Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 20, 2025

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சிவில் சர்வீஸ் முதல்​நிலை தேர்வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை முடிவடைகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவி​களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்​வாணையம் (யுபிஎஸ்சி) சார்​பில் ஆண்டு​தோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்​வுகள் நடத்​தப்​படு​கின்றன. முதல்​நிலை, முதன்மை, நேர்​காணல் என மொத்தம் 3 கட்டங்​களாக இத்தேர்​வுகள் நடைபெறும். இதில் தேர்​வர்கள் பெறும் மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் இறுதி முடிவுகள் வெளி​யிடப்​படும்.

இந்நிலை​யில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்பு​வதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்​டது. முதல்​நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை​யுடன் (பிப்​ரவரி 21) நிறைவு பெறுகிறது.

விருப்பம் உள்ள பட்ட​தா​ரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பத்​தில் திருத்தம் இருந்​தால் பிப்​ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்​கப்​படும் என்று ​யுபிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News