Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Monday, April 15, 2024

இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடிச்சா எந்த நோயை விரட்டலாம்



பொதுவாக இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறையில் வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை அல்சர் நோய் .இந்த நோயை குணமாக்க சில இயற்கை வழி முறைகளை இப்பதிவில் பாக்கலாம் 

1. அல்சரால் அவதிப்படுவோர் மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வந்தால் சில நாட்களில் முன்னேற்றம் தெரியும் .

2.அல்சரால் கடுமையான வலியை சந்திப்போர் வெள்ளை குங்கிலியம்50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நான்கு கொதிக்க விட வேண்டும் .,

3.பின்னர் இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்து,அந்த பொடியை தூய பசு வெண்ணெயில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் பாலில் சாப்பிட்டு வர அல்சரை அடிச்சி விரட்டலாம் .

4.அடுத்து அல்சரால் நரக வேதனைப்படுவோர் இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் போதும் அல்சரை சில நாட்களிலேயே இருக்குமிடம் தெரியாமல் விரட்டி விடலாம் .

No comments:

Post a Comment