Breaking

Wednesday, February 25, 2026

Wednesday, February 25, 2026

NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத துறை அனுமதி வேண்டுதல் மற்றும் தடையின்மை சான்று வழங்க வேண்டுதல் சார்ந்தது.

Wednesday, February 25, 2026

‘சிப் டிசைனிங்’ வேலை கிடைத்தது எப்படி? - வினோதா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்


என் பெயர் வினோதா. என் சொந்த ஊர் கடலூர். என் அப்பா ஒரு டைலர், நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், நான் BE படித்திருக்கிறேன், Edveon Technologies என்ற நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக எனக்கு வேலை கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டம், எங்கள் கல்லூரியில் கட்டாய திறன் பயிற்சியாக கொண்டுவந்ததின் விளைவாக, நான் முதல்வன் பாட திட்டத்தின் பாடத்திட்டங்களை படித்தோம், அதில் எனக்கு பிடித்த IC Chip Design and Verification பாடத்தை படித்தேன், ஒவ்வொரு semester ளையும் நிறைய பயனுள்ள திறன் பயிற்சிகளை கொடுத்தார்கள், இந்த பாடங்களை வெளியே சென்று படித்தால் 3 லட்சங்கள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கட்டணமில்லாமல் நான் படித்தேன்.

நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா Hackathon அனைத்திலும் பங்குப்பெற்றேன், நிரல் திருவிழா Hackathon மூலமாக Edveon Technologies-ல் Internship-ம் கிடைத்தது, Internship முடிந்து, அதே நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தால் Chip Designing and Verification Engineer ஆக வேலையும் கிடைத்தது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நல்ல வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் பொற்றோர்களும் சரி நானும் சரி எனக்கு பிடித்த வேலை இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ஏன் என்றால் புதியவர்களுக்கு (fresher) இந்த வேலை அவ்வளவு சுலபாக கிடைக்காது, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகத்தான் இந்த வேலை எனக்கு கிடைத்துள்ளது, நான் முதல்வன் திட்டத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வருக்கும் நன்றி.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/
Wednesday, February 25, 2026

பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
Wednesday, February 25, 2026

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை வெளியீடு - பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி சதவீதத்தில் மாற்றமில்லை!


School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of minimum qualifying marks for the category of Persons with Disability - Orders

ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை வெளியீடு - பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி சதவீதத்தில் மாற்றமில்லை!

👇👇👇👇

G.O(Ms)No.46 - Disabled Pass in TET - Download here
Wednesday, February 25, 2026

தனித் தேர்வர்களுக்கு (Private Candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!

CLICK DOWNLOAD



தனித் தேர்வர்களுக்கு (Private Candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

👇👇👇

DGE - SSLC Pvt Science Practical Instructions - Download here

DGE - HSE Pvt Science Practical Instructions - Download here
Wednesday, February 25, 2026

RH மார்ச்-2026 மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள்

* (02.03.2026) திங்கள்- மாசிமகம்

* 04.03.2026) புதன்கிழமை - பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

* (16-03-2026) திங்கள்- ஷபேகாதர்

RH List : CLICK DOWNLOAD
Wednesday, February 25, 2026

பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் `முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளில் திருத்தங்கள்` மேற்கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!


பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் `முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளில் திருத்தங்கள்` மேற்கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

DGE - Correction to Examination Handbook - Download here
Wednesday, February 25, 2026

TET - Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?


TET - Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?

தாள் - 1 எனில்

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)

6. Community Certificate (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. Community Certificate (Pdf : 250-300 KB)

6. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)

7. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)

8. U.G Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)

9. U.G. Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)

11. B Ed Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

12. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)
Wednesday, February 25, 2026

AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!


AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - Merging Of Certain Heads Proceedings - Download here
Wednesday, February 25, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2026

திருக்குறள்: 

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து. 

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

Laughter is the best medicine. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமயமாகிவிடும்        

விவேகானந்தர்

பொது அறிவு : 

01.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை நூல்  எது?

சந்தியா சங்கீத்' (Sandhya Sangit - மாலைக்கால கவிதைகள்)

02."சிலம்புச் செல்வர்"என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?

 ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்)
Mylai Ponnuswamy Sivagnanam.

English words :

Terminate –to end, முடிவுறுதல், முடிவுறச் செய்தல்

culminate –to reach a final result.

இறுதி முடிவை எட்டுதல்

தமிழ் இலக்கணம்: 

 நர்/ னர் 
எந்த விகுதி எந்த வார்த்தையின் பின் வரும் என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.
கட்டளை சொல்லின் பின்னால் 
 நர் வரும். மற்ற சொற்களின் பின்னால் னர் வரும் 
* அனுப்பு (கட்டளை) = அனுப்புநர்
* பெறு (கட்டளை) = பெறுநர்
* அளித்த (கட்டளை இல்லை) = அளித்தனர்
* பேசி (கட்டளை இல்லை) = பேசினர்

அறிவியல் களஞ்சியம் :

துவக்கத்தில் பூமியின் விரைவான சுழற்சியால் ஒரு நாள் = 6 மணி நேரம் இருப்பினும் சில மதிப்பீடுகள் சந்திரனை உருவாக்கிய மாபெரும் மோதலுக்குப் பிறகு உடனடியாக 4 மணி நேரம் வரை குறுகியதாக இருந்தது. ஒரு நாளின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் என்பது, சுமார் 12 மணி நேரத்தையும், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 19 மணி நேரத்தையும் எட்டியது.

நீதிக்கதை

 தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

25.02.2026

⭐திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

⭐இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

⭐தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்-அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

⭐உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.இவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated the silver jubilee entrance gate of the Thiruvalluvar statue.

⭐ No longer “Kerala” but “Keralam”… The Union Cabinet has approved the name change of Kerala!

⭐ The Election Commission of India has released the final electoral roll for Tamil Nadu.

⭐ The heat has started scorching in Tamil Nadu – the highest temperature of 100 degrees was recorded in Erode.

⭐ Due to the war between Ukraine and Russia intensifying again, Russia has announced the closure of four airports in Moscow.

🏀 Sports News

🏀 Although the Indian national cricket team lost to the South African national cricket team in the T20 World Cup match, Indian player Varun Chakravarthy has created a record. He has secured the number one position in the ICC bowlers' ranking. 

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 24, 2026

Tuesday, February 24, 2026

THIRAN - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்


THIRAN - February Assessment Information

- பிப்ரவரிமாத திறன் மதிப்பீடு 25.02.2026 (புதன் கிழமை) முதல் 27.02.2026 (வெள்ளி கிழமை) வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது.

- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.02.2026 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும்.

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

- 25.02.2026 முதல் 07.03.2026 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.
Tuesday, February 24, 2026

ஆசிரியர் மீது பொய் புகார் - ஆசிரியைகள், அதிகாரிகளுக்கு சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர் மீது போலியாக பாலியல் புகார் தெரிவித்து பணி நீக்கம் செய்த மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர். இதனடிப்படையில் 2016 செப்.16-ம் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டியனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து, ஆசிரியைகள் வனிதா மற்றும் ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது.

இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம், பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை முடிந்த நிலையில் நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கோகிலபாண்டியன், தற்போது ஆண்டிபட்டி ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
Tuesday, February 24, 2026

அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & விடுமுறை நாட்கள் அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & கோடை விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 

1 - 9 ஆம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பிற்கும் மார்ச் 12 தொடங்கி 17ஆம் தேதி ஆண்டு தேர்வு.

மார்ச் 18 - 31 வரை விடுமுறை; 

ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்.

மே 1 - 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை; 

மீண்டும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் தொடங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை.
Tuesday, February 24, 2026

TET Application - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்த தகவல்

இன்று நடைபெற்ற வட்டார கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான காணொளிக் கூட்டத்தில்

*தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்கள் தெரிவித்த தகவலின் படி

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச்சான்று service certificste வழங்குவதற்கு

ஆசிரியர்கள் முகப்பு கடிதத்துடன் பணிச் சான்று anexture 1 கடிதம் 3 பிரதிகள் மட்டும் வட்டார கல்வி அலுவலர் வாயிலாக

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தால் போதும்

மேலும் வேறு எந்த வித இணைப்பும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்கள்

தாள் ஒன்று மட்டும் தாள் இரண்டுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விரைவில் முறையான ஆணை வெளிவரும்

#TNTF flash

Tuesday, February 24, 2026

Foundational Learning Study 2025 - 26 | 3ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணைப்பு - பயிற்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கிட உத்தரவு.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025.26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு-

1. தமிழ் மாதிரி வினாத்தாள்

2. ஆங்கில மாதிரி வினாத்தாள்

Tamil_FLS 2025-26_Sample Questions - Download here

English_FLS 2025-26_Sample Questions - Download here

Tuesday, February 24, 2026

ரயில்வே தேர்வில் வென்றது எப்படி? - ரம்யா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

வணக்கம், என் பெயர் ரம்யா. என் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள். என் அப்பா ஓட்டுநராக பணிபுரிகிறார். கடந்த முன்று வருடங்களுக்கு மேலாக இந்தியன் ரயில்வே துறை தேர்வுகளை எழுதியிருந்தேன். என்னால் ஆனால் எந்தத் தேர்விலும் இறுதி கட்டம் வரை சென்று தேர்ச்சி பெறமுடியாமல் இருந்தேன்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வுகள் பிரிவில் வங்கி SSC, RRB உறைவிடப் பயிற்சி மையம் பற்றி என் தோழிகள் மூலமாக எனக்கு தெரிய வந்தது. அங்கு 6 மாத கட்டணமில்லா பயிற்சி நடைபெறுகிறது என்று தெரிந்து அதில் சேர்ந்தேன், அங்கு கட்டணமில்லாமல் பயிற்சி, புத்தகங்கள், தங்கும் வசதி மற்றும் உணவு வசதி அனைத்தையும் வழங்கினர். WIFI, ஆய்வக வசதிகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

பயிற்சி நிறுவனங்களில் இருந்து வந்து எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள். குழுவாக சேர்ந்துபடித்ததில் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது, ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்துகொண்டு படிக்க முடிந்தது, நான் தனியாக படிக்கும்பொழுது இவைகளை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன், நான் முதல்வன் பயிற்சியில் சந்தேகங்கள் எழுந்த பொழுது எனக்கு தெளிவாகவும் பொறுமையாகவும், விளக்கமாக சொல்லிக்கொடுத்தார்கள்.

நான் முதல்வன் திட்டத்தினால் இப்பொழுது, இந்தியன் ரயில்வே துறை தேர்வில் தேர்வு எழுதி Assistant Loco Pilot ஆக தேர்ச்சி பெற்றுள்ளேன். "நான் முதல்வன் திட்டத்தை" எங்களுக்கு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்:

வணக்கம் என் பெயர் பார்க்கவி, நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பட்டுக்கோட்டை பக்கத்துல பாவாஜன் கிராமத்தில் இருந்து வருகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாமே என் அம்மாச்சி வீட்டில் தான், எனக்கு அப்பா கிடையாது, நான் ரொம்ப படிக்க கஷ்டப்பட்டு வளர்ந்தவள்.


தோழிகள் மூலமாக வெற்றி நிச்சயம் பற்றி அறிந்து, நான் சென்னைக்கு வந்தேன், சென்னைக்கு முதன்முதலில் வரும்போது யாரையும் எனக்கு தெரியாது, எப்படி இங்கு இருக்க போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் இங்கே வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று, வெற்றி நிச்சயம் மூலமாக "Trans Energy Private Limited" என்ற நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

இப்பொழுது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன், என்னோட அம்மாவையும் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன், இப்பொழுது நான் தைரியமாகவும் , பாதுகாப்பாகவும் உணர்கிறேன். வெற்றி நிச்சயம் திட்டத்தால் தான் இந்த நல்ல நிலமைக்கு என்னால் வர முடித்தந்து.

எங்க அம்மாவிடம், நான் இருக்கிறேன் அம்மா உனக்கு என்று தைரியமாக சொல்ல முடிகிறது, எங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு இல்லை. ஆனால் சொந்தமாக வீடு கட்டி எங்க அம்மாவை அங்கு உட்கார வைப்பேன் என்ற தைரியம் உள்ளது. இந்த தைரியத்தை கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாவிற்கும், துணை முதலமைச்சருக்கும், மிக்க நன்றி.
Tuesday, February 24, 2026

பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 படித்து முடித்த ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், 3 ஆண்டு இளங்​கலை ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்​புக்கு விண்​ணப்​பிக்​கு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் மூலம் பிளஸ்-2 முடித்த ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள், தேசிய தேர்வு முகமை சார்​பில் நடத்​தப்​படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு மூல​மாக, தரமணி​யில் இயங்கி வரும் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி அண்ட் அப்​ளைடு நியூட்​ரிஷன் நிறு​வனத்​தில் 3 ஆண்டு முழு நேர இளங்​கலை அறி​வியல் பட்​டப் படிப்​பில் சேர்ந்து பயில விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.


தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு வரும் ஏப்​.25-ம் தேதி ஆன்​லைன் வாயி​லாக நடை​பெறவுள்​ளது. இத்​தேர்வை எழுத மாணவர்​கள் மார்ச் 25-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தேர்வு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை அறிய​வும், முன்​ப​திவு செய்​ய​வும் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணை​யதளத்தை அணுகலாம்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி​யில் பயில, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள் பிளஸ்-2 வகுப்​பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும்.

குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும். தாட்கோ மூல​மாக படிப்​பில் சேர www.tahdco.com என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்ய வேண்​டும்.

படிப்​புக்​கான செலவை தாட்கோ ஏற்​கும். படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​சத்​தில் மாணவர்​களுக்கு நட்​சத்​திர விடு​தி​கள், உயர்தர உணவகங்​கள், விமானத் துறை, கப்​பல் துறை மற்​றும் சேவைத் துறை சார்ந்த நிறு​வனங்​களில் பணிபுரிய வழி​வகை செய்​யப்​படும். ஆரம்ப கால மாத ஊதி​ய​மாக ரூ.25 ஆயிரம்​ முதல்​ ரூ.35 ஆயிரம்​ வரை பெறலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.