Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 5, 2023

10ம் வகுப்புத் தேர்ச்சியா? சமூக நல அலுவலகத்தில் உதவியாளர் வேலை


சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர்(Junior cum Typist )பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதி அலுவலக நேரத்திற்குள் முன்பாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தொகுப்பூதியம்: இதற்கு, மாத சம்பளம் ரூ.12000/-(ரூபாய் பனிரெண்டாயிரம் மட்டும்) என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 2 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பத்தாம்வ குப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

இன சுழற்சி: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதர நிபந்தனைகள்: 32 வயதுக்குட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

: தேனியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி..! விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ ..!

அனைத்து சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 10.11.2023 பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை, மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம், சிங்காரவேலன்மாளிகை, இராஜாஜிசாலை, சென்னை-01 ஆகும்.

No comments:

Post a Comment