Breaking

Tuesday, March 10, 2026

Tuesday, March 10, 2026

SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

Tuesday, March 10, 2026

இன்றைய செய்திகள் 10.03.2026(செவ்வாய்க்கிழமை)

🌹நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷத்தை மாற்றவும்,ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்டவும் தெரிந்தவர்களே, மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!

🌹🌹அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு, பெரும்பாலும், வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும்,அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.!!

🌹🌹🌹ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால்... அவர் நல்லதே செய்தாலும் மனம் குறைகளை மட்டும்தான் தேடும்...

அவர் நல்லவராகவே இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்...

இதுவே மனித இயல்பாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️2025-2026 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

⛑️⛑️ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த தட்டச்சர்களை விடுத்து அமைச்சு பணியாளர்களுக்கு உண்டான ஆசிரியர் பணி மாறுதல் என்பது இல்லை என தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு வெளியீடு.

⛑️⛑️திட்டமிட்டபடி நீட் தேர்வு மே 3, 2026 அன்று நடைபெறும் - NTA

⛑️⛑️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு.

⛑️⛑️தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய 12 ம் வகுப்பு மாணவன்.முதலில் தேர்வெழுத அனுப்ப மறுத்த உறவினர்கள். மாணவனின் எதிர்காலத்தை கருதி உடனடியாக தலையிட்டு தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியர்.. தேர்வுக்கு பின் தனது காரிலேயே மாணவனை அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்..

🍒🍒100 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்துள்ளது.

ஈரான் ஹோர்மோஸ் நீரிணையை மூடியதால் உலகளாவிய விநியோகத்தில் பாதிப்பு.

இதன் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 18% உயர்ந்து 110 டாலர் வரை சென்றது.

⛑️⛑️"புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்"

ஈரான் அணு அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்தால் உலகளவில் எண்ணெய் விலை விரைவாக குறையும்.

குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலை உயர்ந்தாலும், அது உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய சிறிய விலையே.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்.

தனது Truth Social சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு.

⛑️⛑️வீட்டு உபயோக சிலிண்டர் மீது முக்கியத்துவம்:

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் உற்பத்தி குறைப்பு என தகவல்..

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

வீட்டு உபயோக சிலிண்டர் 1 வைத்திருந்தால் 21 நாட்களில் புக்கிங் செய்யலாம்..

வீட்டு உபயோக சிலிண்டர் 2 வைத்திருந்தால் 30 நாட்களில் புக்கிங் செய்யலாம்

⛑️⛑️விஜய் ஆஜராவது சந்தேகம்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகமாட்டார்; வழக்கறிஞர் மூலம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோர விஜய் தரப்பு முடிவு என தகவல்.

இதே வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து 2 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்; இன்று முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதை ஒட்டி விஜய் ஆஜராக மாட்டார் என தகவல்.

⛑️⛑️புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைப்பு.

தமிழகத்தை போல் புதுவை மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு.

சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

⛑️⛑️வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற பக்தர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய, கெம்பட்டி சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதில் ஏற்பட்ட 3வது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

⛑️⛑️பாக்.,-ல் பெட்ரோல் விலை உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 321 ரூபாயாகவும், டீசல் 335 ரூபாயாகவும் உயர்வு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்

⛑️⛑️சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் மதுரைக்கு துணை ராணுவத்தினர் வந்தடைந்தனர்.

⛑️⛑️தங்கம் விலை குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஒரு சவரன் ரூ.1,19,600க்கும், ஒரு கிராம் ரூ.14,950க்கும் விற்பனை ⛑️⛑️மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு

பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

⛑️⛑️புதிய தலைவருக்கும் டிரம்ப் வார்னிங்

``ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மோஜ்தபா காமேனி, அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. அயதுல்லா அலி காமேனியின் மகனான மோஜ்தபா தகுதியற்றவர்''

* டிரம்ப் விமர்சனம்

⛑️⛑️இன்று (மார்ச் 10) காலை 10 மணிக்கு, தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு

⛑️⛑️மார்ச் 12ல் தவெக போராட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12ல் தவெக போராட்டம் அறிவிப்பு

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் போராட்டம் குறித்து அறிவிப்பு

⛑️⛑️கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்”

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

⛑️⛑️கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை விற்க G7 அமைப்பு பரிசீலனை!

கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை சர்வதேச சந்தையில் விற்க G7 பரிசீலனை.

G7 நாடுகளின் சுமார் 30% எண்ணெய் இருப்பை (400 மில்லியன் பீப்பாய்கள்) சந்தையில் விற்க திட்டம் என தகவல். இச்செய்தி வெளியான 2 மணி நேரத்தில் எண்ணெய் விலை $15 சரிந்து $105க்கு கீழ் வர்த்தகம்

⛑️⛑️இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.

மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்

⛑️⛑️'தாய்க்கிழவி' திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியது

⛑️⛑️தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தே.மு.தி.க. சார்பில் சுதீஷும், பா.ம.க. சார்பில் அன்புமணியும் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

⛑️⛑️தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தவெகவுடன் பேச்சு நடத்தவில்லை; விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி; தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்

அதிமுக - பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க உள்ளதாக வெளியான செய்திக்கு நயினார் நாகேந்திரன் பதில்

⛑️⛑️தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவ செலவை பற்றி கவலைப்பட வேண்டாம், தான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் உறுதி ⛑️⛑️நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தாக்கல் செய்த பொதுநல மனு

மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

⛑️⛑️ஈரான் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

"தனது தந்தையின் பணிகளை மொஜ்தபா கண்ணியத்துடன் தொடர்வார். கடும் சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை அவர் ஒன்றிணைப்பார்; ஈரானுடன் ரஷ்யா உறுதியாக நிற்கும்"

-ரஷ்ய அதிபர் புதின்

⛑️⛑️ “சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர்

ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்

எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்”

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️திருவனந்தபுரம் வந்த ‘டி20 உலக கோப்பை சாம்பியன் மற்றும் தொடர் நாயகன்’ சஞ்சு சாம்சன் - மாநில அரசின் சார்பில் வரவேற்ற அமைச்சர் சிவன் குட்டி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Tuesday, March 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2026



திருக்குறள்: 

குறள் 613: 

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.              
விளக்க உரை: 

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

பழமொழி :

The childhood shows the man.    

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 

01.உலகின் மிக வேகமான பறவை 

எது?

பெரெக்ரின் ஃபால்கன் -

 Peregrine Falcon

02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

       பாதரசம் - Mercury 

English words :

Grave-serious

Put up with -tolerate

தமிழ் இலக்கணம்: 

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2
1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன)
      மல்லிகை   மணம் கமழ்கிறது –சரி 
2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா)
      மாறன் கண் விழித்தான் 

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான்  காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

நீதிக்கதை

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.


சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.

அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.

இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.


சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம். 


இன்றைய செய்திகள்

10.03.2026

⭐தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

⭐உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⭐அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.

Today's Headlines

⭐ In Tamilnadua digital population census will be conducted from July 17 to August 30

⭐ A 3,000-year-old wonder was discovered in Udumalai. A massive stone structure has been identified at Kallapuram

⭐ To prevent  cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

⭐ Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

 *SPORTS NEWS* 

🏀The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.

Covai women ICT_போதிமரம்

Monday, March 9, 2026

Monday, March 09, 2026

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.
Monday, March 09, 2026

2026-2027ஆம் கல்வி ஆண்டில் - 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்


2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

* 31-07-2021 வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-08-2021 முதல் 31-08-2021 வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-09-2021 முதல் 31-12-2021 வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து விட்டு வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.
Monday, March 09, 2026

ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாதத்திற்கான ஊதியம் நிறுத்தப்பட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஆண்டு டிச., 26 முதல், சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்தனர்.அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி, 5ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தொடக்கக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.அதில், 'பணிக்கு வருகை தராமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊதியமில்லாத விடுப்பு பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.இந்த சூழலில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள், ஜன., 31ல் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.எனினும், போராட்டத்தில் பங்கேற்ற, 10,000க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தியுள்ளது.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய, ஆசிரியர்களின் ஊதியத்தை, அரசே நிறுத்தி வைத்துள்ளது. இது, ஆசிரியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, March 09, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here
Monday, March 09, 2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்

பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
Monday, March 09, 2026

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கோ.கற்பகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி 08.03.2026 முதல் மருத்துவ விடுப்பு - நிருவாக காரணங்களின் பொருட்டு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
Monday, March 09, 2026

தேர்வு பணியில் உறுதிமொழி சான்று: ஆசிரியர்கள் எதிர்ப்பு

பொதுத்தேர்வு பணியில் ஈடு படுவோரிடம், உறுதிமொழி சான்றில் கையெழுத்து பெறுவதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும் 11ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் அலைபேசிகளை, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டு, உறுதிமொழி சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. அந்த உறுதிமொழி படிவத்தில், 'தேர்வு பணியின் போது, தேர்வு மையத்துக்கு வருகை புரிந்ததில் இருந்து, பணி முடிந்து செல்லும் வரை, என் அலைபேசியில் இருந்து, தேர்வு வினாத்தாள் தொடர்பாக எந்த செய்தியையும் பகிரவில்லை என உண்மையாக உறுதியளிக்கிறேன்; எந்தவித களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடவில்லை' என கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி படிவத்துக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் அன்பழகன் கூறுகையில், ''தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் உறுதிமொழி சான்று கேட்பது ஏற்புடையதல்ல. இது, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. உறுதிமொழி பெறும் நடைமுறையை, பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவித்தார்.
Monday, March 09, 2026

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...


நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

GBM 2.0 - Download here

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.
Monday, March 09, 2026

NEET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

NEET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 11.03.2026 புதன்கிழமை இரவு 8.59 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணியிலிருந்து NEET இணையதள சேவை செயல்படவில்லை. இன்று இரவு சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
Monday, March 09, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026

யூரி ககாரின்

திருக்குறள்: 

அதிகாரம் 62 / CHAPTER 62 

 ஆள்வினை உடைமை 

குறள் 611: 

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

 விளக்க உரை: 

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பழமொழி :

A good marksman may miss. 

ஆனைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது

-----------------பிளாட்டோ

Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO

பொது அறிவு : 

01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

             வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

           சூடான் -Sudan

English words :

Take off -remove or leave

Take on- accept responsibility

தமிழ் இலக்கணம்: 

 தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்
1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)
      கடிகாரம் வேகமாக இயங்கியது
2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)
மின்விசிறி வேகமாக சுழல்கிறது
    தொடரும்...

அறிவியல் களஞ்சியம் :

நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன. 

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்

மார்ச் 09

யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்




சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

இன்றைய செய்திகள்

09.03.2026

⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்

⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 ஐசிசி T20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறையாக இந்திய  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

🏀 Sports News


🏀  ICC T20 World cup: India recorded a tremendous  victory against  Newzealand by 96 runs and became the Champion for the 3rd time.

🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.

Covai women ICT_போதிமரம்

Saturday, March 7, 2026

Saturday, March 07, 2026

நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.3.2026

நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை


ஈ.கே.எம்.அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி,ஈரோடு Ε.Κ.Μ.ABDUL GANI MATHARASA ISLAMIA HIGH SCHOOL, Erode

26 காவேரி ரோடு ,ஈரோடு . 638 001. Phone: 0424-2210349,

99524 84402


1.BT.ASST (TAMIL)

B.A., B.Ed., (TAMIL) TET PAPER-II PASSED

Male - 1


2. BT.ASST (MATHS)

B.Sc., B.Ed., (MATHS) TET PAPER-IT PASSED

Female -1


3. BT.ASST (SCIENCE)

B.Sc., B.Ed., (SCIENCE) TET PAPER-II PASSED

Male -1


4. DRAWING TEACHER

TTC PASSED

Female-1


Salary as Per Government Norms.

Interested Candidates can Submit your resume on or before 23.03.2026

Contact us: ekmmatharasaerode@gmail.com

Ph: 0424-2210349

Address: 26, Cauvery Road, Erode - 638001.
Saturday, March 07, 2026

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் பள்ளி வகை வாரியாக எவ்வளவு?

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் பள்ளி வகை வாரியாக எவ்வளவு?
Saturday, March 07, 2026

8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

8th Pay Commission Salary Hike: பல மாதங்களாக 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதிய விகிதங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய நேரம்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அறிவித்தது. எனினும் அதன் பிறகு பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நவம்பர் மாதத்தில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு சுமார் 18 மாதங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். 8வது ஊதியக் குழு 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ செயல்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Fitment Factor: அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

ஊழியர்களிடையே 8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த விவாதம் உச்சத்தில் உள்ளது. இப்போது, ​​தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FNPO) 8வது ஊதியக் குழு தொடர்பாக அரசாங்கத்திடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. சமீபத்தில், FNPO தேசிய கவுன்சிலுக்கு தங்கள் கோரிக்கைகளை தெளிவாகக் கூறி அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதத்தில், A, B, C மற்றும் D பிரிவுகளில் உள்ள அஞ்சல் ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை 3 முதல் 3.5 வரை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Salary Hike: சம்பள உயர்வை தீர்மானிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 -க்கு மேல் இருப்பது நாட்டின் பொருளாதார யதார்த்தத்துடன் ஒத்துப்போகாது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த பதிவில் 2 மற்றும் 3 ஆகிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் பியூன் முதல் IAS அதிகாரி வரை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒருவரின் அடிப்படை சம்பளத்தை மாற்றக்கூடிய ஒரு பெருக்கி ஆகும். அப்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுவதால், சம்பளம் எந்த விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான அங்கமாக அது உள்ளது. உதாரணமாக, 7வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் ​​6வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை சம்பளம் ₹7,440 ஆக இருந்த ஊழியரின் சம்பளம் ₹18,000 ஆக அதிகரித்தது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 13600018,000.00
லெவல் 23980019,900.00
லெவல் 34340021,700.00
லெவல் 45100025,500.00
லெவல் 55840029,200.00
லெவல் 67080035,400.00
லெவல் 78980044,900.00
லெவல் 89520047,600.00
லெவல் 910620053,100.00
லெவல் 1011220056,100.00
லெவல் 1113540067,700.00
லெவல் 1215760078,800.00
லெவல் 13237000118,500.00
லெவல் 13262200131,100.00
லெவல் 14288400144,200.00
லெவல் 15364400182,200.00
லெவல் 16410800205,400.00
லெவல் 17450000225,000.00
லெவல் 18500000250,000.00

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 15400036,000.00
லெவல் 25970039,800.00
லெவல் 346510043,400.00
லெவல் 47650051,000.00
லெவல் 58760058,400.00
லெவல் 610620070,800.00
லெவல் 713470089,800.00
லெவல் 814280095,200.00
லெவல் 9159300106,200.00
லெவல் 10168300112,200.00
லெவல் 11203100135,400.00
லெவல் 12236400157,600.00
லெவல் 13355500237,000.00
லெவல் 13393300262,200.00
லெவல் 14432600288,400.00
லெவல் 15546600364,400.00
லெவல் 16616200410,800.00
லெவல் 17675000450,000.00
லெவல் 18750000500,000.00
தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு தங்கள் கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டும் 60 பக்க கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இந்தக் கடிதத்தில், அவர்கள் அதிக சம்பள உயர்வை கோரியுள்ளனர்.

தேசிய அஞ்சல் அமைப்புகளின் பிற கோரிக்கைகள்:

- பே மேட்ரிக்ஸ் முறையில் மாற்றங்கள்,
- வருடாந்திர சம்பள உயர்வுகள்,
- அதிக கொடுப்பனவுகள்
- விரைவான பதவி உயர்வுகள்

NCJMC (தேசிய கவுன்சில் கூட்டு கண்காணிப்புக் குழு) பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தும் என்று FNPO உறுப்பினர் சிவாஜி வாசிரெட்டி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது, ​​ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு வரைவு தயாரிக்கப்படும். பின்னர் இந்த வரைவு 8வது ஊதியக் குழுவின் தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு அனுப்பப்படும்.