Breaking

Friday, March 20, 2026

Friday, March 20, 2026

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்



தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்
Friday, March 20, 2026

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவு.
Friday, March 20, 2026

ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...

ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...

ஏப்ரல் 1 முதல் PAN கார்டு பெறும் விதிகளில் முக்கிய மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஆதார் கார்டு மட்டும் பயன்படுத்தி PAN கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. பிறப்பு தேதி உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.

இதற்காக பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆதார் அடிப்படையில் எளிதாக PAN பெறும் நடைமுறை இருந்த நிலையில், புதிய விதி மூலம் சரிபார்ப்பு நடைமுறை கடுமையாக்கப்படுகிறது.
Friday, March 20, 2026

12 துறைகளின் ஊழியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

12 துறைகளின் ஊழியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு.



Friday, March 20, 2026

மாவட்டம் வாரியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம்

1. Ariyalur - 12

2. Chengalpattu - 11

3. Dindigul - 11

4. Erode - 15

5. Kanniyakumai - 8

6. Kallakurichi - 17

7. Madurai - 7

8. Namakkal - 16

9. Perambalur - 5

10. Pudukkottai - 20

11. Ramanathapuram - 16

12. Ranipettai - 28

13. Theni - 7

14. The Nilgris - 8

15. Trichy - 13

16. Thanjavur - 10

17. Thiruppur - 10

18. Thiruvallur - 10

19. Thiruvarur - 15

20. Thirunelveli - 2

21. Tenkasi - 9

22. Thoothukudi - 6

23. Sivagangai - 10

24. Salem - 19

25. Krishnagiri - 7

26. Thiruvannamalai - 39

27. Cuddalore - 10

28. Nagapattinam - 16

29. Coimbatore - 11

30. Kanchipuram - 10

31. Villupuram - 20

32. Vellore - 14

33. Virudhunagar - 15

34. Mayiladuthurai - 4

35. Karur - 7

36. Thiruppathur - 9

37. Chennai - Nil

38. Dharmapuri - Nil

Total : 447
Friday, March 20, 2026

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்

மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்படும். மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028.ல் அமலுக்கு வரும் இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல்" - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Friday, March 20, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026




உலக சிட்டுக்குருவிகள் நாள்


திருக்குறள்: 

குறள் 573: 

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் 
கண்ணோட்டம் இல்லாத கண். 

விளக்க உரை: 

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

பழமொழி :

Everything has its own worth. 

அதற்கு அதற்குரிய மதிப்பு உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வன்முறை என்பது மோசமானது. ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது - சுபாஷ் சந்திர போஸ்

பொது அறிவு : 

1. உலக அளவில் புளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

இந்தியா

2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்  நாடு எது?

தாய்லாந்து

English words :

Candidate – A person who contests in an election

Constituency – Area where people vote for a candidate

தமிழ் இலக்கணம்: 

த்தனை, எத்துணை இவைகளின் வேறுபாடு காண்போம்.

 எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்

எ. கா.

 1. எத்தனை நோட்டுகள் வேண்டும்?

2. எத்தனை பழங்கள் விற்பனை ஆயின?

 எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்

எ. கா. 1. எத்துணை பெரிய மலை

2. எத்துணை சிறிய பூச்சி 

   3. எத்துணை ஆண்டு பழமையானது

4. எத்துணை மாதம் ஆகும்?

அறிவியல் களஞ்சியம் :

மனித வயிற்று அமிலம் ரேஸர் பிளேடுகளைக் கரைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

மார்ச் 20


உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD)

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

நீதிக்கதை

 யானையும் தேனீயும்


ஒரு காட்டில் ஒரு தேனீ வசித்து வந்தது. அந்தத் தேனீக்கு தான் மட்டும் தான் இந்த காட்டில் மிகவும் அழகானவன் என்ற கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு நாள் அந்தக் காட்டில் தேனீ பறந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு யானை வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது அந்த தேனீ யானையின் காதின் மீது அமர்ந்து யானையை நலம் விசாரித்துக் கொண்டு யானையே நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் , என்னைப்பார் நான் எவ்வளவு மெலிதாக அழகாக இருக்கிறேன் என்னுடைய இந்த இறக்கைகள் என்னுடைய உடம்பிற்கு அழகினை கொடுக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது.

அந்த நேரத்தில் தேனீ யானையிடம் கூறியது, ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் உனக்கு நீண்ட தும்பிக்கையை உள்ளது. எனக்கு நீண்ட வாய் உள்ளது .ஆனால் என் வாயினால் நான் பூவில் உள்ள தேனை உறிஞ்சுவேன். உன்னால் அது முடியுமா என்று கேட்டு கேலி செய்தது.

அந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தை யானை தாங்கிக் கொண்டது. ஆனால் தேனீயால் அந்த காற்றினை தாங்க முடியவில்லை. அந்த காற்றினால் அடித்து செல்லப்பட்ட ”தேனீ ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள், என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று கத்திக்கொண்டே சென்றது.

அச்சமயம் யானை தேனீயை காப்பாற்றலாம் என்று பார்க்கும்பொழுது தேனீ கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டது. யானை அதன் கொழுத்த உடலைக் கொண்டு அங்கிருந்து சிறிது வருத்தத்துடன் நகர்ந்து சென்றது.

கருத்து: கர்வம் கூடாது

இன்றைய செய்திகள்

20.03.2026

⭐உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்து உள்ளது.

⭐மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 15 அமெரிக்க நிறுவனங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரானின் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

⭐ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாய் துறைமுகத்தில் சிக்கியுள்ளன. இதனால் சூடானில் சுமார் 4,00,000 நோயாளிகள் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது

Today's Headlines

⭐ Even though crude oil prices are rising in the global market, India’s Ministry of Petroleum has announced that there is currently no plan to increase petrol and diesel prices in the country.

⭐ Iran’s security force (IRGC) has warned 15 American companies operating in Middle Eastern countries to immediately evacuate their employees.

⭐ Due to the Iran–Israel conflict, essential medicines worth about 600,000 dollars are stuck at the Dubai port. As a result, around 400,000 patients in Sudan are suffering without alternative arrangements.

*SPORTS NEWS*

🏀 The IPL 2026 cricket festival is set to begin on the 28th. Chennai Super Kings will face the defending champions, Royal Challengers Bangalore, in the opening match.

Covai women ICT_போதிமரம்

Thursday, March 19, 2026

Thursday, March 19, 2026

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வில் ஆங்​கில பாடத்​துக்​கான வினாத்​தாள் சற்று கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழக பள்​ளிக் கல்வி பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து ஆங்​கிலப் பாடத்​துக்​கான தேர்வு நேற்று நடை​பெற்​றது. இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 4,219 மையங்​களில் 8.84 லட்​சம் மாணவர்​கள் எழு​தினர். மேலும்,11,411 மாணவர்​கள் தேர்​வில் பங்​கேற்​கவில்​லை. இந்த தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்​து, ஆசிரியர்​கள் கூறுகை​யில், “வி​னாத்​தாளில் 1, 2 மதிப்​பெண் பகு​தி​யில் சில கேள்வி​கள் கடின​மாக இருந்​தன. இலக்கண பகு​தி​யும் சற்று கடின​மாகவே இருந்​தது. மெல்ல கற்​கும் மாணவர்​கள் தேர்ச்சி பெறு​வ​தில் பெரி​தாக சிக்​கல் இருக்​காது. எனினும், அதிக மதிப்​பெண் பெற விரும்​பிய மாணவர்​களுக்கு இந்த வினாத்​தாள் சற்று ஏமாற்​ற​மாகி​விட்​டது. சென்​டம் எண்​ணிக்​கை​யும் குறைய வாய்ப்​புள்​ளது” என்​றனர்.

தொடர்ந்து கணிதப் பாடத் தேர்வு வரும் 25-ம் தேதி நடை​பெறவுள்​ளது. ஒட்​டு மொத்​த​மாக 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு ஏப். 6-ம் தேதி​யுடன் முடிவடைய உள்ளது. மேலும், தேர்வு முடிவு​கள் மே 20-ல் வெளி​யிடப்பட உள்​ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தமிழகம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழுதுகின்​றனர். மார்ச் 26-ம் தேதி​யுடன் தேர்வு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்​து, விடைத்​தாள் திருத்​தும் பணி தொடங்க உள்​ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: 

தேர்​வு​கள் முடிந்த பிறகு, மாணவர்​களின் விடைத்​தாள்​கள் மார்ச் 28-ம் தேதி மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு அனுப்​பப்​பட்​டு, அங்கு கலக்கி பிரிக்​கப்​படும். பின்​னர், விடைத்​தாள் திருத்​தும் பணிக்​காக தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 83 முகாம்களுக்கு ஏப்​.4-ம் தேதி கொண்டு செல்​லப்​படும்.

திருத்​துதல் பணி ஏப்​.8-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடை​பெறும். இதில் சுமார் 46 ஆயிரம் முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடுபட உள்​ளனர். விடைத்​தாள் திருத்​தும் பணி​யின்​போது ஆசிரியர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி கவனத்​துடன் செயல்​படு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.
Thursday, March 19, 2026

பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதம் சற்று கடினம்: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு


பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல், உணவு மேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இதில் கணித பாடத்துக்கான வினாத்தாளில் மறைமுகவினாக்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு பதிலளிப்பதில் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கணித ஆசிரியர்கள் கூறும்போது, “ஒரு மதிப்பெண் வினாக்களில் 4 வினாக்கள் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதேபோல், 2, 3, 5 மதிப்பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக்களாக இருந்தன.

இவற்றைப் புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்பட்டனர். அதேநேரம், கட்டாய வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தன. 2, 5 மதிப்பெண் பகுதிகளில் தலா 3 வினாக்கள் எளிதாக இருந்ததால் தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது. எனினும், சென்டம் எண்ணிக்கை குறையும்”என்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய தேர்வுகள் கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்- ஆஃப் மதிப்பெண் குறையும் என கூறப்படுகிறது.
Thursday, March 19, 2026

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலா் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதில், பள்ளிக் கல்வியில் இணை இயக்குநா் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான நோ்முக உதவியாளா்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-219, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-107, முதுநிலை ஆசிரியா்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநா் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியா்கள்- 664 என ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.

அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் பணியிடம்-1, அலுவலக உதவியாளா்கள்-119, கண்காணிப்பாளா்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடா் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, March 19, 2026

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

விடைத்தாள் நகல்

உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படி திருத்தப்பட்ட தாள் தகவல் ஆகும்.

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

Google drive மூலம் உத்தரவு நகலை open செய்யலாம் 👇👇👇

Thursday, March 19, 2026

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில், எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்​டில் தொடங்க, தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற படிப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த படிப்​புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்​கு​மாறு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனையை அறி​வுறுத்​தி​யது.

ஆண்டுக்கு 18 மாணவர்கள்

அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​கும் வகை​யில், மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் மூல​மாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்​து​வ​மனை இயக்​குநரின் கருத்​துரு அரசுக்கு வரப்​பெற்​றது.

அக்​கருத்​துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் எம்.ஏ. கினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​க​வும், ஆண்​டு​தோறும் 18 மாணவர்​களை சேர்த்​துக் கொள்​ள​வும் அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இப்​பு​திய படிப்​புக்கு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக் கழகத்​திடம் உரிய அனு​மதி பெறப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
Thursday, March 19, 2026

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, March 18, 2026

Wednesday, March 18, 2026

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை முடிக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத் தேர்வுகளை விரைவில் முடிக்க ஏற்பாடு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி
Wednesday, March 18, 2026

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!
Wednesday, March 18, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

ரூடோல்ப் டீசல்


திருக்குறள்: 

அதிகாரம் 58 / CHAPTER 58 

கண்ணோட்டம் 

குறள் 571: 

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு. 

விளக்க உரை: 

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பழமொழி :

When fortune smiles embrace her. 

அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அனைத்துக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

தேக்கு மரம் -Teakwood

02.இந்தியாவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா -Maharastra

English words :

opportunity -

a chance to do something that you would like to do, செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு

opponent -a person who disagrees with somebody's actions, எதிராளி

தமிழ் இலக்கணம்: 

அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

எ. கா. 1. இது பழம் அன்று

இவை பழங்கள் அல்ல.

2. இது காகம் அன்று. 

        இவை காகங்கள் அல்ல

அறிவியல் களஞ்சியம் :

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 18

ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நீதிக்கதை

 பொய்

நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு.

பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றைய செய்திகள்

18.03.2026

⭐நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்... 11000 கி.மீ. நீள சோலார் பெல்ட் அமைக்கும் ஜப்பானிய நிறுவனம்!
உலகிற்கே தடையற்ற மின்சாரம் வழங்க நிலவைச் சுற்றி 11,000 கி.மீ நீளத்திற்கு சோலார் வளையத்தை உருவாக்கும் ஜப்பானின் பிரம்மாண்ட 'லூனா ரிங்' திட்டம்.

⭐மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போர், இந்தியாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என (GJEPC) எச்சரித்துள்ளது.

⭐ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.

Today's Headlines

⭐ A Japanese company has proposed a massive “Luna Ring” project to generate 13,000 terawatts of electricity from the Moon. The plan involves building an 11,000 km-long solar belt around the Moon to provide uninterrupted power to the entire world.

⭐ The ongoing Israel–Iran conflict in the Middle East is expected to significantly impact India’s $2 billion gem and jewellery exports, according to the Gem & Jewellery Export Promotion Council (GJEPC).

⭐ The United States Commerce Secretary Scott Bessent has stated that Iranian oil tankers are being allowed to pass through the Strait of Hormuz.

*SPORTS NEWS*

🏀 In the IPL tournament, Virat Kohli is set to return to play for Royal Challengers Bangalore. After playing a key role in helping the team win their first-ever title last season, he will aim to defend the championship in the upcoming IPL season.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 17, 2026

Tuesday, March 17, 2026

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தடை ஆணை வழங்கப்படவில்லை .

Tuesday, March 17, 2026

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்?

தேர்தல் பணி விலக்கு

அனைவருக்கும் வணக்கம். அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

1. நீகன் (முழு குருட்டு 70% மேலே மட்டும்)

2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)

3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)

4.புற்றுநோய்

5.கன்னியாஸ்திரிகள்

6.31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்

மேற்காண் பிரிவில் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும்.