சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை!!!





All is well that ends well.
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்
பொது அறிவு :
01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?
வெங்காயம் - Onion
02. மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை பட்டத்தை வழங்கியவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Netaji Subhas Chandra Bose
English words :
Carry on- continue to do something
Carry out-perform or complete task
தமிழ் இலக்கணம்:
வயிறு+இல் = வயிறில் அல்ல *வயிற்றில்*
கயிறு + இல் = கயிறில் அல்ல *கயிற்றில்*
கயிறு+ ஐ = கயிறை அல்ல *கயிற்றை*
வீடு + ஐ = வீடை அல்ல *வீட்டை*
ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல
*ஆற்றுப்பக்கம்*
இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று,டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துக்களுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்
அறிவியல் களஞ்சியம் :
மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.
நீதிக்கதை
கருத்துடன் செயல்படு
ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.
அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.
இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.
அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.
பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.
ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய செய்திகள்





A closed mouth catches no flies.
நுணலும் தன் வாயால் கெடும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா
பொது அறிவு :
01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
நீர்யானை - Hippopotamus
02.உலகில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?
சீனா -China
English words :
Ancestral-related to
Bifurcated-divided into two parts
தமிழ் இலக்கணம்:
று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்
எ.கா
1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
தவறு
அடையாறு + இல் = அடையாற்றில்
அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி
2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு
கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் பேராசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
இன்றைய செய்திகள்

