குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
அதிகமாக மருந்துகளை சாப்பிடுவது, சோக நிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றாலும் இது வருகிறது.
கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு பொதுவாக பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்கு பசியை தாங்கும் சக்தி உண்டு.
இதற்கு கார்ப்பு சுவையுடைய உணவு வகை நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட வெப்பமான மருந்துகள் நல்ல பலன் அளிக்கின்றன.
No comments:
Post a Comment