Breaking

Monday, February 23, 2026

Monday, February 23, 2026

ஆன்லைன் வழியில் விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்தாண்டு முதல், 'ஆன்லைன்' வழியாக மதிப்பீடு செய்ய உள்ள நிலையில், அதற்கேற்ப போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், 31,000 பள்ளிகளைச் சேர்ந்த, 18.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள், 120 பாடங்களுக்கு தேர்வுகள் எழுதுகின்றனர்.

அவர்களின் விடைத்தாள்கள் குறைந்தபட்சம், 6,000 பள்ளிகளில் உள்ள மையங்களில், 'ஆன்லைன்' வாயிலாக திருத்தப்பட உள்ளன. இதுவரை, மாணவர்களின் விடைத்தாள்களை நேரடியாக கையில் எடுத்து படித்து, அதிலேயே மதிப்பெண்களை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. தற்போது, விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆசிரியர்களின் கணினிக்கு அனுப்பப்படும். கணினி திரையில் அதை படித்துப் பார்த்து, வழங்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த முறை எளிதாகவும், விரைவாகவும் முடியும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அதேசமயம், தேர்வு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இந்த முறை பற்றி சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வாரியம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் வழியாக திருத்துவது குறித்து பயிற்சி வழங்கியது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தேர்வுப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களுக்கு, அந்த பயிற்சியில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலத்துக்கு ஏற்ப, இடைநிலை கல்வி வாரியம், 'டிஜிட்டல்' முறைக்கு மாறுவதில் தவறில்லை. அதேசமயம், அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், இணையதள இணைப்புடன் கூடிய, நல்ல கணினிகள் இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்களுக்கு, விடைத்தாள்களில் எழுதப்பட்டு இருப்பதை படித்துப் பார்த்து, மதிப்பெண் வழங்கும் முறை தான் பழக்கமாகி இருக்கிறது. திடீரென கணினி வழியில் படிப்பதும், அவற்றை பெரிதாக்குவதோ, சிறிதாக்குவதோ இயலாத காரியம். விடைத்தாள்களை ஸ்கேன் செய்வோர், ஏதாவது ஒரு பக்கத்தை விடுவதற்கும், பென்சிலால் வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக ஸ்கேன் செய்யாமல் விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சி.பி.எஸ்.இ., வாரியம் தீர்வு காண வேண்டும். அப்போது தான் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, February 23, 2026

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்கள் 5,67,07,380.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம்.

அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம்.

மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Monday, February 23, 2026

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு.
Monday, February 23, 2026

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி..

பள்ளிக்கல்வி - சமூக நலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 ( தடுப்பு, தடை (ம) தீர்வு ) - இன் படி துறைத்தலைவர்கள் மற்றும் கிளை அலுவலக தலைமை அதிகாரிகள் இணையதளத்தில் அறிக்கை சமர்பித்தல் மற்றும் உள்ளக குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்பாடு, அதன் சட்டம் குறித்து பயிற்சி வழங்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுதல் - தொடர்பாக,...
Monday, February 23, 2026

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!



Monday, February 23, 2026

+2 ஹால் டிக்கெட் இன்று (23.02.2026) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்ய Direct Link...


நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் (Hall Tickets). மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 23.02.2026 அன்று பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்er User ID, Password-ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.

CLICK HERE DOWNLOAD
Monday, February 23, 2026

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: பறக்கும் படை பணிகளில் பி.டி. ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்களைப் பறக்கும் படையில் நியமிக்க வேண்டும். தகுதி இல்லை என கருதினால் எந்தப் பணியும் வேண்டாம் என உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் சங்கர பெருமாள் தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களைப் பறக்கும் படை (Flying Squad) உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கர பெருமாள், அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது;

மார்ச் மாதம் தொடங்க உள்ள மேல்நிலைபள்ளி பொதுத்தேர்வு பணிகளில், அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணிகளில் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அவர்களைப் பறக்கும் படை பணிகளில் நியமிக்கத் தேர்வுத் துறை முன்வருவதில்லை.

பொதுத்தேர்வுப் பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்குத் தகுதி இல்லை என்று தேர்வுத் துறை கருதினால், அவர்களை அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்தவொரு தேர்வுப் பணிகளிலும் நியமிக்க வேண்டாம் எனச் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதால், அவர்களை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை மற்றும் அறை கண்காணிப்பாளர் ஆகிய இரு பணிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைத் தேர்வுத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் சங்கர பெருமாள் தனது செய்திக் குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
Monday, February 23, 2026

+2 மாணவர்களுக்கு லாக் புக் மாற்றம்; பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க கடும் கட்டுப்பாடு - அன்பில் மகேஷ் அறிவிப்பு

பொதுத்தேர்வுகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பெரிய எழுத்துக்களுடன் கூடிய புதிய ஏ4 லாக் புத்தகங்கள், கணக்குப்பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் அனுமதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக தேர்வு உதவியாளர் விதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக பிளஸ் 2 தேர்வின் போது வழங்கப்படும் லாக் புத்தகங்களில் எண்கள் மிகச்சிறியதாக இருப்பதால், மாணவர்கள் மதிப்புகளைக் கண்டறிவதில் சிரமப்பட்டு வந்தனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த ஆண்டு முதல் பெரிய எழுத்துக்கள் கொண்ட A4 அளவிலான லாக் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த ஆண்டு முதல் தங்களது சொந்த சாதாரண கால்குலேட்டர்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் சுமார் 8.2 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11 அன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். இதற்காக 4,219 மையங்கள் தயார் நிலையில் உள்ளன, இதில் சுமார் 9.09 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவை தவிர, 25,051 மாணவர்கள் மார்ச் 3 முதல் 27 வரை பிளஸ் 1 அரியர் தேர்வுகளை எழுத உள்ளனர். சிறைக்கைதிகளும் கல்வி பயிலும் நோக்கில், இந்த ஆண்டு 281 பேர் பிளஸ் 2 தேர்வையும், 395 பேர் பத்தாம் வகுப்பு தேர்வையும் எழுத முன்வந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறித்த புகார்களைத் தீர்க்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் உதவியாளர்களாக இருக்க முடியாது. அதற்கு பதிலாக, இரண்டாம் ஆண்டு கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பி.எட் மாணவர்கள் அல்லது 'இல்லம் தேடி கல்வி' திட்டப் பணியாளர்கள் மட்டுமே உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். மேலும், ரகசியத்தன்மையைப் பேண இம்மாணவர்களுக்கு ஐந்து தாள்கள் கொண்ட தனித்துவமான வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும்.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்வுப் பணியில் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 4,900 பறக்கும் படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாட்களில் வருகை தராத மாணவர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Monday, February 23, 2026

ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு.

ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு.

ஆசிரியர்​கள், பணி​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு 2 முறை மனநல நிபுணர்​களைக் கொண்டு கட்​டா​யம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்​ளி​களுக்கு சிபிஎஸ்இ உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து அனைத்துப்பள்​ளி​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பின் அடிப்​படை​யில் அனைத்து பள்​ளி​களுக்​கும் மனநலம் மற்​றும் நல்​வாழ்வு மற்​றும் சமூக உணர்ச்சி கற்​றல் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அதன்படி பள்​ளி​ ஆசிரியர்கள், பணி​யாளர்​களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களை கொண்டு கட்​டாயப் பயிற்சிஅளிக்க வேண்​டும்.

இதில் மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்​டறிதல், முதலுதவி மனநல சிகிச்​சை, சுயபரிசோதனை மற்​றும் சரியான மருத்துவ ஆலோ​சனைக்கு வழிநடத்துதல், மாணவர்களிடம் எவ்வித பாகு​பாடின்றி கனி​வாக நடந்து கொள்​ளுதல் குறித்த பயிற்சி அதில் இடம்​பெற வேண்​டும்.

இதுத​விர ஆலோ​சனை குறித்த ஆண்​டறிக்​கையை பள்ளி நிர்​வாகம் தயார் செய்ய வேண்​டும். இதன் ரகசி​யம் பாது​காக்​கப்பட வேண்​டும். தனித்​தன்​மையை வெளிப்​படுத்​தும் வகை​யில் தேர்வு முறை​கள் அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யவேண்​டும்.
Monday, February 23, 2026

TET - பணி சான்றிதழ் வழங்க இத்தனை ஆவணங்களா! குழப்பும் அதிகாரிகள்; அதிருப்தியில் ஆசிரியர்கள்

பணி சான்றிதழ் வழங்க, ஏற்கனவே பணிப்பதிவேட்டில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் நகல்களை, மீண்டும் இணைத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை கையாளும் அனைவரும், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பணி புரிவோருக்கு சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க, ஏப்., 10 கடைசிநாளாகும். இதற்கான விண்ணப்பித்தில், பணிசான்றிதழ் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிவம், டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ளது. இதை பூர்த்தி செய்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் கையொப்பத்துடன், சான்றிதழைபதிவேற்ற வேண்டும். இச்சான்றிதழில் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, தற்போது பணி புரியும் பதவி, பள்ளி சார்ந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகவல் ஏற்கனவே, ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ளது. இப்பதிவேடு, வட்டார கல்வி அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் வசம் பராமரிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கான 'எமிஸ்' இணையதளத்திலும் உள்ளது. இதே ஆவணங்களை நகலெடுத்து, பணிசான்றிதழ் கடிதத்துடன் இணைத்து அனுப்புமாறு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை நிர்வாகி சந்திரசேகர் கூறுகையில்,''பணிப்பதிவேடு மற்றும் 'எமிஸ்' போர்டலில், ஆசிரியர்களின் அனைத்து விபரங்களுக்கான அசல் சான்றிதழ்கள் உள்ளன.

இதை பார்வையிட்டு, பணிசான்றிதழ் வழங்கலாம். ஒவ்வொரு ஆசிரியரும், 30-50 பக்கம் நகல் எடுத்து சமர்பிக்க வேண்டியுள்ளது. ஒரு சான்றிதழ் வழங்க, பல ஆவணங்களின் நகல்களைகேட்பது, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தும்,'' என்றார்.
Monday, February 23, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.20226


சீகன் பால்க்

திருக்குறள்: 

குறள் 213: 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.       

விளக்க உரை: 

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :

Effort never fail. 

முயற்சி திருவினையாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் இருந்து அண்டார்டிகா சென்ற முதல் பெண் விஞ்ஞானிகள் யார்?

சுதிப்தா சென்குப்தா மற்றும் அதிதி பந்த் 

 Sudipta Sengupta and Aditi Pant

02.சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் யார்?

சர்தார் பல்தேவ் சிங் 

Sardar Baldev Singh

English words :

Bravely -courageously

Circumnavigate-Sail around

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் பிரித்து பார்க்க வேண்டும் 
தேனீர் = தேன்+நீர் என்று வரும். இதன் பொருள் தேன் கலந்த நீர் என்பதாகும்
தேநீர் = தே+ நீர் என்று வரும். 
தே என்ற சொல்லுக்கு இனிமை, இறைவன், தேயிலை என்று மூன்று பொருள் வரும். 
இங்கு தேயிலை கலந்த நீர் தேநீர் என்று வரும். எனவே *தேநீர்* தான் சரி

அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் கணக்கிட்டபடி, ஒரு நூற்றாண்டுக்கு சராசரியாக 2 மில்லி வினாடிகள் (ஆயிரத்தில் ஒரு வினாடியில் இரண்டு பங்கு) அளவு பூமியின் சுழற்சி மெதுவாகி/குறைந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், அவைகளின் நடமாட்டம் இருந்த காலத்தில், ஒரு நாள் என்பது சுமார் 23 மணி நேரம் ஆகும்.

பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழில் அச்சு எழுத்துகளையும் உருவாக்கினார். 

நீதிக்கதை

 அன்பை அடைக்க கதவு உண்டோ?


ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 


அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.


இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். 


அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன். 


மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள்

23.02.2026

⭐வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

⭐டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இருப்பினும் உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்துள்ளார்.

⭐எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Today's Headlines

⭐ The foundation stone for the statue of V. O. Chidambaranar was laid by Vice President C. P. Radhakrishnan.

⭐ The U.S. Supreme Court has canceled the reciprocal tax imposed by Donald Trump. However, Trump has newly imposed a 15% tax on countries around the world.

⭐ The navies of El Salvador and Mexico have seized approximately 10 tons of illegal drugs.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC Men's T20 World Cup, England achieved a magnificent victory by defeating Sri Lanka.

Covai women ICT_போதிமரம்


Sunday, February 22, 2026

Sunday, February 22, 2026

TNTET 2026 TET WORKING TEACHERS பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

*படிவத்தை நிரப்பும் முறை (How to Fill)*

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

🟣1.Name of the Teacher

 உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.

🟣2.Date of Birth and Age

 உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.

🟣3.Names of the Post held now

தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).

🟣4.Date of Joining in the present post

 தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.

🟣5.Date of Initial Appointment 

முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.

🟣6.Name of the Post during Initial Appointment

 முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.

🟣7.Date of Regularization

 பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.

🟣8.Working Department

 நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).

Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.

🟣9.Full Time / Consolidated / Part Time

🔴10.காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.

🔴11.Name of the School with Address

 பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.

🔴12.Working District பணிபுரியும் மாவட்டம்.

🔴13.School UDISE CODE

 பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.

🔴14.Qualification

 உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).

🟣15.Teacher EMIS ID NO

 உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.

🟣16.IFHRMS Employee ID

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).

🟣கையொப்பம்🟣

 இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.

 வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும்.

✍️ இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்..

🙏🙏🙏

Sunday, February 22, 2026

புதிதாக பணி ஏற்பு செய்துள்ள ஆசிரியர்கள் மற்றும் 1/6/2026 சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கான உண்மைத் தன்மை பெறுதல் மாதிரி கடிதம் - மொத்த தொகுப்பு

நண்பர்களே வணக்கம் 🙏

16/2/26 புதிதாக பணி ஏற்பு செய்துள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும்..

1/6/2026 சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு

( இது வரை Genuineness வாங்காமல் இருந்தால்)


உண்மைத் தன்மை

பெறுதல் சார்ந்த எனது மொத்த தொகுப்பு ...

மாதிரி கடிதம்

பல்கலைக்கழக படிவங்கள் உடன்...👍

தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
22/2/26🙏


Open in APP:

Saturday, February 21, 2026

Saturday, February 21, 2026

1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அரசாணை வெளியீடு

Saturday, February 21, 2026

TET2026 : Service Certificate அலைக்கழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விருதுநகர்

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TET2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான Service Certificate வழங்க பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,

விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரது (தொ.க) அறிவுறுத்துதல்படி Service Certificate பெற எந்தவித ஆவணங்களும் இணைக்கப்படத் தேவையில்லையென திருச்சுழி வட்டாரக் கல்வி அலுவலர் Voice Note அனுப்பியுள்ளார். அதில்,

1. *Covering Letter - 2 copies*

2. *Service Certificate - 3 copies*

மட்டும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் தலைமையாசிரியர் வழி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், மொத்தமாகத் தொகுத்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி Service Certificate பெற்றுத்தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, February 21, 2026

தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களின் கல்​வித் தரத்தை உயர்த்​தும் பொருட்டு பள்​ளிக்​கல்​வித் துறை மூலம் பல்​வேறு சிறப்​புத் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களிடம் பிரச்​சினை​களைத் தீர்க்​கும் திறனை வளர்க்​க​வும், குழு​வாக இணைந்து செயல்​படக்​கூடிய திறனை கற்​றுக் கொள்​ள​வும், படைப்​பாற்​றலை வளர்க்​க​வும் முதல்​கட்​ட​மாக ரூ.6.09 கோடி மதிப்​பீட்​டில் 15 இயந்​திர​வியல் ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்டு உள்​ளன.

கற்​றல், கற்​பித்​தல் மற்​றும் திட்​ட​மிடல் போன்ற செயல்​முறை​களை மேம்​படுத்​து​வதற்கு தகவல் தொழில்​நுட்​பம் ஒரு முக்​கிய ஊக்​கி​யாக உள்​ளதைக் கருத்​தில் கொண்​டு, அரசு நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.519.73 கோடி மதிப்​பீட்​டில் 8,209 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களும், அரசு தொடக்க, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.455.32 கோடி மதிப்​பீட்​டில் 22,931 திறன்​மிகு வகுப்​பறை​களும் நிறு​வப்​பட்டு மாணவர்​களின் பயன்​பாட்​டில் உள்​ளன.

இந்​நிலை​யில், அரசுப் பள்​ளி​களைப் போல, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்​கும் வழங்​கும் நோக்​கில், முதற்​கட்​ட​மாக தமிழகம் முழு​வதும் 654 அரசு உதவி​பெறும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.41.85 கோடி மதிப்​பீட்​டில் 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

அடை​யாறு குமார ராஜா முத்​தையா மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் திறந்​து​வைத்​தார்.

தொடர்ந்து அப்​பள்​ளி​யில் நிறு​வப்​பட்​டுள்ள உயர் தொழில்​நுட்ப ஆய்​வகத்தை பார்​வை​யிட்​டார். இந்த உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் காணொலி, ஒலி மற்​றும் டிஜிட்​டல் கருவி​கள் மூலம் கற்​பித்​தல் மற்​றும் கற்​றலை எளிமை​யாக்​கிப் பாடப் புத்தக உள்​ளடக்​கத்தை விரை​வாக​வும், ஆர்​வ​மாக​வும் கற்​றுக்​கொள்ள உதவும்.

மேலும் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திர​வியல் மற்​றும் குறி​யிடல் (Coding) தொடர்​பான டிஎன் ஸ்பார்க் (TN SPARK) போன்ற திட்​டங்​களை செயல்​படுத்​த​வும் துணைபுரி​யும்.

தொடக்க விழா​வில், எஸ்​எஸ்ஏ மாநில திட்ட இயக்​குநர் எம்​.ஆர்த்​தி, கூடு​தல் இயக்​குநர் எஸ்​.உ​மா, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், பெற்​றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலை​வர் பி.​வி.பி.​முத்​துக்​கு​மார், மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​ கபீர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.
Saturday, February 21, 2026

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

முறைப்படியான Income Tax கணக்கீட்டிற்கும் IFHRMS Tax பிடித்தத்திற்கும் வேறுபாடுகள் இருப்பின் பிப்ரவரி 2026 மாத ஊதியத்தில் சரிசெய்து கொள்ள இரு புதிய Elements IFHRMSல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Income Tax & Cess உள்ளிட்டவற்றில் சரியான கணக்கீட்டிற்கும் IFHRMS கணக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,

Different Amount = Actual - IFHRMS Deduction

என்ற கணக்கீட்டின் வழி வித்தியாசத் தொகையை இந்த Elementsல் அளித்து வருமானவரியைச் சரி செய்து கொள்ளலாம். அதாவது,

= Actual Amount - IFHRMS Deduction

= 10,000 - 10,500

எனில்,

Different Amount = -500

= Actual Amount - IFHRMS Deduction

= 10,500 - 10,000

எனில்,

Different Amount = 500

Taxல் வேறுபாடு இருப்பின், Add element entryல் Effective Date Februaryயாக வைத்து GTN Income Tax_A என்ற Elementஐ Add செய்து Different Amountஐ உள்ளிடவும்.

இதே போன்று Cess வித்தியாசத் தொகையை GTN Income Tax Cess_A* என்பதில் அதற்கான Different Amountஐ உள்ளிடவும்.

Approval பணிகள் முடிந்த பின்னர், February regular runஐ mark for retry செய்தால் சரியான Result கிடைக்கும்.

*'IFHRMSல பிடிச்சது பிடிச்சதுதானாம்; வரிய திருத்த முடியாது; கூடுதலா பிடிச்சத ITR செய்து வாங்கிக்கச் சொல்லிட்டாங்க' என்போர் மறக்காமல் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலரை மீண்டும் தொடர்பு கொண்டு சரியான வரிப்பிடித்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.