஎஸ்டி வரி செலுத்தாததால் எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் எனது ஊதியம், எனது தாயாரின் மருத்துவ செலவுக்காகவும் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, எனது வங்கிக் கணக்கை முடக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கத்தாளம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: எனது தந்தை இறந்துவிட்டாா். அரியூரை சோ்ந்த 2 போ் எனக்கு அறிமுகமாகி, வேலூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறினா். அதை உண்மையென நம்பி அவா்கள் கேட்ட ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது என்னை மிரட்டுகின்றனா். எனவே, ரூ.5 லட்சத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்குப்பத்தை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்த மனு:, பள்ளிப் படிப்பை முடித்துள்ள எனது மகனுக்கு அதேபகுதியை சோ்ந்த தந்தை, மகன் ஆகியோா் கடந்த 2025-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் கேட்டனா். அதன்பேரில், ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து, அவா்கள் பொன்னையில் 2 மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இப்பயிற்சி முடிந்தபிறகு அளிக்கப்படும் சான்றிதழைக் கொண்டு வேலை கிடைக்கும் என தெரிவித்தனா். அவா்கள் கூறியபடி பொன்னையில் சென்று கேட்டபோதுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு காவல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
Friday, February 20, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2026

 

சமூக நீதிக்கான உலக நாள்
திருக்குறள்: 

குறள் 341: 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் அலன். 

விளக்க உரை: 

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பழமொழி :

Borrowing is sorrowing. 

கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர் -
Approximately 19,000 km

02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12 
Vitamin B12 

English words :

consequence –impact happens due to some incidents 

ஒரு செயலினால்‌ ஏற்படும் பின்விளைவுகள். 

contest –a competition to find out who is the best

யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி

தமிழ் இலக்கணம்: 

 ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம் 
ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.
 
பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.
இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும். 
எ.கா 1. பசு‌ கன்றுகளை ஈன்றன.
எது? பசு.‌ பசு ஒருமை 
ஒருமை து வில் முடியும் 

 சரியான விடை –பசு‌ கன்றுகளை ஈன்றது.
2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.
எது? இரும்பு சத்து.‌ இரும்பு சத்து ஒருமை 

சரியான விடை 

கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.
3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது
எது? வண்டிகள்.‌ இது பன்மை. 
 சரியான விடை 
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.

அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது.  இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது

பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை

 எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.

ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

20.02.2026

⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

Today's Headlines

⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

🏀 Sports News

🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.

Covai women ICT_போதிமரம்

Thursday, February 19, 2026

Thursday, February 19, 2026

TET 2026 For Working Teachers - ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்


ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்*

1. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட bed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும்.

உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது

9. OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை

10. பிற இனத்தவர்களுக்கு (OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்

11. பொதுவாக EMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்பனியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி(தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்

15. உயர்நிலை மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும்

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, February 19, 2026

பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!



பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, February 19, 2026

NMMS 2025 - தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள்


*🆕NMMS EXAM RESULT 2025*

*▪️தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள்*

General Category :

SAT & MAT

இரண்டிலும் 90 க்கு 36 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

Reserved Category :

SAT & MAT

90 க்கு ஒவ்வொன்றிலும் 29 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
Thursday, February 19, 2026

ஆசிரியர்கள் TET தேர்விற்கு பணிச்சான்றுகள் பெற விண்ணப்பிக்க இணைக்கவேண்டிய ஆவணங்கள்- DEO's Proceedings

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEO Proceedings

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்

Thursday, February 19, 2026

“என் வாழ்க்கையை மாற்றியமைத்த பயிற்சிகள்...” - அரிஷ் பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

என்னுடைய பெயர் அரிஷ். நான் அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த மாணவன். சிறு வயதிலிருந்தே கட்டிடங்கள், அணைகள், வடிவமைப்புகள் போன்றவற்றில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.

என்னுடைய பாட திட்டத்தை தாண்டி பல பாடங்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்துக்கொண்டு இருக்கிறேன், அதில் ஒன்று “Water Distribution and Layout Using EPANET” என்ற பயிற்சியை நான் படித்தது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.

ஒரு அணையை எவ்வளவு உயரத்தில் கட்ட வேண்டும், எவ்வளவு அளவு தண்ணீர் சேமிக்க வேண்டும், எந்த வகை inlet மற்றும் outlet குழாய்களை பயன்படுத்த வேண்டும், எந்த பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், குழாய்களின் விட்டம் என்ன இருக்க வேண்டும் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை ஆழமாக கற்றுக்கொண்டேன்.

இவை எல்லாம் புத்தக அறிவாக மட்டுமில்லாமல், நடைமுறை அனுபவமாக எனக்கு கிடைத்தது. இன்டெர்ஷிப் காக ஒரு நிறுவனத்திற்கு சென்றபோது ஒரு அணை கட்டுவதற்கான ப்ளான் போட சொன்னார்கள், நான் படித்த “Water Distribution and Layout Using EPANET” பயன் படுத்தி போட்ட ப்ளானை பார்த்து அங்கு இருந்த அதிகாரிளே ஆச்சரியப்பட்டார்கள்.

வீட்டில் நான் அணை வடிவமைப்பு, கட்டிடம் வடிவமைப்பு போன்ற டிசைன்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அதை அவர்கள் ஆச்சரியமாக பார்த்து சந்தோஷப்படுவார்கள். அந்த தருணங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற பயிற்சிகள் இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நான் அரசு கல்லூரி மாணவன் என்பதால், கட்டணத்தைச் செலுத்துவதற்கே சிரமம் இருந்தது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் , Tamil Nadu Skill Development Corporation வழங்கிய இந்த இலவச பயிற்சிகள் என் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன. இது எனக்கு புதிய திறன்கள், புதிய நம்பிக்கை, புதிய எதிர்காலத்தை அளித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் இன்னும் சிறப்பாக வளர வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். நான் முதல்வன் திட்டத்தை எங்களுக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி