JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியில், 1,768 பேரை நியமிக்க, ஜூன் 23ல் தேர்வு நடத்தப்படும் என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
வரும் ஜூன் 23ல், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, trb.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 15க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம், பிளஸ் 2 படிப்புடன், தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் படிப்பான டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., படித்திருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரிவான விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment