Breaking

Friday, August 23, 2019

இண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்





9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளாக செப்டம்பர் மாத இறுதிக்குள் மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வீரபாண்டியில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் செலவில் 5 ஆண்டுகள் செயல்படக் கூடிய அளவில் அட்டல் டிங்கர் லேப் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.