Breaking

Saturday, March 1, 2025

பள்ளியில் ஆசிரியர், அலுவலகப் பணிமார்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்



சூலூர் விமானப் படை பள்ளியில் காலி யாக உள்ள ஆசிரியர், அலுவலகப் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மார்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமானப் படை பள்ளியின் செயல் இயக்குநர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள அறிவியல், கணிதம், ஆங்கிலம், ஹிந்தி, விளையாட்டு, நூலக ஆசிரியர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை அல் லது இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர் களுக்கு மாத ஊதியமாக ரூ.33 ஆயிரம், இஎஸ்ஐ, இபிஎஃப் சலுகைகள் வழங்கப் படும்.

No comments:

Post a Comment