Search This Blog

Saturday, May 25, 2024

ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு. வெளியான சூப்பர் அறிவிப்பு.!!!

1 comments
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. 

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 comment: