Friday, March 20, 2026
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.
ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...
12 துறைகளின் ஊழியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
மாவட்டம் வாரியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம்
2. Chengalpattu - 11
3. Dindigul - 11
4. Erode - 15
5. Kanniyakumai - 8
6. Kallakurichi - 17
7. Madurai - 7
8. Namakkal - 16
9. Perambalur - 5
10. Pudukkottai - 20
11. Ramanathapuram - 16
12. Ranipettai - 28
13. Theni - 7
14. The Nilgris - 8
15. Trichy - 13
16. Thanjavur - 10
17. Thiruppur - 10
18. Thiruvallur - 10
19. Thiruvarur - 15
20. Thirunelveli - 2
21. Tenkasi - 9
22. Thoothukudi - 6
23. Sivagangai - 10
24. Salem - 19
25. Krishnagiri - 7
26. Thiruvannamalai - 39
27. Cuddalore - 10
28. Nagapattinam - 16
29. Coimbatore - 11
30. Kanchipuram - 10
31. Villupuram - 20
32. Vellore - 14
33. Virudhunagar - 15
34. Mayiladuthurai - 4
35. Karur - 7
36. Thiruppathur - 9
37. Chennai - Nil
38. Dharmapuri - Nil
Total : 447
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026

உலக சிட்டுக்குருவிகள் நாள்
Everything has its own worth.
அதற்கு அதற்குரிய மதிப்பு உண்டு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொன்மொழி :
வன்முறை என்பது மோசமானது. ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது - சுபாஷ் சந்திர போஸ்
பொது அறிவு :
1. உலக அளவில் புளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?
இந்தியா
2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
தாய்லாந்து
English words :
Candidate – A person who contests in an election
Constituency – Area where people vote for a candidate
தமிழ் இலக்கணம்:
எத்தனை, எத்துணை இவைகளின் வேறுபாடு காண்போம்.
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்
எ. கா.
1. எத்தனை நோட்டுகள் வேண்டும்?
2. எத்தனை பழங்கள் விற்பனை ஆயின?
எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்
எ. கா. 1. எத்துணை பெரிய மலை
2. எத்துணை சிறிய பூச்சி
3. எத்துணை ஆண்டு பழமையானது
4. எத்துணை மாதம் ஆகும்?
அறிவியல் களஞ்சியம் :
மனித வயிற்று அமிலம் ரேஸர் பிளேடுகளைக் கரைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
மார்ச் 20
நீதிக்கதை
யானையும் தேனீயும்
ஒரு காட்டில் ஒரு தேனீ வசித்து வந்தது. அந்தத் தேனீக்கு தான் மட்டும் தான் இந்த காட்டில் மிகவும் அழகானவன் என்ற கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
ஒரு நாள் அந்தக் காட்டில் தேனீ பறந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு யானை வந்து கொண்டு இருந்தது.
அப்பொழுது அந்த தேனீ யானையின் காதின் மீது அமர்ந்து யானையை நலம் விசாரித்துக் கொண்டு யானையே நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் , என்னைப்பார் நான் எவ்வளவு மெலிதாக அழகாக இருக்கிறேன் என்னுடைய இந்த இறக்கைகள் என்னுடைய உடம்பிற்கு அழகினை கொடுக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது.
அந்த நேரத்தில் தேனீ யானையிடம் கூறியது, ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் உனக்கு நீண்ட தும்பிக்கையை உள்ளது. எனக்கு நீண்ட வாய் உள்ளது .ஆனால் என் வாயினால் நான் பூவில் உள்ள தேனை உறிஞ்சுவேன். உன்னால் அது முடியுமா என்று கேட்டு கேலி செய்தது.
அந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தை யானை தாங்கிக் கொண்டது. ஆனால் தேனீயால் அந்த காற்றினை தாங்க முடியவில்லை. அந்த காற்றினால் அடித்து செல்லப்பட்ட ”தேனீ ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள், என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று கத்திக்கொண்டே சென்றது.
அச்சமயம் யானை தேனீயை காப்பாற்றலாம் என்று பார்க்கும்பொழுது தேனீ கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டது. யானை அதன் கொழுத்த உடலைக் கொண்டு அங்கிருந்து சிறிது வருத்தத்துடன் நகர்ந்து சென்றது.
கருத்து: கர்வம் கூடாது
இன்றைய செய்திகள்
Thursday, March 19, 2026
3வது குழந்தை பிறப்புக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்து அரசாணை வெளியீடு!!!
பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதம் சற்று கடினம்: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி
ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

Wednesday, March 18, 2026
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை முடிக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

When fortune smiles embrace her.
அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அனைத்துக் கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொன்மொழி :
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - டாக்டர் அம்பேத்கர்
பொது அறிவு :
English words :
opportunity -
a chance to do something that you would like to do, செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு
opponent -a person who disagrees with somebody's actions, எதிராளி
தமிழ் இலக்கணம்:
அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன.
எ. கா. 1. இது பழம் அன்று
இவை பழங்கள் அல்ல.
2. இது காகம் அன்று.
இவை காகங்கள் அல்ல
அறிவியல் களஞ்சியம் :
தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
மார்ச் 18
நீதிக்கதை
பொய்
நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.
அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.
பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.
ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.
தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?
“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா
“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.
“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”
“ஆமாம்”
“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”
“ஆமாம்”
“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”
இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.
ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.
அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.
பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.
இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.
“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.
ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.
“பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு.
பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது.
அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இன்றைய செய்திகள்




