Subscribe Us

Monday, April 13, 2020

மாதவிடாய் சிரமங்களை போக்கும் இயற்கை வழி


மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் நாள் வரை தினமும் மூன்று முறை புதினா சாறு பருகவேண்டும். 15 மி.லி. புதினா சாறில் சிறிதளவு வெல்லம் கலந்துகொள்ளலாம்.
சிறிதளவு கற்றாழை 'ஜெல்' எடுத்து காலை, மாலை நேரங்களில் சாப்பிட்டாலும் மாதவிலக்கு வலி மறையும். எள்ளுவை தூளாக்கி சிறிதளவு சுடுநீரில் கலந்து தினமும் இரண்டு வேளை பருகினாலும் வலி கட்டுப்படும். உணவு சாப்பிட்ட பின்பே இதனை பருகவேண்டும். மாதவிலக்கு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து இதனை பருகி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment

Popular Feed