கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு*_
எஸ்.சி., ~ எஸ்.டி., கல்வி உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*
திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.*
*இது, மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.*
*சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களில், பலருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.*
*இதையடுத்து, ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:*
*கடந்த, 2018 ~ 19, 2019 ~ 20 கல்வியாண்டில், 9 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ளது.*
*அந்த மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.*
*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, August 29, 2020
Home
கல்விச்செய்திகள்
உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment