Breaking

Friday, February 27, 2026

Friday, February 27, 2026

சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு



சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்வு; பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.

குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.
Friday, February 27, 2026

TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

ஆசிரியர் தேர்வு அறிவிக்கை : டிசம்பர் 03, 2025 நாள்: 11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-1 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.

அரசாணை (நிலை) எண். 23, பள்ளிக்கல்வித்துறை, நாள். 28.01.2026ன்படி. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கீழ்கண்டவாறு அரசால் மாற்றி அமைக்கப்பட்டது.
Friday, February 27, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M & E/M

Term III Lesson Plan

March - 2026

SET : 9

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here
Friday, February 27, 2026

யார் TET தேர்வு எழுத தேவையில்லை?

ஐந்தாண்டு பணிக்காலம் என்பது யாது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான 01.09.2025

நாளிலிருந்து 5 ஆண்டு பணிக்காலம்.

அதாவது 1 9 2025 முதல் 31 8 2030 வரை

இக்காலகட்டத்தில் ஓய்வு பெறுவோர் தகுதி தேர்வு எழுதாமல் அவரவர் வகிக்கும் பணியில் தொடரலாம்

பிறர் 1. 9. 1970க்கு பின் பிறந்தவர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டும்.

எனினும் பதவி உயர்வு பெற அனைவரும் தேர்வில் எழுத வேண்டும்
Friday, February 27, 2026

பணி வாய்ப்புக்கு என நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தற்பொழுது நடைபெறும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டுமா?

2010 முதல் 2025 வரை தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பணிவாய்ப்புக்காக நடத்தப்பட்டது

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே 2012 முதல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்

தாள் ஒன்று தேர்ச்சி எனில் இடைநிலை ஆசிரியராகவும் தாள் இரண்டு தேர்ச்சி எனில் பட்டதாரி ஆசிரியராகவும் பணி நியமனம் வழங்கப்படுகிறது

தாள் ஒன்று தேர்ச்சி யின் மூலம் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற பலர் தாள் இரண்டில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர்

அதே போன்று

தற்பொழுது பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர்

அவ்வாறு ஏற்கனவே 2025 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தற்பொழுது நடைபெறும் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை

ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற, தற்பொழுது பணியில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வுக்கும் தகுதி பெற்றவராகவே கருத்தில் கொள்ளப்படுவார்கள்

எனினும் தாள் ஒன்றை மட்டும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தாள் இரண்டை எழுதினால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராகவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற தகுதி உடையவர் ஆவார்கள்

தாள் இரண்டை எழுதி தேர்வு பெற்றவர்கள் பணியில் தொடரவும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் தகுதி உடையவர் ஆவார்கள்

மொத்தத்தில் இதுவரை தகுதி தேர்வில் தாள் ஒன்று அல்லது தாள் இரண்டு அல்லது இரண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இனி எழுதத் தேவையில்லை.
Friday, February 27, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2026

திருக்குறள்: 

குறள் 568: 

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் 
சீறிற் சிறுகுந் திரு.          

விளக்க உரை: 

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

பழமொழி :

Grasp all lose all. 

பேராசை பெருநஷ்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நீ வெற்றிக்காக போராடும் பொழுது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்று சொல்வார்கள் - கண்ணதாசன்

பொது அறிவு : 

01.இந்தியாவின் முதன்மையான வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

டேராடூன் -  உத்தராகண்ட்

  Dehradun, Uttarakhand

02.இந்தியாவில் எந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் அதிகம் உள்ளன?

நந்தன்கானன் உயிரியல் பூங்கா -ஓடிசா 

Nandankanan Zoological Park - Odisha

English words :

Preening-cleaning

Bifurcated-splitted

தமிழ் இலக்கணம்: 

 இறந்த காலம் –எதிர்காலம்

 *நேற்று* என்னிடம் *பேசும் போது* அம்மா கூறினார்.
நேற்று என்பது இறந்த காலம்

பேசும் போது என்பது எதிர் காலம்

இறந்த காலத்தில் பேசும் போது எதிர்காலம் உபயோகப் படுத்த கூடாது. சரியான சொற்றொடர் என்னவென்றால்

நேற்று என்னிடம் பேசுகிற போது அம்மா கூறினார்.

எங்கள் கிராமத்தை சுற்றி *வரும்போது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்* 

வரும்போது எதிர்காலம் 

பார்த்தேன் இறந்த காலம் 

சரியான சொற்றொடர்

எங்கள் கிராமத்தை சுற்றி *வந்தபோது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்*

அறிவியல் களஞ்சியம் :

பல நூற்றாண்டுகளாக பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதற்கு சந்திரனின் ஈர்ப்பு விசை முக்கிய காரணம் ஆனது.  இந்த நிகழ்வு ""ஓதத் தடை"" (Tidal Braking) என்பதனால் ஏற்படுகிறது. சந்திரனின் ஈர்ப்பு என்பது பூமியின் நீர்ப்பரப்புகளை (மற்றும் ஓரளவு திடப்பரப்புகளையும்) இழுத்து, பூமி சந்திரனை நோக்கி சிறிது புடைப்பு ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு, ஆற்றல் பரிமாற்றம் காரணமாக  பூமியின் சுழற்சி உந்தம் குறைக்கப்படுகிறது. இதில் சந்திரன் ஒரு கைத் தடை (Handbrake) போலவே செயல்படுகிறது.

பிப்ரவரி 27

  • பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்

நீதிக்கதை

 காவல்காரன்


மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.


அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.


தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.

இன்றைய செய்திகள்

27.02.2026


⭐நாடு முழுவதும் சுமார் 150 ஷோரூம்களை மூட முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.‌ 700 ஷோரூம்கள் இருந்த நிலையில் 550 ஆக குறைத்து செயல்பாட்டு திறனை மேம்படுத்த இம்முடிவு என தெரிவிப்பு.

⭐ இந்தியாவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80,000 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர்.

⭐ தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும்  நன்னடத்தை கொண்ட கைதிகள் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை  குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் தமிழக அரசு சிறை விடுப்பு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்  மோதுகிறது.

Today's Headlines

⭐Ola Electric has decided to close around 150 showrooms across the country. The company stated that this decision was taken to improve operational efficiency by reducing the total number of showrooms from 700 to 550.

⭐ In India, around 2,80,000 women die every year due to cervical cancer.

⭐ The Tamil Nadu government has amended prison leave rules, allowing well-behaved inmates who have been serving long-term sentences in Tamil Nadu prisons to stay with their families for up to 120 days a year.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC T20 World Cup, the defending champions India are set to face Zimbabwe in their second match.

Covai women ICT_போதிமரம்

Thursday, February 26, 2026

Thursday, February 26, 2026

பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து கருத்துக்களைப் (Queries) பெற்று அனுப்ப உத்தரவு - DGE Proceedings

பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
Thursday, February 26, 2026

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலெக்டரிடம் புகார்

பள்ளி வளாகத்தில், மாணவனின் புத்தக பையிலிருந்து எடுக்கப்பட்ட கஞ்சாவை எரியூட்டி, உரிய விசாரணை நடைபெற விடாமல் தடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 மாணவனின் புத்தக பையிலிருந்து, டிச., 19ம் தேதி, கஞ்சா மற்றும் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை தலைமை ஆசிரியர் பறிமுதல் செய்தார்.

அம்மாணவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய தலைமை ஆசிரியர், உரிய விசாரணை நடத்தாமல், கஞ்சாவை எரியூட்டியதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, அம்மாணவனிடம் எழுதி வாங்கிய மன்னிப்பு கடித நகலை இணைத்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனுவாக அளித்தார்.

மாணவனிடம் கஞ்சா இருந்தது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளித்துவிட்டு, கஞ்சாவை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பறிமுதல் செய்த கஞ்சாவை, பள்ளி வளாகத்துக்குள்ளேயே தலைமை ஆசிரியர் எரியூட்டியுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாளிடம் கேட்டபோது, ''மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாணவருக்கு எவ்வித போதை பழக்கமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ''அவரது சகோதரருக்கு, இப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. அவர் புத்தக பையில் மறைத்து வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
Thursday, February 26, 2026

EMIS - Uniform Measurement Updating - Step by Step Process

Uniform Measurement - Noon Meal - Yes / No Status

Uniform Measurement - Noon Meal - Yes/No Status Marking - User Manual

School Login :



Step 1:

Log In To The School Portal And Select "Class And Section Grouping Module


Step 2:

Check Which Class And Section The Particular Class Teacher

Is Tagged To. If The Teacher Is Not Tagged, Ensure They Are

Assigned To The Appropriate Class And Section.


Step 3:

Log In To The Tnsed Schools App Using The Respective Class

Teacher’s Login Credentials.


Step 4:

Click On The Schemes Icon In The Tn Schools App.


Step 5:

Click On The Respective Class And Then Select The Section.


Step 6:

Please Verify The Specific Students And Change Their Status

To Yes. Once Updated, Only Those Students Will Be Displayed


In The Ico Login Under The Uniform Measurement Module.

After Making The Changes, Click The Save Button To Apply Them.

Step 7:

After The Changes Are Made In The School Login, The Updated

Student List Will Be Reflected In The Ico Login In Tnemis:

Thursday, February 26, 2026

TET - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா?

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா? எழுத வேண்டும் எனில் எந்த தாள் எழுத வேண்டும்?*

1 9 1970க்கு பின் பிறந்த நாளைக் கொண்டு தற்பொழுது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் இருக்கும் அனைவரும் பணியில் தொடர தகுதித் தேர்வு தாள் ஒன்று எழுதி வெற்றி பெற வேண்டும்

1 9 2025 முதல் 31 8 2030 வரை பணி ஓய்வு பெறக்கூடிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை

ஆயினும்

அரசாணை 243 இன் படி பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற
அவரவர் இளங்கலையில் பெற்ற பட்டத்தின் அடிப்படையில் தாள் 2
எழுத வேண்டும்

சுருங்க கூறினால்

01.09.1970 க்கு பின்னர் பிறந்து தற்பொழுது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பணியில் தொடர தாள் ஒன்றும்

பதவி உயர்வுக்கு தாள் இரண்டும் எழுத வேண்டும்.

ஐந்தாண்டு பணிக்காலம் உள்ளவர்கள், பணியில் தொடரவும் ஆனால் பதவி உயர்வில் விருப்பமில்லாதவர்களும் எந்த தேர்வும் எழுத வேண்டாம்.
Thursday, February 26, 2026

TET - நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா?

நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா எழுத வேண்டும் எனில் எந்த தாள் எழுத வேண்டும்?

1 9 1970க்கு பின் பிறந்த நாளைக் கொண்டு தற்பொழுது பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் இருக்கும் அனைவரும் பணியில் தொடர தகுதித் தேர்வு தாள் இரண்டை எழுதி வெற்றி பெற வேண்டும் அவர்கள் பதவி உயர்வுக்கு என்று தனியாக எந்த தேர்வும் எழுத வேண்டாம்

1 9 2025 முதல் 31 8 2030 வரை பணி ஓய்வு பெறக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி தேர்வு தாள் இரண்டை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்

மொத்தத்தில் பணியில் தொடரவோ அல்லது பதவி உயர்வு பெறவோ அவர்கள் தாள் இரண்டை மட்டும் எழுதினால் போதுமானது
Thursday, February 26, 2026

02.03.2026 - உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 14.03.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது அரசு

மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.
Thursday, February 26, 2026

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 25.03.2026க்கு ஒத்திவைப்பு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 25.03.2026க்கு ஒத்திவைப்பு!

SCI HS HM case Status - Download her
Thursday, February 26, 2026

கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு*

வரும் மார்ச் முதல் இது அமலுக்கு வரும்; 9646 கெளரவ விரிவுரையாளர்கள் இதன் மூலம் பயனடைவர் எனவும் தெரிவிப்பு
Thursday, February 26, 2026

தமிழக அரசு ஊழியர் வாகனம் வாங்க இனி முன் அனுமதி தேவையில்லை - புதிய டிஜிட்டல் நடைமுறை அமல்







இனி வாகனப் பரிவர்த்தனை தகவல்களை ‘கலஞ்சியம்’ போர்டல் வழியாகவே எளிதாகப் பதிவு செய்யலாம் என்றும், இதற்காகப் பழைய காகித முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான நடைமுறைகளில் இருந்த சிக்கல்களைக் கலைந்து, முழுமையான டிஜிட்டல் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகனப் பரிவர்த்தனை தகவல்களை ‘கலஞ்சியம்’ போர்டல் வழியாகவே எளிதாகப் பதிவு செய்யலாம் என்றும், இதற்காகப் பழைய காகித முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு அரசாங்கம் அரசு ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்களை கையகப்படுத்துதல் மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) போர்டல் அல்லது ‘கலஞ்சியம்’ வழியாக முழுமையான டிஜிட்டல் தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுவரை பின்பற்றப்பட்ட காகித அடிப்படையிலான அறிக்கை சமர்ப்பிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இனி அனைத்து தகவல்களும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வாகனங்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு அவர்களின் மொத்த ஊதியத்தின் மூன்று மாதத் தொகையை விட அதிகமாக இருந்தால், அவை கட்டாயமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சுய அறிவிப்பு பரிவர்த்தனை நடைபெற்ற நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் IFHRMS போர்டலில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக முன் அனுமதி பெற தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு முன் அனுமதி அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களும் பணியாளரின் டிஜிட்டல் சேவை பதிவுடன் தானாக இணைக்கப்பட்டு நிரந்தரமாக சேமிக்கப்படும். இதன் மூலம் சொத்து விவரங்களில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்கள் இந்த கொள்முதல் தனிப்பட்ட சேமிப்புகள் அல்லது சட்டபூர்வமான நிறுவனக் கடன்கள் மூலமே நிதியளிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி, விற்பனையாளர் அல்லது தொடர்புடையவர்களுடன் எந்த வித நலவாசி மோதலும் இல்லை என்பதை அறிவிக்க வேண்டும்.

தவறான தகவல் வழங்குதல், உண்மைகளை மறைத்தல் அல்லது விதிமுறைகளை மீறுதல் போன்ற செயல்கள் தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் (Discipline and Appeal) விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் நடைமுறையால் நிர்வாக தாமதங்கள் குறையும், தகவல் பரிமாற்றம் வேகமாகும், ஊழியர்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும் என அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு, ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், தவறான தகவல்களைப் பதிவு செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை, இந்த நடைமுறையில் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. மொத்தத்தில், நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசுப் பணிகளை வேகப்படுத்தவும், ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் இந்த புதிய 'கலஞ்சியம்' அப்டேட் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Thursday, February 26, 2026

Election 2026 - PO, P1, P2, P3 & Other Officials Duty Payment - Orders




தேர்தல் 2026 - பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு.

Legislative Assembly, 2026 Payment of flat rate allowances to polling counting personnel and others Requirement of funds Particulars - Called for.

👇👇👇👇

Thursday, February 26, 2026

TRB உதவிப் பேராசிரியர் நியமனம் -சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் அறிவிப்பு

TRB உதவிப் பேராசிரியர் நியமனம் - 5 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் அறிவிப்பு - தொடர்ந்து மற்ற பாடங்களுக்கும் அறிவிப்பு வரும் - TRB செய்தி வெளியீடு




Thursday, February 26, 2026

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு


தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிா்வாகவியல் (பி.பி.ஏ.) துறையில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிக்க சட்டம் பயின்ற பேராசிரியா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் சட்டம் குறித்த பாடம் நடத்துகின்றனா்.

சில கல்லூரிகளில் சட்டப் படிப்பில் பட்டம் பெறாதவா்கள், சட்டக் கல்வியைப் பயிற்றுவிக்கும் நிலை உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு பயிற்றுவிக்க சட்டப் பட்டதாரிகளை பேராசிரியா்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு துணைப் பாடம்தான். எம்.காம். பயின்றவா்களே மாணவா்களுக்கு பாடம் நடத்தலாம். அரசு அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரியை திறந்துவிட்டது. ஆனால், சிறந்த ஆசிரியா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. வழக்கு தொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
Thursday, February 26, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2026

திருக்குறள்: 

குறள் 565: 

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்ன துடைத்து. 

விளக்க உரை: 

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

பழமொழி :

Anything valued where it belongs. 

எதுவும் இருக்கிற இடத்திலே இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நாம் துன்பப்படுவது நமது செயல்களின் காரணமாகத்தான் . அதற்கு கடவுள் பொறுப்பல்ல - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட முதல் ரயில் எது?

ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 
Howrah Rajdhani Express

02.தமிழ்நாட்டின் மிக உயரமான மலை சிகரம் எது,?
 
தொட்டபெட்டா -Doddabetta

English words :

rapple -struggle

Contronymn - a word with opposite meaning

தமிழ் இலக்கணம்: 

 "இரண்டு மூன்று நாளில் எல்லாம் சரியாகி விடும்" 

மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க செல்லும் போது இப்படி சொல்வது உண்டு. இது சரியானதா?

இரண்டு மூன்று என்று ஏறு வரிசையில் சொல்லும் போது இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம் என்று பொருள் வந்து விடும்.

பிறகு எது சரியான சொற்றொடர்?

 இரண்டொரு நாளில் சரியாகி விடும்.

என்பதே சரி. இதில் இறங்கு வரிசையில் சொல்வதால் விரைவில் குணமாகி விடும் என்று பொருள் படும்.

அறிவியல் களஞ்சியம் :

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததால், அதன் தாக்கத்தால், பூமியிலிருந்து கோண உந்தத்தை மாற்றி, அதன் சுழற்சியை மெதுவாக்கும் வலுவான அலைகளை ஏற்படுத்தியது. தற்போதைய 24 மணி நேர நாள் என்பது பூமியின் 4.5 பில்லியன் ஆண்டு வரலாற்றில் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சியாகும்.

நீதிக்கதை

 நொண்டி குதிரை

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன. 

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை. ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. 

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். உடனடியாக இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தது அந்தக் குதிரை. 

நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல்வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், என்றது. 

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன. நொண்டிக் குதிரையின் வார்த்தைகளை மற்ற குதிரைகள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது என்று யோசித்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம். 

சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள், என்று பணிவோடு கூறியது குதிரை. சிங்க ராஜா! குதிரையைப் பார்த்து, என்னை எதற்காக சந்திக்க வந்திருக்கிறாய் என்று கேட்டது? அதற்கு நொண்டிக் குதிரை, சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்றபோது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன். 

சிங்க ராஜாவே! நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். ஆகையால் என் நண்பர்களை காப்பாற்ற நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை. தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. உன்னுடைய உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறி குதிரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம். 

நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன. உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் உங்களின் நண்பனான நொண்டிக் குதிரையை நீங்கள் இவ்வளவு நாட்களாக உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். 

ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட இந்த குதிரையின் மனதை இவ்வளவு நாட்களாகப் புண்படுத்தி வந்துள்ளீர்கள். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றது சிங்கம். சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது. 

நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. உன் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டோம். குதிரைகள் அனைத்தும் நொண்டி குதிரையிடம் எங்களை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டன. குதிரைகள் அனைத்தும் நொண்டிக் குதிரையை புரிந்து கொண்டதைப் பார்த்து சிங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

இன்றைய செய்திகள்

26.02.2026

⭐ தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது.SIR ல் விடுபட்ட சுமார் 29 லட்சம் பேர் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

⭐ கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

⭐இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்; அவருக்கு வயது 101. தோழர் நல்லக்கண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே  மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று (பிப். 26) நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

Today's Headlines

⭐ Tamil Nadu's total voters are 5.67 crore. About 29 lakh people who were left out of the SIR have re-registered their names.

⭐ Mini Tidal Park in Kanyakumari at an estimated cost of Rs. 30 crore - Chief Minister laid the foundation stone.

⭐ New software in the Tamil Nadu Police Department - Chief Minister to launch today.

⭐ Senior leader of the Communist Party of India, Nallakannu, passes away; He was 101 years old. Comrade Nallakannu's body is being donated to the Chennai Medical College for the education of students as per his wishes.

🏀 Sports News

🏀 The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. The Super 8 round matches of this series have reached a thrilling stage. In this situation, the Indian team will face the Zimbabwe team in a Super 8 round match today (Feb. 26).

Covai women ICT_போதிமரம்